கோதாவரியில் இருந்து ‘ராயல் வசிஷ்டா’ படகை வெளியில் எடுத்த ‘தர்மாடி சத்தியம்’ குழு!

IMG 20191022 WA0019 - 2026

பகீரதப் பிரயத்தனம் செய்து கோதாவரி நதியில் இருந்து ‘ராயல் வசிஷ்டா’ படகை வெளியில் எடுத்தனர் ‘தர்மாடி சத்தியம்’ குழுவினர்.

‘ஆபரேஷன் ராயல் வசிஷ்டா” இறுதியாக சக்ஸஸ் ஆனது.

பல நாட்கள் காத்திருந்த பின் தம் உறவினர்களின் உடல்கள் கிடைக்குமா கிடைக்காதா என்று ஏக்கத்துக்கு பிறகு படகு இன்று வெளியில் வந்தது.

கிழக்கு கோதாவரி மாவட்டம் கச்சலூரு அருகில் கோதாவரியில் மூழ்கிய படகினை பல தடங்கல்களுக்குப் பிறகு வெளியே எடுத்து விட்டார்கள்.

IMG 20191022 WA0016 - 2026

தர்மாடி சத்யம் குழுவினர் இந்த அரிய செயலை செய்து உள்ளனர். முழுகிப் போன ராயல் வசிஷ்டா படகு முழுவதும் துவம்சம் ஆன நிலையில் கிடைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை டைவர்கள் உதவியோடு மீண்டும் ஒருமுறை நீரின் அடிப்பகுதியில் இருந்து கயிறு கட்டி வெளியே இழுக்க முயற்சித்தார்கள். இம்முறை முயற்சி பலனளித்தது.

பலமுறை மழை வந்த தடை ஏற்பட்டாலும் விடாமல் முயற்சித்தார்கள்.

ஜேசிபி உதவியோடு இரும்புக் கயிறுகளை வெளியே இழுத்தார்கள். அதனால் நீரின் மேல் படகு வந்தது. படகில் 5 சடலங்கள் கிடந்தன.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
IMG 20191022 WA0017 - 2026

‘ பாலாஜி மரைன்’ அமைப்பைச் சேர்ந்த தர்மாடி சத்தியம் குழுவினர் இதற்கு முன் இருமுறை படகை வெளியே எடுக்க முயற்சித்தார்கள்.

படகு மூழ்கிய சில நாட்களிலேயே முயன்றபோது அது பலனளிக்கவில்லை. வெள்ள ஓட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே எடுக்கும் வேலைகளை நிறுத்தி வைத்தார்கள்.

சென்ற வாரத்தில் மீண்டும் இருமுறை முயற்சியைத் தொடர்ந்தார்கள். ஆனால் இரண்டு மூன்று நாட்களாக படகை எடுப்பதில் பல தடங்கல்களை எதிர்த்து எதிர்கொண்டார்கள்.

அதனால் காகிநாடாவிலிருந்து கேப்டன் ஆதிநாராயணாவின் உதவியை நாடினார்கள்.

IMG 20191022 WA0018 - 2026

அதேபோல் ஸ்கூபா டைவிங் டீம் கூட களத்தில் இறங்கியது.

படகை வெளியே எடுப்பதற்கு தர்மாடி சத்தியம் விசாகப்பட்டினத்தில் இருந்து டைவர்களை வரவழைத்தார். அவர்களின் உதவியோடு கோதாவரியில் இறங்கி இரும்புக் கயிறுகளால் கட்டி படகை இழுக்க முயற்சித்தனர். ஆனால் அதுவும் இயலவில்லை.

தர்மாடி சத்யம் டீம் மீண்டும் இன்று செவ்வாயன்று முயன்று வெற்றியை பரிசாக பெற்றது.

செப்டம்பர் 15-ஆம் தேதி கோதாவரியில் மூழ்கிய படகு அக்டோபர் 22-இல் வெளியில் வந்தது. இந்த விபத்தில் 39 பயணிகள் பலியாகினர். 26 பேர் நதியில் நீந்தி உயிர் தப்பினர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

38 நாட்களாக நீரில் ஊறிய 5 சடலங்கள் இன்று படகிலிருந்து மிதந்து வெளியே வந்தன. இன்னும் 12 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories