Home Blog Page 6329

சுபாஷ் சந்திரபோஸுக்கு மோடி புகழாரம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, இந்தியாவின் பெருமைக்குரிய மகனான போஸுக்கு அவருடைய வீரம், தைரியம், தேசபக்தி ஆகியவற்றுக்கு தலைவணங்குவதாக மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என பிட்சை கேட்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்

பானிபட் கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பாவச்செயல்; பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என, ஒவ்வொருவரிடமும் நான் பிட்சை கேட்கிறேன்,” என, பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக கூறினார். ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும், 100 மாவட்டங்களில், ‘பெண் குழந்தைகளை காப்போம்; கற்க வைப்போம்’ என்ற பெயரிலான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தை, அரியானா மாநிலத்தில் நேற்று துவக்கி வைத்த, பிரதமர் மோடி பேசியது: narendramodi கருவில் இருக்கும் சிசு, ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து, பெண் குழந்தையானால், அதை அழிக்கும் பாவச் செயலை செய்யும் டாக்டர்கள், இந்த சமுதாயத்திற்கு துரோகம் செய்கின்றனர். இத்தகைய குற்றங்கள், 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதன்படி, மனதால் நாம், 18ம் நூற்றாண்டுக்கு பின்தங்கியுள்ளோம். அப்போதாவது, பிறந்த பெண் குழந்தைகளை சில ஆண்டுகளாவது வளர்த்த பிறகு தான் கொன்றனர். இப்போது கருவிலேயே கொல்வது மிகவும் கொடூரமானது. இந்த நிலை மாற வேண்டும். இந்த நாட்டின் பிரதமரான நான், உங்கள் ஒவ்வொருவரிடம், ‘பெண் குழந்தைகளை வாழ விடுங்கள்’ என, பிட்சை கேட்கிறேன். பெண் குழந்தைகளை அழிப்பது ஒரு விதமான மனநோய். இது, அரியானாவில் மட்டுமின்றி, நாடு முழுவதும் இருக்கிறது என்றார்.

ஐயங்கன் – படத்தின் முன் கதை!

aiyankan “நஸ்மா பிக்சர்ஸ்” சார்பில் அயாஸ்கான் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் “ஐயங்கன்”. இயக்குநர் தனுஷ்பாண்டியன் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது, இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை – பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் நடைபெறுகிறது, படத்தின் நாயகனாக நௌசத்கான் மற்றும் நாயகியாக பூர்ணிமா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். “ஐயங்கன்” என்பது நம்மை சுற்றியிருக்கும் ஒரு அமானுஷ்யம் என்ற பொருளாகும், பெரிய மந்திரவாதியாக வேண்டுமென்ற ஆசையில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இருக்கும் பெண்ணை தேடி அப்பெண்ணை நரபலி கொடுக்க திட்டம்போடுகிறான் ஒரு மந்திரவாதி. அதன்படி ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து அந்த பெண்ணை கடத்திச் செல்ல முயற்சி செய்கிறான் அந்த மந்திரவாதி, படத்தின் நாயகன் நவ்ஷத் கான் பெரிய மேஜிக் மேனாக இருக்கிறார் விலை உயர்ந்த பைக்கை வாங்கிக் கொண்டு அதில் நாயகி பூர்ணிமாவுடன் சேர்ந்து சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலா செல்கிறார்கள் 3 காதல் ஜோடிகள், போன இடத்தில் நாயகி பூர்ணிமாவை அந்த மந்திரவாதி கடத்திவிடுகிறான். மந்திரவாதியால் கடத்தப்பட்ட  தன் காதலியை நாயகன் எப்படி அவனுக்கு தெரிந்த மேஜிக்கை வைத்து மீட்கிறானா இல்லையா? என்பதுதான் மீதி கதை.  

சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் மரணம்: ஒபாமா, மோடி இரங்கல்

saudi-women-advisory1 ரியாத் சவுதி அரேபியா நாட்டின் மன்னர் அப்துல் லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை 1 மணி்க்கு ( சவுதி நேரப்படி) காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில மாதங்களாக அவர், நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த மன்னராக, இப்போது இளவரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல்அஜிஸ் ( வயது 79 ) அவருக்குப் பின்னர் முடிசூட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் சவுதி மன்னராகப் பொறுப்பேற்றவர் அப்துல்லா. ஒபாமா இரங்கல்: சவுதி மன்னர் அப்துல்லா மரணத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இஸ்லாமிய உலகின் மிகப் பெரிய சக்தியாகத் திகழ்ந்தவர் அப்துல்லா. அவரது துணிவான நடவடிக்கைகளும் நட்புறவும் பாராட்டுக்குரியது. அமெரிக்க-சவுதி அரேபிய உறவுக்கு பாலமாகத் திகழ்ந்தவர் அப்துல்லா. அவரது மறைவு வேதனை அளிக்கிறது என்று அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி இரங்கல் சவுதி மன்னர் அப்துல்லா மரணத்துக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், சவுதியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிக முக்கியமான நபரை நாம் இழந்து விட்டோம். அவரது மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவரை இழந்து தவிக்கும் சவுதி மக்களின் நிலை வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

நெல்லையில் தென்மாவட்ட அளவிலான யோகாசன போட்டி

yoga photo 8 வது தென்மாவட்ட அளவிலான யோகாசன சாம்பியன் ஷிப் போட்டி திருநெல்வேலியில் நடந்தது. தமிழ்நாடு யோகாசன சங்கம் பொதுச்செயலாளர். ராமலிங்கம் தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாவட்ட தலைவர் நாதன், லிட்டில் பிளவர் பள்ளிக்குழுமங்களின் தலைவர் மரியசூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அழகேச ராஜா வரவேற்றார். திருநெல்வேலி மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பாலா போட்டியை துவக்கி வைத்தார். அருட்தந்தை அந்தோணி குருஸ் வாழ்த்துரை வழங்கினார். மதுரை, விருதுநகர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தவே கைது நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

Karunanidhi attends a meeting besides his son Stalin at party headquarters in Chennaiஅரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலர் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசிவிட்டு பின்னர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் தயாநிதி மாறன். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது விவகாரத்தில், தயாநிதி மாறன் போதிய விளக்கம் அளித்துவிட்டார் என்று கூறினார்.

ஸ்ரீரங்கம்: திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் திருச்சி சிவா, கே.என்.நேரு ஆகியோர் இருந்தனர். ஆனந்த் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அதிகாரி வருவாய் கோட்டாட்சியர் மனோகரனிடம் தாக்கல் செய்தார். பின்னர், தேர்தல் பிரசாரத்தை ஸ்ரீரங்கம் கோயில் பிரதான கோபுரம் முன்னர் இருந்து திமுகவினர் துவங்கினர். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் முன்னதாக அதிமுக சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ சார்பில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்குமாறு முன்னர் திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டும், அதை நிராகரித்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுகிறார். இன்னும் பாஜக வேட்பாளரை அறிவிக்கவில்லை.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு

மும்பை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.61.56-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 6காசுகள் உயர்ந்து ரூ.61.63-ஆக இருந்தது

சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகள் கடந்து சாதனை

மும்பை இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. இன்று வர்த்தக நேரம் துவங்கியதும் துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது, உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் முக்கிய நிறுவன பங்குகளின் 3வது காலாண்டு நிகர லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் அந்த நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்கத் தொடங்கியுள்ளனர். மேலும் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் காணப்படுகிறது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டி

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் க.அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருவதாகவும் அவர் தெரிவித்தார்.