அட இந்த பசுவுக்கு என்னா ஞாபக சக்தி..?!

Published:

cow 1 - 2026

பசு மாட்டின் கட்டவிழுந்த ஆக்ரோஷம் இது. கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு பசுமாடு ஒரு மனிதரை தாக்கியது.

15 நாட்கள் முன்பு அதே இடத்தில் சாலை விபத்தில் அதன் கன்றுக் குட்டி பலியானது. அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி சின்னக் கன்று இறந்து போனது.அந்தக் கன்று குட்டியின் உடலை ஒரு மனிதர் தன் ரிக்சாவில் எடுத்துச் சென்றார்.

இந்நிலையில், வியாழக்கிழமை அந்த ரிக்சா ஓட்டுநர் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்த போது அவரை அடையாளம் கண்டு கொண்ட பசு மாடு, அந்த மனிதரை ஆக்ரோஷமாக எதிர்கொண்டு முட்டிமோதித் தாக்கியது!

அங்கிருந்தவர்கள் பசுவின் தாக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றி, அந்த மாட்டை விரட்டிவிட்டனர் .

பின்னர் தான் அவர் இரு வாரங்களுக்கு முன்னர், தாம் அந்த பசுமாட்டின் கன்றினுடைய உடலை எடுத்துச் சென்றதை நினைவு கூர்ந்துள்ளார். தன் கன்றை எடுத்துச் சென்றவரை நினைவு வைத்துக் கொண்டு பசு தாக்கியது குறித்து உள்ளூர் மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img