February 20, 2026, 10:51 PM
27.3 C
Chennai

ராமர் கோவில் கட்ட… ‘தங்க’ செங்கலே தருகிறோம்: இளவரசர் யாகூப்!

ram mandir - 2026

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் தங்க செங்கல் வழங்கப்படும்: இளவரசர் யாகூப் !

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டால் தங்கச் செங்கல் வழங்குவதாக மொகலாய வம்சாவளியைச் சேர்ந்த இளவரசர் யாகுப் ஹபீபுதீன் டூசி தெரிவித்தார்.

அயோத்தியில் ராம் மந்திர் கட்டப் போகிறதென்றால், கோயில் கட்டுவதற்கு தங்கச் செங்கல் வழங்கப் போகிறோம். நான் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் … அதைக் கேட்குமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறோம். ஏனென்றால் வக்ஃப் வாரியம் அயோத்தி நிலத்தின் உரிமையாளர்கள் அல்ல!

இளவரசர் யாகூப் ஒரு செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறினார்.

“மசூதி 1529 ஆம் ஆண்டில் அங்கு கட்டப்பட்டது. இது இராணுவம் மற்றும் கமாண்டோக்களுக்காக கட்டப்பட்டது, அது தனியார் சொத்து. நாங்கள்தான் நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர்கள்.

PrinceYakub - 2026உச்ச நீதிமன்றம் கூட 2005ல் நான் ஷாஜகானின் பேரன் என்று ஒப்புக் கொண்டது என்று இளவரசர் யாகூப் கூறினார்.

மேலும், அந்த நிலத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் அவரிடம் கொடுத்தால், அதை அவர் இந்திய அரசிடம் ஒப்படைப்பாராம்.

“எங்கள் வழக்கை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டு உரிமையை வழங்கினால், அயோத்தியில் ராம் மந்திர் கட்டுவதற்காக மொத்த சொத்துக்களை இந்திய அரசுக்கு தருவேன், கோயில் கட்டுவதற்கு தங்க செங்கல் தருவேன்” என்று அவர் கூறினார்.

yakup 1 - 2026

நீதிபதி எஸ் ஏ பாப்டே, திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்துக்கு வராததால், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் திங்கள் நேற்று ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் உரிமை வழக்கை விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற வட்டாரங்களில் கூறியபடி, நீதிபதி பாப்டே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச், ஆகஸ்ட் 6 முதல் இந்த வழக்கை தினசரி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன், திங்கள்கிழமை நேற்று, தனது வாதங்களைத் தொடர திட்டமிடப்பட்டிருந்தார்.

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகியோருக்கு சமமாக பிரிக்க உத்தரவிட்ட 2010ம் ஆண்டின் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories