கால்நடை இனப்பெருக்கம் குறித்த புதிய சட்டம்! தேவையா அமைச்சரே!

udumalai radhakrishnan - 2026

தமிழக அரசாங்கம், குறிப்பாகக் கால்நடைத் துறை அமைச்சகம், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன்  ஒரு புதிய சட்டத்தினை கொண்டு வருவதாக, ஆங்கில பத்திரிகை ஒன்றில் இரு தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. அந்த சட்டத்தின் பெயர் “TAMILNADU BOVINE BREEDING ACT 2019”.

BOVINE – மாடு, எருமை, போன்றவற்றைக் குறிக்கக் கூடிய ஆங்கில சொல்.

1 . எதற்காக இப்படி ஒரு சட்டத்தை அரசு கொண்டு வருகின்றது ?

2 . அந்த சட்டத்தில் குறிப்பாக “ARTIFICIAL INSEMINATION ” குறித்து நிறையச் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்காக தனியே ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. எதற்காகப் புதிதாக ஒரு அமைப்பு ??

ஏற்கனவே தமிழகத்தில் கால்நடைத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. அந்த கால்நடைத் துறை கீழ் இந்த சட்டம் அமல்படுத்தப் படலாம் அல்லவா ? .

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்,

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

1 . வெளிநாட்டு மாட்டு இனங்கள் (Holstein-Friesian Jersey போன்ற மாடுகள்) வைத்து இருப்பவர் யாரும் காளைகள் வைத்து இருக்கக் கூடாது.
விவசாயிகள் பூச்சி காளை வைத்து இருக்கத் தடை செய்யப்பட்டு மாடுகளுக்குச் சினை ஊசி தான் செலுத்தப்பட வேண்டும், என்னும் நிலை உருவாக்கப்படும்.

  1. சினை ஊசி, யார் தயாரிக்க முடியும் ? எப்படித் தயாரிக்க முடியும் ? சினை ஊசி தயாரிப்பவர்கள் அரசின் அமைப்பின் கீழ் பதிவு செய்து இருக்க வேண்டும். இவ் அமைப்பு அவர்களை சோதனைகளுக்கு உட்படுத்த முழு அதிகாரம் வழங்கப் படும், என்றெல்லாம் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்கின்றது.

3 . இதன் நோக்கம், ஆயிரக்கணக்கான கோடிகள் அடங்கிய வர்த்தகம் இதில் அடங்கி உள்ளது. தமிழகத்தில் 80 லட்சம் மாடுகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் வருடம் ஒருமுறை மாடு சினை பிடிக்க 40 ரூபாய் பெற்று அரசு ஊசிகள் தந்து வருகின்றது.

இது தனியார் வசப்படுத்தினால் குறிப்பாகக் காளைகள் பிறக்காத ஊசிகள் இப்பொழுது வந்து உள்ளது. அவற்றினை பிரபலப்படுத்த ஒரே ஒரு தனியார் அமைப்பிற்குக் கொண்டு செல்ல இவ்வேலைகள் நடை பெறுகின்றது.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

கூடிய விரைவில் சினை ஊசி 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்கக் கூடியதாக மாறும். 80 லட்சம் மாடுகளுக்கு 500 ரூபாய் எனில் கணக்கு வைத்தால் இதில் எவ்வளவு பெரிய வர்த்தகம் அமைந்து உள்ளது என அறிய முடியும்.

அடுத்து, பாரம்பரிய கால்நடை. அவற்றிலும் பெரும் வில்லங்கத்தை உருவாக்குகின்றனர். 8000 வருட காலமாக இந்த மாட்டு இனங்களைப் பராமரித்து வந்த மக்களிடம் இருந்து இந்த கால்நடைகளைப் பிரித்து எடுப்பதற்கான முயற்சி தான் இது.

பூச்சி காளை வைத்து இருப்பவர்கள், அரசாங்கத்திடம் பூச்சி காளையை / பொலி காளையை அரசாங்கத்தின் புதிதாக அமைக்கக் கூடிய அமைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.

எதற்காக இந்த சட்டத் திருத்தங்கள் ?

சிறு குறு விவசாயிகளின் சொத்து கால்நடை. அவர்களின் வாழ்வாதாரங்களைக் கெடுத்து அவர்கள் சொத்தை பிடுங்கி யாருக்குத் தாரை வார்த்து வருகிறீர்கள் என நன்கு அறிவோம்.

இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன், விவசாயிகள் அழைத்து (STAKE HOLDER CONSULTATION ) கலந்தாய்வு கூட்டம் நடத்திய பின்னரே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும் .

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிரானது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும் குறிப்பாக விவசாயிகளை வஞ்சித்து வருகின்றது அரசாங்கம். இது உடனடியாக நிறுத்த படவேண்டிய, திரும்பப் பெற வேண்டிய சட்டம்.

– கார்த்திகேய சிவசேனாபதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories