Home Blog Page 5864

108 ஆம்புலன்ஸ் சேவை கே.ஆர் .பி.பிரபாகரன் எம்.பி துவங்கி வைத்தார்

பாவூர்சத்திரம் அருகே பாராளுமன்ற உறுப்பினரின் லட்சிய கிராமமான  பெத்தநாடார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மகிழ்வண்ணநாதபுரத்தில் 108  ஆம்புலன்ஸ் சேவையை  கே.ஆர் .பி.பிரபாகரன் எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டத்தில் 108  ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 25  உள்ளது தற்போது கே.ஆர் .பி.பிரபாகரன் எம்.பி  முயற்சியில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர்  சுற்று வட்டார பொதுமக்களின்  கோரிக்கையினை ஏற்று தற்போது பாவூர்சத்திரத்தில் மக்கள் அவசர காலங்களில் பயன்படும்  வகையில்  பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்  108  ஆம்புலன்ஸ் நிறுத்தபடுகிறது  ,பாவூர்சத்திரம் பகுதியில் ஆம்புலன்ஸ் இருப்பதால் பாவூர்சத்திரம் ,கீழப்பாவூர்,ஆவுடையானூர்,அடைக்கலப்பட்டிணம்,உட்பட சுற்றுவட்டார  இதைப் பயன்படுத்தி கொள்ளலாம்
இதுகுறித்து கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி.கூறியதாவது
கீழப்பாவூர்  ,பாவூர்சத்திரம் சுற்று வட்டார பொதுமக்களின்  அவசர கால உதவிக்கு 108  ஆம்புலன்ஸ்  தேவை என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது இது குறித்து என்னிடம் கோரிக்கை வைத்தனர் மேலும் , இப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்ப்படுகிறது  சில இடங்களில்  வாகன விபத்து நடைபெற்ற போது அந்த இடத்தில் இருந்த நான் ஆம்புலன்சிற்கு சொல்லி ஆம்புலன்ஸ் வரும் வரை இருந்து அவர்களை காப்பற்றியுள்ளேன் ஆனால்  இப்பகுதியில் ஆம்புலன்ஸ்  இல்லாததால் வர தாமதமானது இதுகுறித்து சுகாதாரதுறை அமைச்சரிடம் தெரிவித்தேன்  தற்போது தமிழக முதல்வரின் உத்தரவின் தற்போது இங்கு ஆம்புலன்ஸ் செயல்பாட்டுக்கு வந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு  ஒரு வேண்டுகோளை இந்த நேரத்தில் முன் வைக்கிறேன் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் முதலில் வழி விட்டு ஒதுங்கி செல்லுங்கள் ஒரு உயிரை காப்பற்றிய பெருமை உங்களைச் சாரும் என்றார் மேலும் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்சில் சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று  எடுத்துக் கூறினார்

108  ஆம்புலன்ஸ்   சேவை குறித்து அதிகாரிகள் கூறியதாவது
பிரசவ வலியின் போது பெண்கள் உடனடியாக ஆட்டோ பிடித்து மருத்துவமனை செல்கின்றனர் பொதுவாக பெண்கள் பிரசவவலி வரும் நேரத்தில் ஆட்டோவில் உட்கார்ந்து செல்வது பாதுகாப்பனது அல்ல ஆம்புலன்ஸ்ல்  படுக்கை வசதி உள்ளது மேலும் சிலருக்கு ஆம்புலன்சில் குழந்தையும் பிறந்துள்ளது 108   போதுமான வசதி உள்ளது அவசர காலங்களில் இச்சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் முன்பு ,கீழப்பாவூர் ,பாவூர் சத்திரம் பகுதில் இருந்து அழைப்பு வந்தால் தென்காசி அல்லது சுரண்டையில் இருந்துதான் வரவேண்டும் தற்ப்போது பாவூர்சத்திரத்தில் இருப்பதால் அழைப்பு வந்த 10 நிமிடத்திற்குள் அப்பகுதியை அடைந்து விட முடியும் என்றார்
நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டியன் ,பெத்தநாடார் பட்டி பஞ்சாயத்து தலைவர் இராதா  வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா,   108 மாவட்ட மேலாளர் மஹமது சாதிக் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆழ்வார், லிங்கத்துரை,மேலவைப் பிரதிநிதி கணபதி,ஊராட்சிசெயலர் மதனதுரை,கிளை செயலாளர்கள் அழகேசன்,கணேசன்,பி.எஸ்.என்.எல் ஆலோசனைக்குழு மதியழகன்,அம்மா பேரவை சாமிநாதன் ,மாயாண்டி,செல்லப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்

தமிழக காவல் ஆய்வாளருக்கு சட்டக்கல்லூரி மாணவி எழுதிய காதல் கடிதத்திற்கு பதில் அளித்த காவல் துறை கடைநிலை ஊழியன் !

மதுரை:

புகார் கடிதம் கொடுத்தும் அதைப் பெற்றுக் கொள்ளாத காவல் அதிகாரி ஒருவருக்கு, காதல் கடிதம் கொடுத்துப் பார்க்கிறேன்.. இதையாவது நிராகரிக்க மாட்டீர்கள் என்று சட்டக்கல்லூரி மாணவி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு, கடைநிலை ஊழியன் என்ற பெயரில் ஒருவர் பதில் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வரும் அந்தச் செய்தி இதுதான்…

காதல் கடிதம் என்ற ஸ்வீட் தடவி, கசப்பு மருந்தாக கவிதா என்ற பெயரில் எழுதியுள்ள அந்தக் கடிதத்தின் விவரம்…

காவல் துறை ஆய்வாளர் திரு. …. சட்டக் கல்லூரி மாணவி கவிதா எழுதும் காதல் கடிதம்

அன்புள்ள திரு. ….. அவர்களே.
கடந்த 4 நாட்களாக முகநூல் மற்றும் வாட்ச்சப்புகளில் பரவி வரும் 3 இளைஞர்கள் அதிமுகவில் சட்டத்திற்கு புறம்பாக பேனர்கள் அகற்றும் வீடியோவை நானும் பார்த்தேன். அதைப் பார்க்கும்போது, என் மனத்திற்குள் இருந்ததை அவர்கள் செய்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு பெண் என்பதால் இதை போல செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் இருந்தது. அவர்களின் நியாயமான கோபத்திற்கு தாங்கள் அவர்கள் முறைப்படி அளித்த புகாரை வாங்க மறுத்ததே காரணம் என்று செய்திகள் வாயிலாக தெரியவந்தது.

பொது மக்கள் தரும் புகாரை வாங்கவே நீங்கள் உள்ளீர்கள். அப்படியிருக்க, complaint letter வாங்க மறுக்கும் உங்களுக்கு Love letter கொடுத்து பார்க்கலாம் என்று முடிவு எடுத்து இதை எழுதுகிறேன். மக்களுக்காக வேலை செய்வதை விட்டு விட்டு ஆளுங்கட்சிக்கு அடிமையானதை நினைத்து எனக்கும் உங்கள் மேல் காதல் வந்துவிட்டது. புகார் கடிதத்தை நிராகரித்தது போல் என் காதல் கடிதத்தையும் நிராகரிக்க மாட்டீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும்

கவிதா

***

images districts nandakumar - 2026

நந்த குமாரின் முகநூல் பக்கத்தில்…

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடின்னு தெரியும் ஆனா 1) பொதுஜனம், 1)அரசு, 3) அரசியல்வாதி, 4) ஊடகம்ன்னு நாலுபக்கமும் இடிவாங்கும் காவல் துறையின் ஒரு பிரிவில் பணிபுரியும் கடை நிலை ஊழியனின் வணக்கங்கள்.
 
நீங்களோ, நானோ பிறக்காத 1952 ம் ஆண்டு முதல்,1970 ம் ஆண்டுகளில் போலீஸ் ஐ.ஜி,யாக பணியாற்றியவர் எப்.வி.அருள், கண்ணியத்திற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்று, தமிழக போலீஸ் வரலாற்றில், தனக்கென, ஓர் இடத்தைப் பிடித்தவர். அவர் பணியாற்றிய காலகட்டத்தில் சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார்.
 
முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.
இப்போ உள்ள காலத்துல லோக்கல் கவுன்சிலர்கிட்ட கூட இந்த நேர்மையான குணத்தை காணமுடியாது.
 
நீங்கள் படிக்கும் சட்டக் கல்லூரியையே எடுத்துக் கொள்வோம், உங்கள் கல்லூரி முதல்வர் சரியில்லை என்றால் போராசிரியரும் அலட்சியமாகதான் பாடம் எடுப்பார். உங்களுக்கு சொல்லி தரும் பேராசிரியர் சரியில்லை என்றால். உங்கள் சட்டப்படிப்பின் தரம் எப்படி இருக்கும்.
 
மேயற மாட்ட நக்கற மாடு கெடுத்த மாதிரின்னு ஒரு பழமொழி இருக்கு தெரியும்ன்னு நெனைக்கறேன். ஒரு இன்ஸ்பெக்டர் நேர்மையா ஒரு வழக்கு போடனும்ன்னா எத்தனை இடர்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும் தெரியுமா?
 
ஒன்றியத்துல இருந்து மாவட்டம் வரை, கவுன்சிலர்ல இருந்து எம்.எல்.ஏ. வரை கேஸ் போடாதீங்கன்னுவாங்க, இன்னொரு டிரான்ஸ்பர்க்கு குடும்பம் தாங்காதுடான்னு குடும்பத்தை நெனைச்சு கேஸ் போடாம விட்டா பாதிக்கப்பட்டவங்க கண்ணீரோட கொடுக்கற சாபம் ஒரு பக்கம், நேர்மையா நடவடிக்கை எடுத்து கேஸ் போட்டா டிரான்ஸ்பர்ன்னு ஒரு பக்கம். மரியாதைக்குரிய காவல்துறை பணியை நாய் பொழப்புடான்னு சலிச்சுக்க வச்ச பெருமை பொதுமக்களான உங்களை போன்றவர்களையே சேரும்.
 
நியாயப்படி உங்க லவ் லட்டரை யாருக்கு கொடுக்கணும் தெரியுமா ? குவாட்டருக்கும், கோழிபிரியாணிக்கும், சேலைக்கும், ஆயிரம் ஐநூறு பணத்துக்கும் கடைசில லட்டுல வச்சு கொடுக்கற, நக்கினால் கரையும் தங்க மூக்குத்திக்கும் ஆசைபட்டு, யாருக்கு ஓட்டு போடுறோம், நல்லவரா, கெட்டவரா ஆள் எப்படி இரண்டாவது தடவ எலக்சன்ல நிக்கிறாரே முத தடவ நின்னு என்ன கிழிச்சார்ன்னு யோசிக்கம காசுக்கும், இலவசத்துக்கும் வித்தீங்களே உங்க ஓட்ட (Vote) மக்கள் பிரதிநிதின்னு ஒருத்தருக்கு அவருக்கு கொடுக்கணும்.
கடைசியா…
 
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். -639
-குறள்
 
பொருள் தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.
 
நீங்க நல்ல தலைமையை தேர்ந்தெடுத்தால், காவல்துறை இப்படித்தான் செயல்படனும்ங்கற உங்க அறிவுரைக்கும், லவ் லெட்டருக்கும் அவசியமே இல்லை. என்று நந்தகுமார் அவரது முகனூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார் .

 

 

சற்றே பொிய பதிவு. வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் தொடரலாம் அல்லது தொட்டு ஷேர் செய்தால் பத்து நிமிடத்தில் அனைத்து பிரச்சினைக…

Posted by Nandha Kumar on Wednesday, January 6, 2016

 

நான் கடைசியா போட்ட ஸ்டேட்டஸ் நிறைய பேஜ்ல காப்பி (டிங்கரிங், பட்டி, பஞ்சர் பாத்து ) போட்டுருக்காங்க தப்பில்லை, சொல்ல வந்த…

Posted by Nandha Kumar on Friday, January 8, 2016

விமான நிலையங்களில் தலைவர்கள் பெயர் நீக்கம்: மத்திய அரசு முடிவு

 

புது தில்லி,:

விமான நிலையங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள தலைவர்கள் பெயர்களை நீக்கிவிடலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு அந்தந்த மாநில அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

நாடெங்கும் சில விமான நிலையங்களுக்கு பெயர் சூட்டப்படாமல் உள்ளது. அந்த விமான நிலையங்களுக்கு தங்கள் கட்சி தலைவரின் பெயரை சூட்ட பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். சண்டிகர் நகரில் உள்ள விமான நிலையம் பஞ்சாப், அரியானா இரு மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ளது. அந்த விமான நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங் பெயரை சூட்ட வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு கூறி வருகிறது. ஆனால் அரியானா மாநில அரசு, சண்டிகார் விமான நிலையத்துக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்துத் துறை புதிய கொள்கை ஒன்றை வரையறுத்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு சூட்டப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த மாத இறுதியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்போது, அதில், விமான போக்குவரத்துத் துறையின் கொள்கை குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கவுள்ளது.

தலைவர்களின் பெயர்கள் நீக்கப்படும் பட்சத்தில் அந்தந்த நகரின் பெயரிலேயே விமான நிலையத்தை அழைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் தலைவர்கள் பெயரை அகற்ற சம்மதம் தெரிவித்துள்ளனவாம்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகள் !

 
தமிழகத்தில் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் நடத்த
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை சார்பில் இன்று 07-01-2016 தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ள அனுமதி அளித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
1960 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விலங்குகளுக்கு எதிரான வதைச் சட்டத்தின் படியும், இதைத் தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி கரடிகள், குரங்குகள், புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் மற்றும் காளைகள் ஆகிய விலங்குகளை காட்சிப்படுத்தவோ, அவைகளை பயிற்றுவித்து எவ்வித நிகழ்ச்சிகளையோ நடத்தக் கூடாது.
நாட்டில் சில குறிப்பிட்ட சமூகங்களின் நிகழ்வுகளிலும், சில பராம்பரிய நிகழ்ச்சிகளிலும் காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப், ஹரியாணா, கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காளைகளைப் பயன்படுத்துவதற்கு கீழ்கண்ட விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
1. ஆண்டுதோறும் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும்.
2. மாட்டுவண்டி பந்தயங்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே நடத்த வேண்டும். இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நடத்தக்ககூடாது. ஜல்லிக்கட்டை பொருத்தவரையில், காளை அவிழ்த்துவிடப்படும் இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவுக்குள் அடக்க முயற்சிக்க வேண்டும்.
3. இந்நிகழ்ச்சிகள் ஈடுபடுத்தப்படும் காளைகள் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட வேண்டும். அவைகள் நல்ல உடல் நலத்துடன் இருத்தல் வேண்டும். மேலும் எவ்வித போதை பொருள்களும் அளிக்கக் கூடாது.
4. நிகழ்ச்சிகளின் போது, விலங்குகள் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் மே 7, 2014 ஆம் ஆண்டு வகுத்துள்ள 5 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், நிகழ்ச்சியின் போதும், நிகழ்ச்சிக்கு தயாராகும் போதும் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை மாவட்ட அளவிலான விலங்குகள் வதைக்கு எதிரான குழுவும், விலங்குகள் நல வாரியமும் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் அச்சம் என்பது மடமையடா பாடல்

எஸ்டிஆர் உடன் புதுமுகம் மஞ்சிமா நடிப்பில் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து வெளியான ‘தள்ளி போகாதே’ பாடலின் மாதிரிகள் சமூக வலைதளங்களில் மிக மிக பிரபலமான பாடலாக மாறி வருகிறது.

இந்த பாடல் ரீமிக்ஸ், டப் ஸ்மாஷ், என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. ரசிகர்களின் இந்த ஆர்வத்தை கவனித்த இயக்குனர் கௌதம் மேனன் அவற்றில் சிலவற்றை தேர்ந்து எடுத்து, அவற்றை இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் பகிர்ந்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து ஆர்வமுள்ள, திறமையான இசை அமைப்பாளர்கள் பங்குக் கொள்ள உள்ள போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துக் கொள்ளப்படும்.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்குதாரரான டிவோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஷாகிர் முனீர் இந்த வகை போட்டிகள் ரசிகர்கள் இடையே மேலும் ஆர்வத்தை தூண்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

உரிமை கேட்டுப் போராடிய தலித் மக்கள் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதா ? : வைகோ

 
தலித் மக்கள் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள திருநாள் கொண்டச்சேரி என்ற ஊரில் 40 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் எவராவது இறந்து போனால் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கடலாழி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு பாதை வசதி இல்லாததால், வயல் வரப்பு வழியாகத்தான் உடலைத் தூக்கிச் செல்ல வேண்டும்.
 
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி திருநாள் கொண்டச்சேரியில் குஞ்சம்மாள் (வயது 80) என்பவர் இறந்தபோது, உடலை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல முயன்றனர். அதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
 
இதனால் பதற்றமான சுழல் உருவாகி, காவல்துறை குவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வழுவூர் மக்களின் எதிர்ப்புக்கு பணிந்த அரசு அதிகாரிகள், வயல் வரப்பு தனிப்பாதை வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
 
இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து (வயது 85) இறந்து போனார். இவரது உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வழியில்லாததால் வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர். மறைந்த செல்லமுத்துவின் பேரன் கார்த்திகேயன், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்லமுத்து சடலத்தை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை முழு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
ஆனால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செல்லமுத்து உடலை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தனிப்பாதையில் கொண்டுபோக வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வற்புறுத்தினர். இதனை ஏற்க முடியாது என்று செல்லமுத்து உறவினர்களும், திருநாள் கொண்டச்சேரி மக்களும் போராட்டம் நடத்தியபோது, ஐநூறு காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு, வழுவூர் பொதுப்பாதை வழியாக சடலத்தை கொண்டுபோக முடியாமல் தடை செய்தனர்.
 
மயானப் பாதை உரிமை கேட்டுப் போராடிய தலித் மக்கள் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல் நடத்தி இருப்பதும், உயர்நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்து, செல்லமுத்துவின் உடலை வலுக்கட்டாயமாக தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ள அரசு அதிகாரிகளின் செயலும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
 
தலித் மக்களின் மயானப் பாதை உரிமையை பறித்தது மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய அரசு அதிகாரிகள் மீதும், தலித் மக்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்று வெளியிடுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

தலைநகர் டெல்லியில் கடும் பனி மூட்டதால் இயல்பு வாழ்கை பாதிப்பு

 
தலைநகர் டெல்லியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலை மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 110-க்கும் மேற்பட்ட விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.
.
வடமாநிலங்களில் தாங்க முடியாத அளவுக்கு குளிர் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசியது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிர் வாட்டி வதைத்தது.
காற்றில் ஈரப்பதம் மிகுந்து காணப்பட்டதால் தாங்க முடியாத அளவு குளிரினால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
இன்று அதிகாலை 11 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பத்தினால் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. 10 மீட்டருக்குள் வருபவர்களை கூட பார்க்க முடியாத அளவுக்கு பனி படர்ந்து இருந்தது.
இதனால் டெல்லியில் இன்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து வெளியூர் செல்லும் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில், விமான சேவைகள் தாமதமாக தொடங்கின.

வைகோவின் கைகளை வெட்டுவேன் என பேசிய தி.மு.க. பிரமுகர் கைது

 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2–ந்தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
பணத்திற்காக விலைபோகக்கூடிய வைகோ தி.மு.க.வை விமர்ச்சிப்பதற்கு தகுதியற்றவர். தொடர்ந்து தி.மு.க.வை வைகோ விமர்சித்தால், அவரது சொந்த ஊரான கலிங்கபட்டிக்கு திருமங்கலம் வழியாக அவர் வரும்போது அவரது கைகளை வெட்டுவோம் என்று மிரட்டல் விடுத்து பேசினார்.
அ.தி.மு.க. அரசையும், பெண்களை பற்றியும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக அ.தி.மு.க. சார்பில் சவுந்தர் என்பவர் திருமங்கலம் நகர்காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் தமிழக அரசு மீது வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசுதல், அரசியல் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பெண்களை அவதூறாக பேசுதல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
தி.மு.க. பிரமுகரின் பொதுக்கூட்ட பேச்சின் வீடியோ ஆதாரங்களை சேகரித்த காவல் நிலையத்தினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
 

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : எச். ராஜா

 
மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்துள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், பங்கேற்க வந்த எச். ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:- :
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஜெய்ராம் ரமேஷ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது வேண்டுமென்றே ஜல்லிக்கட்டை குழிதோண்டு புதைக்கும் தீயநோக்கத்துடன் காளைகளை காட்சிப்படுத்து தல் பட்டியலில் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைபெறப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து மத்திய அரசு இனிப்பான செய்தியை தந்திருக்கிறது.
ஆனால் மோடி அரசோ மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று பெரும்முயற்சி மேற்கொண்டது. கடந்த 2014 ஆம் ஆண் டில் பாஜக தலைவரான அமித்ஷா சென்னைக்கு வந்திருந்தபோது,சிவகங்கைமாவட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்களின் 600 கிராமங்களைச்சேர்ந்த மக்கள் கையெழுத்திட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்று அதன் ஆதரவாளர்களுடன் அமித்ஷா விடம் மனுகொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்தவேண்டும் என்ற பொறுப்பை அமித்ஷா என்னிடம் வழங்கினார். அதனால் நானும் உடனே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரசாத்ஜவடேகருக்கு கடிதம் எழுதினேன். அதற்கு அமைச்சரும் உறுதியாக ஜல்லிக்கட்டு வரும் ஆண்டில் அனுமதி வழங்கப்படும் என்று பதில் கடிதம் அனுப்பினார்.
இருப்பினும் சில சிக்கல்கள் தொடர்ந் ததால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு பாரம்பரியமான அடையாளங்கள் குறித்துகேட்டார். அதற்கு தமிழ் இலக்கியங்களில், மகாபாரத்தில் எருது தழுவுதல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என்ற பல்வேறு பெயர்களில் மாடுபிடி பந்தயங்கள் உள்ளதை ஆதாரத்தோடு விளக்கம் தரப்பட்டது. ஜல்லிக்கட்டை வைத்து சிலரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தப்படும் என்றெல்லாம அறிவித்தது வருகின்ற நேரத்தில் இந்தப்போராட்டத்தை வேறு எதற்கா வது வைத்துக்கொள்ளட்டும் என்றே மோடி அரசு ஜல்லிக்கட்டுக்கு இப்போது அனுமதி தந்திருக்கிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறிய ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்றால் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்வாரா? என்றதற்கு தற்போது நான் கேட்டுக்கொள்வதெல்லாம் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதிதரப்பட்டுவிட்டது என்பதால் இளங்கோவன் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதே. அதுதான் கெளரவமானதும், நியாயமானதுமாக இருக்கும். ஜல்லிக்கட்டுக்கு மாடுதுன்புறுத்தப்படுகிறது என்கிற சில அமைப்பினரும், தி.க வீரமணி போன்றோரும் தெரிவிக்கின்றனர்.
மாட்டுக்கறி விருந்து நடத்திய வீரமணி அந்த மாடு தற்கொலை செய்துகொண்ட பின்னரா கறிவிருந்து வைத்தார்?. மாடு எப்படி கொடூரமாக கொல்லப்படுகிறது.எனவே மாடு துன்புறுத்தல்,மிருகவதை போன்ற வாதங்கள் எல்லாம் போலியானது. தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று நீதிமன்ற வழக்குக்குக்கு போகிறார்கள். ஆனால் ஜனவரி 1 புத்தாண்டில் வெடிவெடிக்கூடாது யாராவது வழக்குத் தொடுத்தார்களா?. ஆக கிறிஸ்துவ அமைப்புகள் சிலர் மக்கள் விரோத அரசியல் கட்சி யினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்தான் ஜல்லிக் கட்டு, மஞ்சுவிரட்டு, எருது தழுவுதல், தட்டுவண்டிப்பந்தயம் என்று வெகு விமர்சை யாக நடத்தப்படுகிறது. அதற்கு ஏதுவாக அரசாணை பிறப்பித்த பிரதமர் மோடி, சுற்றுச் சூழல் அமைச்சர் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவிததுக்கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்கு இது தற்காலிக அனுமதி என்று கருதவேண்டிய அவசியமில்லை. அரசாணையில் முழுமையான விவரங்கள் தரப்பட்டிருக்கிறது. இது நிரந்தரமான அனுமதிதான்என்று எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கு: பிப்.2 முதல் இறுதி விசாரணை

புது தில்லி:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதில், தனி நீதிமன்ற தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜன. 8ஆம் தேதிக்கு அப்போது நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்குப் பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது , ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, அன்பழகன், ஜெயலலிதா ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்,. மேலும் தினமும் வழக்கை விசாரிப்பது குறித்தும், பிற வழக்குகளைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப். 2 ஆன் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.