
பிரதமர் மோடி, வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், பஹ்ரைன் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
எத்தனை இந்தியர்கள், பஹ்ரைன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. அதேநேரத்தில், வெளிநாடுகளில் 8,189 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சவுதியில் 1,811 இந்தியர்களும், ஐக்கிய அரபு எமீரேட்சில் 1,392 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பஹ்ரைன் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
மனித நேய அடிப்படையில், பஹ்ரைன் அரசு, அந்நாட்டு சிறையில் உள்ள 250 இந்திய கைதிகளை விடுதலை செய்துள்ளது.
இதற்காக பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
முக்கியமாக பஹ்ரைன் அரசு, அவரது குடும்பத்திற்கு, மனித நேய நடவடிக்கைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.



