ப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது !

 
 
 
+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சாந்தி. எல்.ஐ.சி.யில் காவலாளியாக வேலைபார்த்து வரும் சண்முகவேலின் மகள் விஜயலட்சுமி(வயது 18). அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் பொதுத் தேர்வில் 1,161 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொழிற் பாடப்பிரிவில் இவருக்கு மாநில அளவில் 3-ம் இடம் கிடைத்துள்ளது.r
 
கடந்த 18-ந்தேதி ஒரு டிப்டாப் ஆசாமி சண்முகவேலின் அலுவலகத்திற்கு சென்று தான் ஒரு அரசு பொதிகை சேனல் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது மகளுக்கு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் மூலமாக ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதை நம்பிய சண்முகவேல் தனது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் விருதுநகர் வந்தார். அதே பேருந்தில் விருதுநகர் வந்த அந்த ஆசாமி விருதுநகர் கருமாதி மடத்தில் சண்முகவேல், அவரது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் இறங்கினார். சண்முக வேலையும், அவரது மனைவி சாந்தியையும் நூதன முறையில் ஏமாற்றி விட்டு மாணவி விஜயலட்சுமியை அந்த ஆசாமி கடத்திச் சென்றார். இதுபற்றி சண்முகவேல் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
காவல் நிலையத்திர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவியை கடத்தியவர் ராஜபாளையத்தை சேர்ந்த கண்ணன்(35) என தெரியவந்தது.
 
கண்ணன் மீது ஏற்கனவே விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கு, ராஜபாளையத்தில் நண்பரின் குடும்பத்தினரை கடத்திய வழக்கு உள்பட 51 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு குற்ற வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை காவல் துறையினர் பாளையங்கோட்டையில் ஒரு வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து கண்ணன் தப்பியோடி விட்டார். அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.இந்தநிலையில் கண்ணன், விஜயலட்சுமியை கடத்திச் சென்றுள்ளார்.
 
மாணவியை கடத்தியது கண்ணன்தான் என உறுதி செய்த காவல் துறையினர், அவரது செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த செல்போனை மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் பழுதுபார்க்க கொடுத்திருப்பது தெரிய வந்தது. மீண்டும் செல்போனை வாங்க வரும்போது கண்ணனை பிடிக்க திட்டமிட்ட காவல் துறையினர் முயற்சிக்கு பலன் கிடைத்தது.
 
செல்போனை வாங்க வந்த கண்ணனை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரித்ததில், மாணவி விஜயலட்சுமி அவனுடன் இருப்பது தெரியவந்தது. மாணவி விஜயலட்சுமியை மீட்ட காவல் துறையினர் இருவரையும் விசாரணைக்காக விருதுநகர் அழைத்து வந்தனர். மாணவி விஜயலட்சுமியிடமும், அவரை கடத்திய கண்ணனிடமும் காவல் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் கண்ணன், பணம் பறிக்கும் நோக்கத்தில் மாணவியை கடத்தி திருச்செந்தூருக்கு சென்றதாகவும், பின்னர் இரவு அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்கிவிட்டு காலையில் கார் மூலம் மாணவியுடன் மதுரை வந்த கண்ணன், கார் டிரைவரிடம் செல்போனை திருடியதும், அதனை ரிப்பேர் பார்க்க கொடுத்தபோது தான் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. மாணவியை கடத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
 
ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories