சுவாமி சிலைகள் உடைக்கப்படும் சிசிடிவி காட்சிகள்.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

statues destroyed - 2026

ஈரோடு அருகே சிவகிரி பகுதியில் சுவாமி சிலைகள் உடைக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகிரி அருகே தொப்பபாளையம் பகுதியில் நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை அடித்து உடைத்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிலைகள் உடைக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் காளியண்ணன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு,திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் தலைக்கவசம், முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 7 பேர் கோயில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் கைகளில் கடப்பாரை, கம்பிகள் கொண்டு சுமார் 5 அடி உயரமுள்ள காளியண்ணன் சிலைகளை சேதப்படுத்தி அடித்து உடைத்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் பரவியதால் அந்தக் கோயிலைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் நேற்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சிவகிரி, சந்தைமேடு, அம்மன்கோயில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சக்திகணேஷ், மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜ், கோட்டாட்சியர் முருகேசன், வருவாய் கோட்ட அலுவலர் கவிதாஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

இது இரு தரப்பு மோதலாகக் கூறப் படுகிறது, இருப்பினும், தெய்வங்களாக வ்ழிபடப் படும் ஒரு தரப்பினரின் சாமி சிலைகளை அடித்து உடைத்து வெறிச் செயலில் ஈடுபட்ட செயல் பெரும் அதிர்ச்சியையும் அருவெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories