“திமுக.,வினர் தங்கள் குழந்தைகளுக்கே தமிழ்ப் பெயர் சூட்டுவதில்லை..!” – கருணாநிதிக்கு இப்போ கேட்காதே ‘துரை’..!

duraimurugan mindvoice - 2026

தமிழை காக்க பாடுபடுவேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கும்போது, திமுகவினர் தங்கள் குழந்தைகளுக்குக் கூட தமிழில் பெயர் சூட்டுவதில்லை என்று துரை முருகன் கூறியிருக்கிறார். இதனை – சபாஷ்…. சரியான போட்டி என்று தனது டிவிட்டர் பதிவில் கிண்டல் அடித்திருக்கிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

திமுக., தலைவராக இருந்தவர் மு.கருணாநிதி. திமுக.,வில் தலைவராக இருந்த அண்ணாதுரைக்கு அடுத்து, அடித்துப் பிடித்து, சில பல குயுக்திகளைக் கையாண்டு, நியாயமாக தலைவர்களாக வேண்டியவர்களை எல்லாம் ஓரங்கட்டி, தானே அடுத்த தலைவராக முடி சூட்டிக் கொண்டார். அவரும் தன் பெயரை தட்சிணாமூர்த்தி என்ற வடமொழிப் பெயரில் இருந்து, கருணா நிதி என்ற வடமொழிப் பெயருக்கு மாற்றிக் கொண்டார்.

பின்னர் அடுத்த தலைமுறை திமுக., பட்டத்துக்கு தன் மகன் ஸ்டாலினை கொண்டு வந்தார். அவரது பெயரும் தமிழ்ப் பெயராக வைக்கவில்லை. கருணா நிதிக்குப் பின்னர், ‘நிதி’ என்பது, வட நாட்டவர்கள் வைத்துக் கொள்வது போல், அவரது குடும்பத்தின் குலப் பெயர் ஆனது. தயாநிதி, கலாநிதி என்று அடுத்த கட்ட உறவினர்களுக்கும் பெயர் சூட்டப் பட்டது. உதயநிதி, தயாநிதி என்று அடுத்த கட்ட வாரிசுகளுக்கும் ‘நிதி’ திரட்டி வைத்தார் கருணாநிதி.

duraimurugan - 2026

இந்நிலையில், திமுகவினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை என்று நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ஆதங்கப்பட்டார் திமுக பொருளாளர் துரைமுருகன்! இது, கருணாநிதியைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி என்றும், அவர் இல்லாத நிலையில், சமாதிக்குக் கேட்கும் வகையில் துரை முருகன் கேட்டிருப்பதாகவும் விமர்சிக்கின்றனர் சமூகத் தளங்களில்!

மேலும், அனைத்து ஓட்டல்களிலும் வட மாநிலத்தவர் பணியில் இருப்பதால் எந்த மொழியும் கற்றுக்கொள்ளலாம் என்றார் துரை முருகன்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியனின் திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்ற நூல் வெளியீட்டு விழாவில்தான் இது போன்ற கருத்தை உதிர்த்தார் துரை முருகன்.

இந்த விழாவில் வீரமணி, ஆ.ராசா, சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்களை எல்லாம் உடன் வைத்துக் கொண்டு, இந்த விழாவில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தற்போது, திமுகவினர் வீடுகளிலே கூட தமிழில் பெயர் வைப்பதில்லை என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்.

ஓட்டல்களில் வட இந்தியர்களே அதிகமாக வேலை செய்வதாகவும் அவர்களுக்கு ஹிந்தியில் பேசினால் மட்டுமே புரிவதாகவும் கூறிய துரைமுருகன், அதனால் எந்த மொழியும் கற்றுக் கொள்ளலாம் என்றார்.

தமிழகத்தில் இருக்கும் ஓட்டல்களில் போய் சாப்பிடுவதற்குக் கூட ஹிந்தி கற்க வேண்டிய மோசமான சூழலுக்கு தமிழகம் தள்ளப் பட்டிருக்கிறது. ஓட்டல்களில் போய் வேலை செய்ய தமிழர்கள் இல்லையா அல்லது ஓட்டல்களில் ஹிந்திக்காரர்களை மட்டுமே வேலைக்கு சேர்க்கிறார்களா என்ற கேள்வி அங்கிருந்தவர்களுக்கு எழுந்தது.

மேலும், வழக்கம் போல் ஆங்கிலேயருக்கு சாமரம் வீசும் திராவிட கலாசாரத்தின் கொத்தடிமைத்தனத்தை வெளிப்படுத்திய துரை முருகன், இங்கு வெள்ளையர்கள் வரவில்லை என்றால் சோமாலியா மக்கள் போல் இருந்திருப்போம் என்றும், வெள்ளையர்கள் தான் ஜனநாயகத்தை சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் கூறினார், பரம்பரை முதலாளிகளின் குடும்பக் கட்சியான திமுக.,வின் பொருளாளர் துரைமுருகன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories