முன்னாள் அமைச்சர்கள் மயம்!
ஊழல் நாத்தம் தாங்கலே
பிரதம ஜோஸியக்காரர்
நமஸ்தே… என்ன ராகுல்ஜி சொல்றீங்க? நான்தான் அப்பவே நிறைய படிச்சிட்டேனே!
இல்ல இல்ல… நான் சொன்னது ஜோஸியப் புத்தகங்களை…
அப்படின்னா? புரியலியே!
அதான் இப்போ நல்ல நேரம், நட்சத்திரம், ராசி, ஹோரைன்னு எல்லாம் பாக்குறாமாதிரி தெரியுதே! இதுதான் ஊழலை ஒழிக்க நல்ல நேரம்னு பஞ்சாங்கம் பாத்து சொல்லியிருக்கீங்களாம்..! எனக்கும் பார்த்து சொல்லுங்க. .. எது நான் என்ட்ரி ஆகுறதுக்கு நல்ல நேரம்னு!
மகா மானஸ்டர்ர்ர்ரு
யாரைச் சொல்றீங்க…
எல்லாம் இந்த அண்ணா ஹசாரே ஆளுங்கதான்! என்னல்லாம் பேசிட்டிருந்தாரு…. இப்ப பாருங்க காங்கிரஸை எதிர்க்க மாட்டேன்னு ஒரே போடா போட்டுட்டாரு! நம்ம திக்விஜய் சிங் ஒரு ஆளோட வாய்க்கே தாக்குப் பிடிக்க முடியாம ஜகா வாங்குறாங்களே! நாம எல்லாரும் சேர்ந்து ஆரம்பத்திலயே இப்படி செஞ்சிருந்தா..? இவங்கள்லாம் வந்திருக்கவே மாட்டாங்களே!
அதானே! மானஸ்தன்லாம் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாதுன்னு சும்மாவா சொல்லி வெச்சாங்க! நாம எத்தனை பேர பாத்துருப்போம்ம்ம்ம்!
ஹா… ஹா… இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க… ஊழலா அப்படின்னா? லோக்பாலா… அப்படின்னா? ஊழல் எதிர்ப்பு இயக்கமா அப்படின்னா? இப்படில்லாம் கேக்கப் போறாரு பாருங்க…
ஏழு மலைகள் என்னென்ன?
ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை சொல்லில் அடங்காதது.
நாராயணன் எழுந்தருளியுள்ள திருமலையில் ஏழு மலைகள் அடங்கியுள்ளன. அவை சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகியவை. திருமலை, திரேதா யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும், கிருத யுகத்தில் நாராயணாத்ரி என்றும் துவாபரயுகத்தில் நரசிம்மாத்ரி என்றும் கலியுகத்தில் திருவேங்கடாத்ரி என்றும் பெயர் பெற்றுள்ளது.
சேஷாத்ரி: ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் ஒரு சமயம் சண்டை ஏற்பட்டது. அதில் ஆதிசேஷன் வெற்றி பெற்றான். அவனுக்கு கர்வம் ஏற்பட்டது. தான் இல்லாவிட்டால் பகவானுக்கு படுக்கை ஏது? தூக்கம் ஏது? என்றும் நினைக்க ஆரம்பித்துவிட்டான். இந்த கர்வம் அடங்கிய பின் பகவானிடம் தன் தவறை ஒப்புக்கொண்டான். கர்வத்தை விட்ட ஆதிசேஷன் பெயரால் சேஷாத்ரி என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது.
அஞ்சனாத்ரி: அஞ்சனாதேவி அனுமாரின் தாயார். அவள் திருப்பதியிலுள்ள ஆகாச கங்கையில் நீராடி தவமிருந்து ஆஞ்சநேயரை பிள்ளையாக அடைந்தாள். அவள் பெயரிலேயே அஞ்சனாத்ரி என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது.
நாராயணாத்ரி: நாராயண முனிவர் என்பவர் பிரம்மாவின் யோசனைப்படி இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து தவமியற்றினார். விஷ்ணு பிரத்யட்சமாகி வேண்டிய வரம் கேட்டபோது அவர் “”உலகிலுள்ளவர்கள் வருத்தம் தரும் யோக மார்க்கத்திலிருந்து உன்னைக் காண சக்தி இல்லாதவர்கள். ஆதலால் தாங்கள் எவ்வுயிருக்கும் அருள் சுரந்து காட்சி அளிக்க அகலாது இங்கேயே எழுந்தருளி இருக்க வேண்டும்” என்று கோரினார். பகவானும் அதற்கு இசைந்தார். இந்த இடத்திற்கு “நாராயணாத்ரி’ என்ற பெயர் ஏற்பட்டது. பகவானே இந்த இடத்தில் தானே வந்து கோயில் கொண்டதால் இது ஸ்வயம்வக்த ஷேத்திரமாகும்.
விருஷபாத்ரி: விருஷபன் என்று ஒரு அரசன். அவன் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தான். திருமால் பிரத்யட்சமானார். “”உன்னை எல்லாரும் பொல்லா சுவாமி என்கிறார்களே. உன்னோடு போர் புரிய ஆசை. அந்த வரம் தா” என்றான். இந்த வரம் காரணமாக போர் நடந்தது. ஏழுமலையானின் நாமமே அவனை பயமுறுத்திவிட்டது. அவர் சக்கரத்தை எடுத்தவுடன், “”சுவாமி நீ பொல்லாத சுவாமிதான். என் பெயரால் இம்மலையின் பெயர் ஏற்பட வரம் அருள்” என்றான். இதனால் விருஷபாசலம் என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது. இதுவே விருஷபாத்ரி என்று அழைக்கப்படுகிறது.
கருடாத்ரி: கருடனையும் ஞாபகப்படுத்தும்படி கருடாசலம் என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. நாராயணனுடைய மலையானதால் நாராயணாத்ரி. திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயருண்டு. ஆகவே ஸ்ரீநிவாஸாத்ரி. இம்மலை கேட்ட வரங்களை எல்லாம் கொடுக்கும் என்று நம்பி “சிந்தாமணிகிரி’ என்றும் அழைக்கிறார்கள்.
வேங்கடாத்ரி: திருமலையில் ஏறியதுமே பாவங்கள் பஸ்பமாகி விடுகின்றன. “வே’ என்றால் பாவங்கள். “கட’ என்றால் கொளுத்தப்படுதல் என்று பொருள். இப்படி பாவங்களைப் போக்குவதால் வேங்கடாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.
நீலாத்ரி: நீலன் என்ற வானர வீரன் தவம் செய்த மலை. எனவே இம்மலைக்கு நீலாத்ரி என்ற பெயர் அமைந்தது.
இந்த ஏழுமலையிலும் எழுந்த ருளும் கோவிந்தனை புரட்டாசியில் சரணடைந்து புண்ணியம் பெறுவோம்.
நாட்டின் அதிகார அமைப்பு!?
ம்ம்ஹூம் தொறக்க முடியாது… எங்க அய்யா திட்டுவாவ…
ஏய்… எஞ்செல்லம்ல… எங்கண்ணுல்ல… சாக்லெட்லாம் வாங்கித்தாறன்… யே சொல்லுடே… ஐஸ்க்ரீம் வேணுமா? வாங்கியாறம்லே… கொஞ்சம் கதவைத் திறவேன்…
ம் ஹூம் தொறக்க முடியாது! எங்க அய்யா சொல்லிருக்காவ… நீங்க சொல்லுதீயல்லா… இந்த மாதிரில்லாம் சொல்லிக்கிட்டு பூச்சாண்டிங்க வருவாங்க… அவங்க என்ன சொன்னாலும் சரி… என்ன செஞ்சாலும் சரி… கதவ மட்டும் தொறந்துடாதன்னு சொல்லிருக்காவ…
ஏய் நீ இப்ப்டில்லாம் பேசினா உன்னை போலீசு அங்கிள் கிட்ட பிடிச்சுக் குடுத்துடுவேன்…
அது சரி! நீங்க புடிச்சிக் குடுக்கலைன்னாலும் எங்க அய்யாவும் அதத்தான் செய்வாரு! அதுனால தொறக்க மாட்டேன்!
யப்பா… நாங்கல்லாம் சிபிஐகாரவுக… அதான்ம்லே ஒங்கிட்ட கெஞ்சி கேக்கோம்… சமத்தா கதவத் தொறந்து விடுதியா?!
மாட்டேன் போ! எங்க அய்யாவும் அதத்தான் சொன்னாவோ! யலேய் சிபிஐகாரவுக வருவாக… கெஞ்சிக் கேப்பாக; ஆசை வார்த்தை சொல்லி கேப்பாக… ஆனா கதவ மட்டும் தொறந்துடாதன்னு நேத்து மட்டுமா சொன்னாவோ…. ஆறு மாசமா சொல்லிட்டிருக்காவல்லா! ஐங் நானா தொறந்துவிடுவேன்… வேற சோலிய பாருங்க.. போங்க!
யலேய் தம்பி… அர மணி நேரத்துக்கு மேல ஆயிட்டுடே! அமைச்சர் வீடா இருந்தா நாங்க வருவமா? முன்னாள் அமைச்சர் வீட்டுல ரெய்டுக்கு வந்ததுக்கே இப்டில்லாம் கெஞ்ச வேண்டிருக்குடே! எங்க நெலமைய கொஞ்சம் யோசிச்சி பாத்தியா? மீடியாகார பயலுவ வேற கேமராவ மேலயும் கீழயுமா ஆட்டிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் அலையுதாவ! ஏ… கொஞ்சம் தயவு பண்ணி கதவ திறந்து விடுப்பா… இல்லன்னா…
இல்லைன்னா…. என்ன செய்வீய?
அ…..ழு….. து….டு..வேன்…
சரி சரி… கண்ணை துடைச்சிக்கிங்க! ஒங்களைப் பாத்தா பாவமா இருக்கு! நான் தொறந்து விடுதேன்! ஆனா எங்க அய்யாட்ட என்னய மட்டும் மாட்டி விட்டுடாதீய… சரியா!!!
அவ தாரமே! அட பாரமே!
பின்னே…
தீவிரவாதத்தை ஒழிக்க எடுத்த அவதாரமாம்
இதற்கு மேல் நோ கமெண்ட்ஸ்…
இப்படியும் பேச வரும்!?

…….
ஒரு காலத்தில் நாங்கள் ஒருவரை மலையாளி என்று மதிப்போடு கூறி மகிழ்ந்தோம். ஆனால், பதிலுக்கு அவர்கள் எங்களை தெலுங்கர் என்று கேவலமாக, அரசியல் நாகரிகம் இல்லாமல், மனிதப் பண்பே இல்லாமல் கொக்கரித்து வக்கிரமாக மகிழ்ந்தார்கள். நான் சவால் விடுகிறேன்…. என்னை தமிழன் இல்லை என்று நிரூபிக்கத் தயாரா? நான் இந்த மண்ணின் மைந்தன் என்று நிரூபிக்கிறேன். அந்த சும்மையார் சும்மாவாச்சும் கூறிச் சென்றால் நாங்கள் சும்மாயிருப்பதா? நேற்று கேள்வி கேட்டார்கள்… பிறப்பு இடச் சான்று அளிக்கும் அதிகாரி கையொப்பம் இட்டுத் தந்த பிறப்பிடச் சான்றெல்லாம் இருக்கிறதா என்று! இவர்கள் இப்படி எல்லாம் கேட்கிறார்கள் என்றவுடன், இந்தப் பொய்யை, அதுவும் ஒரு பொறுப்பில் இருக்கும் ஒருவர் கூறும் பொய்யை பொய்யாக்க வேண்டும் என்பதற்காகத்தான்… இன்று அதிகாலை மேலோகத்தில் இருக்கும் அந்த அமரரான அதிகாரியிடம் இருந்து மைண்ட் வேவ் நவீன டெக்னாலஜி மூலம் இதோ… இப்போதுதான் வரவழைத்து உங்களிடம் எல்லாம் காட்டுகிறேன் அந்த பிறப்பிடச் சான்றிதழை!

