பியூஷ் மானுஷை கைது செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா!

piyush manush - 2026

பாஜக., அலுவலகத்துக்கு வந்து தாக்குதல் தொடுத்த பியூஷ் மானுஷ் உடனடியாக கைது செய்யப் பட வேண்டும் என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

புதன் கிழமை நேற்று மாலை 5 மணி அளவில், சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் என்ற பெயரில் இயங்கும் பியூஷ் மானுஷ் என்பவர், பாஜக., அலுவலகத்துக்குச் சென்று, பிரச்னையில் ஈடுபட்டார். தொடர்ந்து பாஜக. தொண்டர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டார். இதனால் அவர் தாக்குதலுக்கு இலக்கானார்.

இந்நிலையில், பியுஷ் மானுஷ் செயல் குறித்த பின்னணியை பலரும் அலசி வருகின்றனர். முதல் நாள் சேலத்தில் ஸ்டாலின் சென்றதும், அதற்கு முந்தைய நாள் திமுக., குறித்து வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் என்பவர் மீது திமுக., புகார் அளிக்க அதைத் தொடர்ந்து டிவிட்டர் பதிவுகளில் திமுக.,வை பலரும் விமர்சனம் செய்ததும், தொடர்ந்து இந்த விவகாரத்தை திசை திருப்ப பியூஷ் மானுஷ் விவகாரத்தை திமுக., கிளப்பச் செய்ததும், பியூஷ் மானுஷ் தாக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் டிவிட்டர் பதிவிட்டதும் என பின்னணியை அடுக்குகின்றார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்நிலையில், திமுக., அலுவலகத்திலும் இது போல் கேள்விகளை முன்வைக்க வேண்டும் என்கின்றனர். அத்துடன் பியூஷ் மானுஷ் உடனடியாக கைது செய்யப் பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

2G ஊழல் இந்தியா முழுவதும் நாறியபோது, எவனாவது அறிவாலயம் போய் கேள்விக்கேட்டிட்டு உயிரோடு திரும்பியிருப்பான் என நினைக்கறீங்க..

ஜனநாயக அமைப்பில் ஒரு கட்சி அலுவலுகத்திற்க்கு தகறாரு செய்கின்ற நோக்கத்தோடு செல்வதே தவறு..

அவரவர் கருத்துகளை வெளிப்படுத்த சமூக ஊடகங்கள் உள்ளன..
பொதுக் கூட்டம் போட்டு பேசுதல், போராடுகிற உரிமை இருக்கையில் மாற்று கட்சி அலுவலகத்திற்கு செல்வது நகஸல் அதாவது பாராளுமன்ற நடைமுறைகளை பின்பற்றாத ஆயுதப் போராட்ட, வழிமுறையாகும்.. – என்று கருத்து பதிவு செய்கின்றனர்.

அதே நேரம், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில், தனக்கு திமுக., வினர் செய்த அராஜக செயலையும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பியூஸை உடனடியாக கைது செய்து வழக்கு தொடுக்கவேண்டும்! என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

Topics

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories