Home Blog Page 6355

தீபாவளி – கங்கா ஸ்நானம் ஏன்? எப்படி? எப்போது?

தீபாவளி – கங்கா ஸ்நானம் ஏன்? எப்படி? எப்போது?
- 2026

தீபாவளி திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது, பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் “பவுமன்’ என்ற மகனைப் பெற்றாள் பூமாதேவி. அவன் சிறப்பாக தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான். பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்த சக்தியால் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என அவன் வரம் பெற்றான்.


ஆண்டுகள் கடந்தன. நரகாசுரன் தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பூலோகத்தினரை மட்டுமல்ல, தேவர்களையும் கொடுமை செய்தான்.நரகர் எனப்படும் மனிதர்களுக்கு எதிரானவன் என்பதால் “நரகாசுரன்’ என்று பெயர் பெற்றான். கலவரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பெற்ற பிள்ளையென்றும் பாராமல், மகனை அழிக்க முடிவெடுத்தார் விஷ்ணு. அந்தப் பிறவியில் விஷ்ணு கிருஷ்ணனாகவும், பூமாதேவி, சத்யபாமாவாகவும் பூலோகத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு நரகாசுரன் தான் தன் மகன் என்ற விபரம் பிறவி மாறிவிட்டதால் மறந்து விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அவளை தேரோட்டச் சொல்லி, நரகாசுரனை அழிக்க கிளம்பினார். இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் மயங்கி விழுவது போல நடித்தார். தன் கணவரை காப்பாற்ற வேண்டுமென்ற ஆதங்கத்தில், சத்யபாமா நரகாசுரன் மீது அம்பெய்தாள். அவன் இறந்து போனான். அதன்பிறகே அவன் தன் மகன் என தெரிய வந்தது.

நரகாசுரன் இறந்ததும் மக்கள் ஆனந்தமாக வீடுகளில் தீபமேற்றுவதை சத்யபாமா கவனித்தாள். தன் கணவரிடம், “”என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் இவனது மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய் குளியல், என் மகன் இறப்பைப் பொறுத்தவரை புனிதமாக்கப் பட வேண்டும். அன்று கங்காதேவி, ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். எண்ணெயில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும்,” என வேண்டினாள். பெருமாளும் அவ்வாறே வரமளித்தார். இரக்கம் மிக்க பூமாதேவி, அதிகாலை குளிரில் மக்கள் நடுங்கக்கூடாது என்பதற்காக வெந்நீரில் குளிக்கவும் அனுமதி பெற்றுத் தந்தாள்.

சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை முன்னதாக (48 நிமிடம்) குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. நாளை அமாவாசையும் வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.

குளிக்கும் முறை: நல்லெண்ணெயில் இஞ்சித்துண்டு, பூண்டு சில பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம், விரலிமஞ்சள் துண்டு, சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறியதும், வீட்டில் பெரியவர், சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும். குளிப்பவருக்கு ஒருவர் தண்ணீர் எடுத்துக் கொடுக்க அதை அவர் வாங்கிக் குளிக்க வேண்டும். குளியலுக்குப் பின் தீபாவளி பூஜையை முடித்து, சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்பே புத்தாடை அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது சாஸ்திரப்படி உகந்ததல்ல.

தெரிந்த கோவில்கள் – தெரியாத செய்திகள் – தனிச்சிறப்புகள்

ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
 
அவைகளில் சில:
 
1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் – நடராஜ கோயில்
2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.
 
3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.
- 2026

 
 
4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடன் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.


10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர்ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைல்களுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன.மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

இன்னும் தொடரும்…….

வேல் மாறல் விருத்தம்

வேல் மாறல் விருத்தம்
- 2026

 

வேலும் மயிலும் சேவலும் துணை


1 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

2 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

3 சொலற்(கு)அரிய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

4 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்;குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

5 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஷக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

6 சினத்(து)அவுணர் எதிர்;த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

7 துதிக்கும்அடியவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

9 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குiஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

10 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

11 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்ப அவை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

12 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

13 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

14 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

15 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

16 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சுடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

17 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

18 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சு{டும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

19 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

20 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

21 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்ப்அவை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

22 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

23 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகிp வரைக்குiஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

24 திசைக்கியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

25 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

26 தளத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

27 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஷக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

28 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

29 சொலற்(கு)அhpய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

30 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்;குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

31 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

32 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

33 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்;குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

34 சொலற்(கு)அhpய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

35 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

36 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

37 தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

38 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

39 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

40 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஷக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

41 தனித்துவழி நடக்கும்;;என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

42 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅவை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

43 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

44 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகிp வரைக்குiஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

45 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சுடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

46 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

47 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

48 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

49 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

50 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

51 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சுடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

52 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

53 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

54 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகிp வரைக்குஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

55 தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

56 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

57 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

58 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

59 தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

60 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

61 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

62 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

63 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

64 சொலற்(கு)அறிய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம்

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் என்ற நூல் ஸ்ரீஆதிசங்கரரால் வடமொழியிலாக்கப்பட்டது. இது முப்பத்தியிரண்டு பாடல்களால் ஆனது. முடிவில் முப்பத்தி மூன்றாவது பாடலாக நூற்பயன்(பலஸ்ருதி) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோத்திரத்தினால் வணங்கப்படுபவர் திருச்செந்திலதிபனே.
- 2026

நூல் தோன்றிய வரலாறு:
ஸ்ரீசங்கரர் அத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் பரப்பியவர். அதற்காக நாடெங்கிலும் விஜயம் செய்து வருகையில் வடக்கே அபிநவகுப்தர் என்ற ஒரு வேதவேதாந்த வித்வானுடன் தர்க்கம் செய்ய வேண்டி வந்தது. ஸ்ரீசங்கரரின் இளமையிலேயே அமைந்த வேத விஷய ஞானங்களைக் கண்டு, அபிநவகுப்தர் பொறாமை கொண்டார். அதனால் அவர் ஸ்ரீசங்க்ரர் மீது ஏவல் வைத்து தண்டித்தார். பரமேஸ்வரனின் அவதாரமாகவே இருந்த போதிலும், ஸ்ரீசங்கரர் மனித அவதாரத்திற்கேற்ப, ஏவலுக்கு உட்பட்டு, தேகம் வருந்தி, காசநோயால் பீடிக்கப்பட்டு அல்லலுற்றார். இப்படி உடல் நலிவுற்ற காலையில், திருகோகர்ணம் என்ற தலத்தில் தங்கியிருந்த போது, அவருடைய கனவில் ஸ்ரீபரமேஸ்வரன் வெள்ளை விடை மீது காட்சியளித்தார். “சூரபத்மன் முதலிய அசுரர்களை வதம் செய்தபின், அந்த உக்கிரம் தணிய ஜெயந்திபுரத்தில் என் குமாரன் ஷண்முகன் விளங்கி வருகிறான். அவனை தரிசித்தால் உன் பிணி நீங்கும்” என்று உரைத்து, ஆசாரியர் கையில் திருநீறும் வழங்கினார். தூக்கத்திலிருந்து விழித்த ஸ்ரீசங்கரர் தன் கையில் திருநீறு இருப்பதைக் கண்டு அதைத் தன் சிரத்திலும் நெற்றியிலும் அணிந்து கொண்டார். உடனே தன் சித்டியினாலே ஜெயந்திபுரம் அடைந்து ஸ்ரீ ஷண்முகப் பெருமானை தரிசித்தார். அந்தக் கணமே தன் உடல் சுகமடையத் தொடங்குவதை உணர்ந்தார். அச்சமயம் ஸ்ரீஷண்முக நாதனின் கமல பாதங்களை ஒரு நெடிய பாம்பு பூஜை செய்து கொண்டிருப்பதையும் கண்டார். நாகபாம்புக்கு வடமொழியில் “புஜங்கம்” என்று பெயர். நெளிந்து வளைந்து பயமின்றிச் செல்லும் நாகப்பாம்பின் கம்பீரமான நடையையே தன் மனதில் நிறுத்தி சுப்பிரமணிய புஜங்கம் எனற பாடல்களைப் பாடினார். புஜங்க நடைக்கு ஒப்பாகத் தமிழிலே ‘விருத்தம்’ என்ற நடையைச் சொல்லலாம்.

 
1. ஸதா பாலரூபாபி விக்நாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா
விதீந்த்ராதி ம்ருக்யா கணேஸாபிதா மே
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி :

2. ந ஜாநாமி ஸப்தம் ந ஜாநாமி சார்த்தம்
ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம் த
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந் நிஸ்ஸரத்தே கிரஸ் சாபி சித்ரம்

3. மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மநோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்
மஹீவே தேவம் மஹாவேத பாலம்
மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்

4. யதா ஸந்திதாநம் கதா மாநவா மே
பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ
இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம்

5. யதாப்தேஸ் தரங்கா லயம் யாந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்

6. கிரௌ மந்நிவாஸே நரா யே திரூடா:
ததா பர்வதே ராஜதே தே திரூடா:
இதீவ ப்ருவத் கந்த ஸைலா தே திரூடா
ஸ தேவேர முதே மே ஸதா ஷண்முகோ ஸ்து

7. மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முநீந்த்ராநுகூலே ஸூகந்தாகயஸைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜநார்த்திம் ஹரந்தம் ஸரயாமோ குஹம் தம்

8. லஸத் ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸூமஸ்தோம ஸஞ்சந்த மாணிக்ய மஞ்சே
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க்க துல்யப்ராகாஸம்
ஸதா பாவயே கார்த்திகேயம் ஸூரேஸம்

9. ரணத்தம்ஸகே மஞ்ஜூலே த்யந்த ஸோணே
மநோஹாரி லாவண்ய பியூஷபூர்ணே
மந: ஷட்பதோ மே பவக்லேஸ தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

10. ஸூவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமாநாம்
க்வணத் கிங்கிணீ மேகலா ஸோபாமாநாம்
லஸத்தேம பட்டேந வித்யோதமாநாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம்

11. புலிந்தேஸகந்யா கநாபோக துங்க
ஸ்தநாலிங்கநாஸக்த காஸ்மீர ராகம்
நமஸயாம்யஹம் தாரகாரே தவோர:
ஸ்வபக்தாவநே ஸர்வதா ஸாநுராகம்

12. விதௌ க்லுப்த தண்டாந் ஸ்வலீலாத்ருதாண்டாந்
நிரஸ்தேஸூண்டாந் த்விஷத்காலதண்டாந்
ஹதேந்த்ராரி ஷண்டாந் ஜகத்தாரண ஸெளண்டாந்
ஸதா தே ப்ரசண்டாந் ஸ்ரயே பாஹூதண்டாந்

13. ஸதா ஸாரதா: ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு:
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாஸ்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா: கலங்கைஸ்ச ஹீநா:
ஸதா த்வந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்

14. ஸ்புரந்மந்த ஹாஸை: ஸஹம்ஸாநி சஞ்சத்
கடாக்ஷõவலீ ப்ருங்க ஸங்கோஜ்லாநி
ஸூதாஸ்யந்தி பிம்பா தராணீஸஸூநோ
தவாலோகயே ஷண்முகாம்போருஹாணி

15. விஸாலேஷூ கர்ணாந்த தீர்கேஷ்வஜஸ்ரம்
தயாஸயந்திஷூ த்வாதஸஸ் வீக்ஷணேஷூ
மயீஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதிதஸ் சேத்
பவேத் தே தயாஸீல கா நாம ஹாநி:

16. ஸூதாங்கோத்பவோ மே ஸி ஜீவேதி ஷட்தா
ஜபத் மந்தரமீஸோ முதா ஜிக்ரதே யாத்
ஜகத்பார ப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:
கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய:

17. ஸ்புரத் ரத்ந கேயூர ஹாராபிராம:
சலத்குண்டதல ஸ்ரீலஸத் கண்டபாக:
கடௌ பீதவாஸ: கரே சாருஸக்தி:
புரஸ்தாத் மாமாஸ்தாம் புரோரேஸ் தநூஜ:

18. இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தாந் ப்ரஸார்யா
ஹ்வயத்யாதராத் ஸங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்ட காத்ரம் பஜே பால மூர்த்திம்

19. குமாரேஸ ஸூநோ குஹ ஸ்கந்த ஸேநா
பதே ஸக்திபாணே மயூராதிரூட
புலிந்தாத்மஜா காந்த பக்தார்தி ஹாரித்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் தவம்

20. ப்ரஸாந்தேந்த்ரியே நஷ்ட ஸம்ஜ்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ராயாணோந்முகே மய்யநாதே ததாநீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹ த்வம்

21. க்ருதாந்தஸ்ய தூதேஷூ சண்டேஷூ கோபாத்
தஹ ச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸூ
மயூரம் ஸமாருஹ்ய மா பைரிதி த்வம்
புர: ஸக்திபாணிர் மமாயாஹி ஸீக்ரம்

22. ப்ரணம்யாக்ருத் பாதயோஸ் தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயே நேக வாரம்
ந வக்தும் க்ஷமோ ஹம் ததாநீம் க்ருபாப்தே
ந கார்யாந்தகாலே மநாகப்புபேக்ஷõ

23. ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாக: ஸிம்ஹ வக்த்ரஸ்ச தைந்ய:
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மந: க்லேஸமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாம்

24. அஹம் ஸர்வதா துக்க பாராவஸந்நோ
பவாந் தீநபந்து: த்வதந்யம் ந யாசே
பவத் பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாஸயோமாஸூத த்வம்

25. அபஸ்மார குஷ்டக்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த:
பிஸாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே

26. த்ருஸி ஸ்கந்த மூர்த்தி: ஸ்ருதௌ ஸ்கந்த கீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருதயம்
குஹே ஸந்து லீநா மமாஸேஷ பாவா:

27. முநீநா முதாஹோ ந்ருணாம் பக்திபாஜாம்
அபீஷ்ட ப்ரதாஸ் ஸந்தி ஸர்வத்ர தேவா:
ந்ருணாமந்த்யஜாநா மபி ஸ்வார்த்ததாநோ
குஹாத் தேவமந்யம் ந ஜாதே ந ஜாதே

28. களத்ரம் ஸூதா பந்து வர்க: பஸூர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா:
யஜந்நோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரந்தஸ்ச தே ஸந்து ஸர்வே குமாரா

29. ம்ருகா: பக்ஷிணோ தம்ஸகா யே ச துஷ்டா:
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷ்யாக்ரபிந்தா: ஸூதூரே
விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச ஸைல

30. ஜநித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராதம்
ஸஹேதே ந கிம் தேவஸேநாதி நாத
அஹம் சாதி பாலோ பவாந் லோக தாத:
க்ஷமஸ்வாபராதம் ஸமஸதம் மஹேஸ

31. நம: கேகிநே ஸக்தயே சாபி துப்யம்
நமஸ்சாக துப்யம் நம: குக்குடாய
நம: ஸிந்தவே ஸிந்து தேஸாய துப்யம்
புந: ஸிகந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து தத

32. ஜயாநந்தபூமந் ஜயாபார தாமந்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே த
ளஜயாநந்தஸிந்தோ ஜயாஸேக்ஷ பந்தோ
ஜய த்வம் ஸதா முக்தி தாநஸ ஸூநோ தத

33. புஜங்காக்ய வ்ருத்தேந க்லுப்தம் ஸ்தவம் ய:
படேத் பக்தி யுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய த
ஸ புத்ரநாத் களத்ரம் தநம் தீர்க்க மாயு
லபேத் ஸ்கந்தஸாயுஜ்ய மந்தே நர: ஸ: தத

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதவிரசிதம்
ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கஸ்தோத்ரம் ஸம்பூரணம்.

மூக்கன் யார் – அருள்மிகு ஸ்ரீமுத்துக்குமாரஸ்வாமி திருக்கோவில், பண்பொழி, திருநெல்வேலி


மூலவர்    முத்துக்குமாரசுவாமி

நடைதிறப்பு    காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

இடம்    பண்பொழி

முகவரி    அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி – 627 807, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.

தகவல்

[1] இங்குள்ள மூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு.

[2] மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன.

[3] மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள்.

தலபெருமை:

சிவகாமி அம்மாள் சிலை வரக் காரணம்?
இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன. கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன. சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும். அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது.

- 2026

மூக்கன்: இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தை அகழ்ந்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசல் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கிராமப்புறத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள். நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படும். இது திருமலை முருகனின் பெயர் தான். மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரை கூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் காண முடியும். இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக உள்ளது.

திருவிழா    சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம்.

திருக்குவளை கோளிலிநாதர் – நவக்கிரகங்கள் அனைவரும் ஒரே திசையை நோக்கி இருக்கிறார்கள்

திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் பாதையில் 19 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்குவளை. இங்கு நவகிரகங்கள் ஒரு முகமாகத் தென்திசையை நோக்கிக் காட்சியளிப்பது தனிச் சிறப்பு. 
மூவர் பாடிய இத்தலத்தில் வண்டமர் பூங்குழலி சமேத கோளிலிநாதர் அருள்புரிகிறார். கீழ்வேளூரிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் கச்சினத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.

தலைசெங்கோடு சிவன் – பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர

தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கரவனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தலமரம்.  
- 2026

மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியிலிருந்தும்  வேளாங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத் தம்பதியர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கே வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.

என்னது சங்கு வடிவில் இருக்கும் குற்றாலநாதர் கோவில் ஆதிகாலத்தில் விஷ்ணு கோவிலா?

கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம். இதனை சரிசெய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் கேட்டுக்கொள்ள, அகத்தியரும் தென் பகுதிக்கு நடந்துவந்து உலகம் சமநிலை அடையச் செய்தார் என்பது புராணம். அப்படி அகத்தியர் தென் பகுதி நடந்து வந்தபோது, குற்றாலம் பகுதியில் ஒரு கோவில் முதலில் விஷ்ணு கோவிலாக இருந்ததைப் பார்த்தாராம் அகத்தியர். பின்பு அதனை சிவன் கோவிலாக மாற்றினார். அப்படி அகத்தியர் மாற்றிய கோவில் தான் குற்றாலத்தின் பெரிய அருவி அருகிலுள்ள திருகுற்றால நாதர் கோவில். 
- 2026

தென் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற 14 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சித்திர சபையில் தான் சிவன் நடனமாடினார் என்று கூறப்படுகிறது. மற்ற கோவில்கள் எல்லாம் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ தான் இருக்கும். இக்கோவிலின் வடிவம் மட்டும் சங்கு வடிவில் இருப்பது தான் இதன் சிறப்பு.

கர்ப்பரட்சாம்பிகை தெரியும் – பெயர் காரணம் எதனால்?

தஞ்சையிலிருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கருக்காவூர்ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை திருக்கேவிலிலுள்ள ‘முல்லை வனநாதர் சுயம்பு மூர்த்தி லிங்கம்’ புற்று மண்ணினால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 
- 2026

முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்டுள்ள கோவில் இது மட்டும் தான். 
கர்ப்பிணிப் பெண்கள் தங்களது  பிள்ளைப்பேறு சுகமாய் நடைபெற, இங்குள்ள அம்பாளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அதன்படி, கருவிலுள்ள சிசுவுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாமல் பிரசவம் நடைபெறச் செய்வதால் இந்த அம்மனுக்கு ”கர்ப்பரட்சாம்பிகை” எனப் பெயர் உண்டாயிற்று.
குறிப்பு: படம் இந்தக் கோவிலின் படம் அல்ல.

காசி தெரியும், தென்காசி தெரியும், அது என்ன வேலூர் காசி – பெயர் காரணம்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பிராகாரத்தில் உள்ள கங்கா தீர்த்தக் கிணற்றின் அருகில் ங்கா பாலாறு ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. பின்புறம் பைரவர் சந்நதி   கொண்டுள்ளார். 
- 2026
காசி போன்றே சிவலிங்கம், கங்கா தீர்த்தம், பைரவர் மூன்றையும் இங்கு தரிசிக்கலாம். எனவே இந்த சந்நதி வேலூர் காசி எனப்படுகிறது.