January 23, 2025, 6:25 AM
23.2 C
Chennai

ஈரோட்டில் மே 17ல் கோட்சேவுக்கு சிலை: அகில பாரத இந்து மகா சபா

00088001 அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது., இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டு இந்துக்களிடமே கொடுக்க வேண்டும், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வருடத்திற்கு ரூ 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது. இருப்பினும் அறநிலையாத்துறை அதன் பணியை சரியாக செய்வதில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டு கொடுக்க போராட்டம் நடத்தினோம். மீண்டும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த உள்ளோம். ஆதலால் தமிழக அரசு எங்களது கோரிக்கையை செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கையில் எடுத்து அக்காரியங்களை செய்வோம் என தெரிவித்தார். மேலும் திராவிட கழகம் இந்து விரோத போக்கினை தொடர்ந்து செய்து வருகிறது. தாலி அறுப்பு போராட்டம், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் என்னும் மாவட்டம் தோறும் செயல்படுத்தி வருகிறது. திராவிடர் கழகத்தினை தமிழக அரசு கண்டிப்பதோடு, தண்டிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் வீரமணியை கைது செய்ய வேண்டும் எனவும், வருகின்ற மே மாதம் 17 ம் தேதி கோட்சே சிலை ஈரோட்டில் வைக்க உள்ளோம். இது எங்களது உரிமை. உயர் நீதிமன்றமே 1966 ல் கூறி இருக்கிறது. கோட்சேவின் சிந்தனைகளையும், சித்தாங்களையும் வெளிக்கொணர்வதில் எந்த தடையும் இல்லை என்று கூறி உள்ளது. ஆதலால் கண்டிப்பாக அவரது சிலையை நிலைநிறுத்துவோம் என அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் தெரிவித்தார்.

ALSO READ:  சபரிமலையில்... காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.