ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தால் திருமலையில் விஐபி பிரேக் தரிசனம்!

IMG 20191022 WA0015 - 2026

பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால் திருமலையில் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட் …

ஸ்ரீவாணி டிரஸ்ட்க்கு 10,000 நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட் … திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூடுதல் ஈவோ ஏவி தர்மாரெட்டி அறிவிப்பு.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் கலியுக பிரத்யக்ஷ தெய்வம் திருமலை ஸ்ரீ பாலாஜியை அருகில் சென்று கண்ணார தரிசிக்க வேண்டும் என்று விரும்பும் பக்தர்களுக்கு டிடிடி நற்செய்தி கூறி உள்ளது.

எந்த மந்திரி எம்எல்ஏ எம்பி அரசு அதிகாரியின் சிபாரிசும் தேவையின்றி ஸ்ரீவாணி ட்ரஸ்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தினால் விஐபி தரிசன டிக்கெட் ஒதுக்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

டிரஸ்டுக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் கொடுக்கிறது இந்த புதிய திட்டம்.

ஹிந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பாகமாக எஸ்சி எஸ்டி மற்றும் பிற பின் தங்கிய மக்கள் வசிக்கும் இடங்களில் ஸ்ரீ பாலாஜி ஆலயங்கள் கட்டுவதற்கும் புராதன ஆலயங்களை பாதுகாப்பதற்கும் ஸ்ரீவாணி டிரஸ்ட் மூலம் நன்கொடைகள் ஏற்படுகின்றன என்று கூடுதல் ஈவோ ஶ்ரீஏவி தர்மாரெட்டி தெரிவித்தார்.

Tiruppathi - 2026

இதில் ஒரு பாகமாக நன்கொடை அளிக்கும் கொடையாளிகளுக்கு ப்ரேக் தரிசன டிக்கெட் கொடுக்கும் வழிமுறையை தொடங்கி உள்ளதாக கூறினார்.

இதற்காக கோகுலம் விருந்தினர் இல்லத்தில் ஆன்லைனில் சிங்கிள் விண்டோ கௌண்டர் திறந்து உள்ளதாக கூறினார்.

நவம்பர் முதல் வாரத்தில் இதற்கான தனி ஆப் தொடங்கப் போவதாகவும் அதன்பின் உலகெங்கும் உள்ள பக்தர்கள் ஆன்லைன் மூலம் நன்கொடை அளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீவாணி டிரஸ்ட்க்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிக்கும் பக்தருக்கு ஒரு பிரேக் டிக்கெட் ப்ரிவிலேஜாக ஒரு முறை மட்டுமே அளிப்போம் என்றும் அந்த பக்தர் 500 ரூபாய் கட்டி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையாளர்கள் ஒரு ரூபாய் முதல் எத்தனை ரூபாய் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம் என்றும் பத்தாயிரம் ரூபாயில் இருந்து டிடிடி அளிக்கும் சேவைகளை ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார்.

tirupathi therottam - 2026

10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பிரேக் தரிசன டிக்கெட் தொடங்கி ரூபாய் 99 ஆயிரத்துக்கு 9 டிக்கெட் வரை பக்தர்கள் பெறும் வசதி உள்ளது.

ஒரு லட்சத்திற்கு மேல் நன்கொடை அளிப்பவர்கள் டிடிடி இதற்கு முன்பு வெளியிட்டுள்ள ஸ்கீம்கள் அளித்து வருவது போலவே பலன்கள் பெற முடியும் என்றும் விவரித்தார்.

தற்போது ஒரு முயற்சி போல தொடங்கியுள்ளோம் பக்தர்களின் அபிப்பிராயம் பெற்று கோட்டா நிர்ணயிப்போம். ஒரு மாதம் முன்பே இந்த கோட்டாவை அறிவிப்போம் என்று விவரித்தார் தர்மாரெட்டி.

முதன்முதலில் சென்னையைச் சேர்ந்த கும்முடி ராமையா என்பவர் ரூ 40,000 நன்கொடை அளித்து 4 பிரேக் டிக்கெட் பெற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories