.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெய் குமார். துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய மகள் சுதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (18 வயது) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றினார். இந்த விவகாரம் சுதாவின் தந்தை ஜெய் குமாருக்கு தெரியவர எல்லா தகப்பனும் செய்யும் செயலை அதாவது மகளை கண்டித்துள்ளார். இதனைப் பொறுக்காது ஆத்திரமடைந்த சுதா, தந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
தன் கொலை திட்டம் குறித்து சங்கரனிடம் சுதா கூறியுள்ளார். அப்பாவை கொலை செய்தால் மட்டுமே நாம் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று சொன்னதும் முதலில் மறுத்த சங்கரன், பின்னர் சுதாவின் தொடர் நச்சரிப்பில் சம்மதித்தார். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார் அருமை மகள் சுதா. அவர் எதிர்பார்த்தது போலவே, சம்பவத்தன்று ஜெய குமார் தன் மனைவி, மகனை, திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பாண்டிச்சேரி அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
வீட்டில் ஜெய் குமார் தனியாக இருக்க, அவருக்கு சுதா தூக்க மாத்திரை கலந்த பாலை கொடுத்துள்ளார். ஜெய் குமாரும் அதை வாங்கி குடித்துள்ளார்.
சிறிது நேரத்தில் ஜெய்குமார் மயங்கி விழ, சுதா தன் காதலனுடன் சேர்ந்து, கத்தியை எடுத்து ஜெய்குமாரை சராமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். மேலும், ஆத்திரம் தீராததால், துடிதுடித்துக் கொண்டிருந்த ஜெய் குமாரை அப்படியே இழுத்துச் சென்று பாத்ரூமில் வைத்து தீ வைத்துள்ளனர்.
இதனால் ஜெய் குமார் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார். அபிசுதாவின் வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அருகாமையில் உள்ளவர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், பாதி எரிந்த நிலையில் கிடந்த ஜெய்குமாரின் சடலத்தை மீட்டனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், சுதாவும், அவருடைய காதலனும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.
காதலை கண்டித்ததற்காக பெற்ற தந்தையையே குத்தி கொன்று தீ வைத்து கொன்ற மகளின் இச்செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.

