Home Blog Page 5773

ஜெ., வெற்றிக்காக நமிதா திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றம்

namithaஜெ., வெற்றிக்காக இன்று தென்னிந்திய பிரபல நடிகை நமீதா திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

13 – வயது தமிழக சிறுவன் 2 பட்டங்களை பெற்று சாதனை

photos-2013-1-24-6-41-51அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் 13 வயதான பிரணவ் கல்யான் என்ற தமிழக சிறுவன் மைக்ரோ சாப்ட் பட்டம் வென்றுள்ளார். தற்போது கணித மற்றும் அறிவியல் பட்டப்படிப்பை படித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்தது. இதனால், சென்னை மாநகருக்கு மீண்டும் பலத்த மழை ஆபத்து ஏற்படும் என்ற சூழலில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்தது.

இப்போது வங்கக் கடலில் இருந்து அரபிக் கடல் நோக்கி காற்றில் மேகங்கள் இழுத்துச் செல்லப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில், சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​டான்செட்-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

tncetஅண்ணா பல்கலைகழகத்தால் நடத்தப்படும் டான்செட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் மே 2 ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டான்செட் நுழைவுத்தேர்வு இயக்குனர் மல்லிகா, டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்ததாக தெரிவித்தார்.

அண்ணா பல்கலை கழகம் நடத்தும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இதுவரை 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜூன் 11 ம் தேதி எம்.பி.ஏ, எம்.சி.ஏ மாணவர்களுக்கும், ஜூன் 12 ல் எம்.இ, எம்.டெக் மாணவர்களுக்கும் 80 மையங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார். விண்ணப்பங்களை விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம்: நாளை குடியரசு தலைவருடன் சுகாதார துறை அமைச்சர் சந்திப்பு

Medical-Entrance-Examsமருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் குறித்து நாளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா சந்திக்க உள்ளார். மருத்துவ நுழைவு தேர்வு அவசரச் சட்டம் குறித்து பிரணாபிடம் அமைச்சர் நட்டா விளக்கமளிக்க உள்ளார்.

பிசிசிஐயின் இளம் தலைவரானார் அனுராக் தாக்கூர்

243533.3மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாக்கூர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, காலியாகும் பிசிசிஐ செயலாளர் பதவிக்கு, மகராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜய் ஷிர்கேவை தேர்வு செய்ய அனுராக் தாக்கூர் முன்மொழிந்துள்ளார். 41 வயதான அனுராக் தாக்கூர், பிசிசிஐயின் இளம் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

F.I.R பதிவு செய்வது எப்படி?

 

 

By.  Vinodh, Thiruthani Reporter

 

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

 

“இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உட னடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக் கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.

 

உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இக்குற்றங்களில் பாதிக்கப்பட் டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்றபிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.

 

சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்க வாட்டில் இரு வெள்ளைக்கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண் டும்.

 

அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்கு மூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதி செய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்ட த்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.

 

பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, ‘குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்’ ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.

 

ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக்கூடாது. கார்பன்தாள் வைத்து எழுதப்படும்மீதி ஐந்து நகல்களைத்தான் புகார்தாரர், நீதி மன்றம் என விநியோகிக்க வேண் டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படி தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.

சமூக வலைதள வாசிகளே நீங்க சகுனி வாசிகளாமே? என்னமா நீங்க இப்படி பன்னறீங்களே மா.?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிட்டு படு மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
 
இந்த நிலையில், வைகோவை சகுனியாக தவறாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சமூகவலை தளங்களை பயன்படுத்திய பயன்பாட்டாளார்களை சகுனி வாசிகள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஆதரவாளார் எவரோ ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 
மேலும் வைகோவை சகுனியாக தவறாக பதிவிட்வர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அந்த பதிவை வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளார்.
 
வைரலாக பரவிவரும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :-
 
இரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் அரசியல் திருவிழா பல்வேறு கேள்விக்கனைகளுடன் முடிவுகளை தந்து இருக்கிறது.
 
நாங்கள் அமைத்த மாற்று அரசியல் கூட்டணி படுதோல்வியை சந்தித்து உள்ளது.
 
மக்களின் முடிவுகளை மனதார ஏற்றுக்கொள்கிறோம்.
 
இனி மேல்தொடங்கப்போவது கள அரசியல் . இன்று சமூக வலைத்தளங்களில் வைகோ அவர்களை தேர்தல் சகுனியாக சித்திரிக்கும் வலைதள வாசிகளே, இளைய தலைமுறையினரே அவரல்ல. இந்த தேர்தலின் சகுனி. நீங்கள் தான் இந்த அத்தியாயத்தின் சகுனியாக இருக்கிறீர்கள்.
 
விஜயகாந்த் மீது இன்று அனுதாபம் தெரிவிக்கும் நீங்கள் தான் தேர்தலுக்கு முன்னர் அவரை கோமாளியாக சித்தரித்தீர்கள். விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து இருந்து வெற்றி பெற்று இருந்தால் ஊழல் கட்சியுடன் கூட்டணி என்பீர்கள்.
 
நான் சொல்கிறேன்
 
உங்களுக்கு தேவை மாற்று அரசியல் அல்ல. இன்று இணையதளத்தில் பொழுது போக்க ஏதாவது ஒரு விஷயம். லைக் வருமா வராத. சேர் பண்ணுவாங்களா மாட்டாங்களா?..
 
அந்த மனிதன்………..
 
முல்லைப் பெரியாறு அணையை காக்க போராடும் போது நீங்கள் யாரோடு போரடித்து கொண்டு இருந்தீர்கள்?
 
மீத்தேனை விரட்டி அடித்த போது நீங்கள் யாரை விரட்டிக் கொண்டு இருந்தீர்கள்?.
 
சீமை கருவேலையயை அழிக்க சட்ட போராட்டாம் நடத்திய போது எதை புடிங்கி கொண்டு இருந்தீர்கள்?.
 
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை பாதுகாத்து போது நீங்கள் யாரை பார்த்துக்கொண்டு இருந்தீர்கள்?.
 
ஸ்டெர்லை ஆலையை மூட சட்ட போராட்டாம் நடத்தும் போது‌ம் நீங்கள் எதை மூடிக் கொண்டு இருந்தீர்கள்?.
 
தமிழகத்தின் அனைத்து ஏரிகளும், குளங்களும் தூர்வார பட வேண்டும் என ஆனை பெற்ற போது யாருடன் நீங்கள் யாருடன் தூர்வாரிக் கொண்டு இருந்தீர்கள்?
 
மூவர் தூக்கு தண்டனையை அறுத்த போது நீங்கள் யாருடன்அற கதை அளந்து கொண்டு இருந்தீர்கள்
 
மது விலக்கை அமல்படுத்த நடைபயணமாக மக்களை சந்தித்து போது நீங்கள் எந்த பாரில் சரக்கு அடித்து கொண்டு இருந்தீர்கள்.
 
விடுதலை புலிகளை இன்றும் ஆதரிப்பேன் நாளையும்ஆதரிப்பேன் என்று கூறியதற்காக இரண்டரை வருடங்கள் சிறை வாசம் அனுபவித்தாரே, நீங்கள் யாரை சிறை படுத்தி கொண்டுஇருந்தீர்கள்.
 
அந்த மனிதனின் 50 ஆண்டு கால வாழ்க்கையில் ஏதேனும் குற்றம் சொல்ல முடியுமா?…
 
தன் வாழ் நாள் முழுவதும் கள போராட்டங்களிலே வாழ்க்கையை இழந்தவர். கட்சி கொடி காட்டாமல். ஏதேனும் அரசியல் தலைமை உண்டா இந்த தமிழகத்தில்..
 
இத்தனை போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட தலைமை இந்த தமிழகத்தில் உண்டா. இந்த மனிதனின் மீது என்றாவது நீங்கள் அனுதாப பட்டது உண்டா… ஆதரவுக்கரம் நீட்டியதுதான் உண்டா?…
 
பணம் வாங்கினார் கதை அளக்கும் நீங்கள் பல தொழில் அதிபர்களின் பகையை சம்பாதித்து வைத்து உள்ளாரே.. இணங்கி போய் சம்பாதிக்க தெரியாதா?..
 
2ஜீயையும், நில அபகரிப்புகளையும், சொத்துத்குவிப்புகளையும் மறந்த உங்களிடம் மாற்று அரசியல் பேசி பயனில்லை.
 
நீங்கள் எவ்வளவு தூற்றினாலும் அந்த மனிதன் தான் முதல் ஆளாக களத்தில் நிற்பார். மற்றவர்களை போல் அறிக்கை விட்டு கொண்டு இருக்க மாட்டார்.
 
அந்த மனிதன் நிறுத்திய 29 வேட்பாளர் களின் குறிப்புகளை அலசி ஆராய்ங்கள். ஒருவர் மீதும் விரல்நீட்டி குற்றம்சொல்ல முடியுமா உங்களால்?..
 
மக்களுக்காகவே 70 ஆண்டுகள் போராடும் கம்யூனிஸ்ட் களையே ஆதரிக்க வில்லை என்றால் நீங்கள் யாருக்கு பஜனை பாட போகிறீர்கள்?.
 
தாழ்த்தப்பட்ட இனத்தின் விடியாலை வந்த திருமாவளவனையே அரவணைக்க தெரியாத நீங்கள் யாரோடு உறவாட போகிறீர்கள்?.
 
இதை விட தொலைநோக்கான தேர்தல் அறிக்கையை எவராலும் சொல்ல முடியாது. இதை விட மாற்றுக் களம் இந்த தமிழகம் சந்தித்து இருக்காது..
 
மாற்று அரசியல் களத்தில் தோற்றது நாங்கள் அல்ல. நீங்கள் தான்.
 
ஆனால் எங்கள் மாற்று அரசியல் தொடரு‌ம்……
 
என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது.
 
 

ப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது !

 
 
 
+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சாந்தி. எல்.ஐ.சி.யில் காவலாளியாக வேலைபார்த்து வரும் சண்முகவேலின் மகள் விஜயலட்சுமி(வயது 18). அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் பொதுத் தேர்வில் 1,161 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொழிற் பாடப்பிரிவில் இவருக்கு மாநில அளவில் 3-ம் இடம் கிடைத்துள்ளது.r
 
கடந்த 18-ந்தேதி ஒரு டிப்டாப் ஆசாமி சண்முகவேலின் அலுவலகத்திற்கு சென்று தான் ஒரு அரசு பொதிகை சேனல் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது மகளுக்கு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் மூலமாக ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதை நம்பிய சண்முகவேல் தனது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் விருதுநகர் வந்தார். அதே பேருந்தில் விருதுநகர் வந்த அந்த ஆசாமி விருதுநகர் கருமாதி மடத்தில் சண்முகவேல், அவரது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் இறங்கினார். சண்முக வேலையும், அவரது மனைவி சாந்தியையும் நூதன முறையில் ஏமாற்றி விட்டு மாணவி விஜயலட்சுமியை அந்த ஆசாமி கடத்திச் சென்றார். இதுபற்றி சண்முகவேல் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
காவல் நிலையத்திர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவியை கடத்தியவர் ராஜபாளையத்தை சேர்ந்த கண்ணன்(35) என தெரியவந்தது.
 
கண்ணன் மீது ஏற்கனவே விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கு, ராஜபாளையத்தில் நண்பரின் குடும்பத்தினரை கடத்திய வழக்கு உள்பட 51 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு குற்ற வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை காவல் துறையினர் பாளையங்கோட்டையில் ஒரு வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து கண்ணன் தப்பியோடி விட்டார். அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.இந்தநிலையில் கண்ணன், விஜயலட்சுமியை கடத்திச் சென்றுள்ளார்.
 
மாணவியை கடத்தியது கண்ணன்தான் என உறுதி செய்த காவல் துறையினர், அவரது செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த செல்போனை மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் பழுதுபார்க்க கொடுத்திருப்பது தெரிய வந்தது. மீண்டும் செல்போனை வாங்க வரும்போது கண்ணனை பிடிக்க திட்டமிட்ட காவல் துறையினர் முயற்சிக்கு பலன் கிடைத்தது.
 
செல்போனை வாங்க வந்த கண்ணனை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரித்ததில், மாணவி விஜயலட்சுமி அவனுடன் இருப்பது தெரியவந்தது. மாணவி விஜயலட்சுமியை மீட்ட காவல் துறையினர் இருவரையும் விசாரணைக்காக விருதுநகர் அழைத்து வந்தனர். மாணவி விஜயலட்சுமியிடமும், அவரை கடத்திய கண்ணனிடமும் காவல் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் கண்ணன், பணம் பறிக்கும் நோக்கத்தில் மாணவியை கடத்தி திருச்செந்தூருக்கு சென்றதாகவும், பின்னர் இரவு அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்கிவிட்டு காலையில் கார் மூலம் மாணவியுடன் மதுரை வந்த கண்ணன், கார் டிரைவரிடம் செல்போனை திருடியதும், அதனை ரிப்பேர் பார்க்க கொடுத்தபோது தான் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. மாணவியை கடத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
 

தேர்தல் ஆணையத்தின் அங்கீகார ரத்தால் தேமுதிக முரசு சின்னத்தையும் இழக்கிறது !

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி 104 இடங்களில் போட்டியிட்டு படு மோசமான படுதோல்வியை தழுவியுள்ளது . இதையடுத்து தேமுதிக கட்சியின் தேர்தல் அங்கீகாரம் ரத்தாகி முரசு சின்னத்தையும் அந்தகட்சி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
நடிகர் விஜயகாந்தை தலைவராக கொண்ட தேமுதிக 2005ம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலை சந்தித்த விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார். விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். அவரது கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் தோல்வி அடைந்தாலும், மொத்தம் 8.4 சதவீதம் வாக்குகள் பெற்று அனைத்து கட்சியினர் உட்பட அனைவரையுரையும் திரும்பி பார்க்க வைத்தார் விஜயகாந்த்.
 
மேலும் கடந்த 2009ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக 10 சதவீதம் வாக்குகள் பெற்று வாக்கு வங்கியை கூட்டி கொண்டது.
 
அதனால் கடந்த 2011ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மூன்றாம் இடத்தில் பேசக்கூடிய அளவுக்கு பெரிய கட்சியாக மாறியது . மக்களுடன் தான் கூட்டணி, என கட்சி ஆரம்பிக்கும் போது,பேசிய விஜயகாந்த். திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று கூறி திடீரென 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார்.
 
இருந்தபோதிலும் அந்த தேர்தலில் தேமுதிக வாக்கு வங்கி 3 சதவீதம் குறைந்தது. அதன்படி 2011ல் தேமுதிக 7.8 சதவீதம் வாக்கு கிடைத்தது . அதன் பின்னர் கடந்த 2014ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக அந்த தேர்தலில் மேலும் சரிவை சந்தித்து வெறும் 5.19 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது .
 
கடந்த காலங்களில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில் கணிசமான ஓட்டுகளை பெற்று, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தையும் தேமுதிக முரசு சின்னத்தையும் பெற்றது. இந்த நிலையில் விஜயகாந்த் யாரும் எதிர்பாராத வகையில் தொண்ண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் எந்த கருத்தையும் கேட்காமல் தற்போது நடந்து முடிந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார்.
 
விஜயகாந்த் எடுத்த அந்த தவறான முடிவால் தான் தேர்தல் முடிவில் தேமுதிக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத அக்கட்சி வெறும் 2.4 சதவீதம் வாக்குகள் மட்டும் பெற்று விஜயகாந்த் டெபாசிட்டையும் இழந்தார் என தேமுதிக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
 
தேமுதிக தேர்தல் அங்கீகார ரத்து குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுவதாவது:
 
தேசிய அளவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 6 கட்சிகள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகள் மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் ஆகும்.
தேர்தல் தொடர்பாக கூட்டங்கள் நடைபெற்றால், அங்கீகாரம் பெற்ற 9 கட்சி பிரதிநிதிகளையே அழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த முடியும் .
 
தேர்தல் ஆணையத்தால் ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமானால், நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும். சட்டமன்ற தேர்தல் என்றால், 30 தொகுதிகளில் ஒரு தொகுதி வெற்றி பெற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் ஒரு கட்சி அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, தமிழகத்தில் ஒரு கட்சி சார்பில் எத்தனை தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்களோ, அவர்கள் பெற்ற மொத்த வாக்குகளையும் கூட்டி, தமிழகத்தில் மொத்தமாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தில் 6 சதவீதத்திற்கும் அதிகமாக அக்கட்சி வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று பெற்றிருந்தால் மட்டுமே அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும்.
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தமிழகத்தில் 104 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தம் 10,34,384 வாக்குகளே வாங்கி 2.4 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அதனால், தமிழகத்தில் தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சி அஸ்தஸ்து தானாக ரத்தாகி விடும். தேமுதிகவுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட முடியாது.மேலும் தேமுதிகவுக்கு நிரந்தரமாக வழங்கியுள்ள முரசு சின்னத்தையும் அந்த கட்சி இழந்து விடும்.
 
இனி தேமுதிக கட்சி பயன்படுத்தி வரும் முரசு சின்னத்தை அவர்கள் ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு வேண்டுமெனில் தேர்தலில் முரசு சின்னத்தில் போட்டியிடலாம். ஆனால் தேமுதிக போட்டியிடாத தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் முரசு சின்னம் கேட்டாலும் அவருக்கும் முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என்று அவர் தெரிவித்தார் .