பாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்!

Published:

bottle message - 2026

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒன்றே! கடல் மட்டுமே மனிதர்களைப் பிரிக்கிறது. கடலே இல்லாவிட்டால் நாடுகள் என்ற சொல்லே ஏற்பட்டிருக்காதோ என்னவோ …?!

இந்தச் செய்தியைப் படித்தால் நீங்களும் இதுபோல் யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் நகரில் வசிக்கும் மாக்ஸ் ரெடென்பர்க் (19) என்ற இளைஞன் 10 ஆண்டுகளுக்கு முன் கடலில் ஒரு பாட்டிலை வீசி எறிந்தான்.

தனக்கு ஆப்பிள், கடற்கரை, வானவியல் என்றால் மிகவும் பிடிக்கும் என்று ஒரு காகிதத்தில் எழுதி ஒரு பாட்டிலுக்குள் வைத்து கடலில் எறிந்தான். ஒரு வேளை அந்த பாட்டில் யாருக்காவது கிடைத்தால் தனக்கு தெரிவிக்கும்படி கூறி தன் முகவரியையும் அதில் எழுதி வைத்தான்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸில் உள்ள ராக்போர்ட் கடற்கரையில் 2010 ஆகஸ்ட் 21-ஆம் தேதி பாட்டிலை வீசி எறிந்தான். ஒன்பது ஆண்டுகள் கழித்து 2019 அக்டோபர் 10ம் தேதி அந்த பாட்டில் ருபோயின் என்ற மனிதருக்கு கிடைத்துள்ளது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அதாவது ஒன்பது ஆண்டுகளில் அந்த பாட்டில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது. பாட்டிலின் உள்ளே இருந்த செய்தியைப் படித்த ருபோயின்… மாக்ஸுக்கு பாட்டில் கிடைத்த விவரத்தை தெரிவித்தார்.

” ஹலோ…! உங்கள் பாட்டில் அக்டோபர் 10ஆம் தேதி தென் பிரான்ஸிலுள்ள ‘காண்டின் , மிமிஜான்’ இடையில் உள்ள ஒரு கடற்கரையில் எனக்குக் கிடைத்தது” என்று தெரிவித்தார்.

மனிதர்களின் இடையே உள்ள தொடர்பை இந்த பாட்டில் தனக்கு நினைவு படுத்தியதாக டுபோயின் உணர்ச்சிவசப்பட்டு கூறினார். மாக்ஸ் அந்த மெசேஜைப் படித்து பின் தன் கடந்த காலத்தை நினைவு படுத்திக் கொண்டு ஆனந்தத்தில் துள்ளினான்.

இதை அடுத்து, இந்த விவரங்களை தன் ட்விட்டரில் போஸ்ட் செய்தான். அவனது மலரும் நினைவுகளும் வித்தியாசமான முயற்சியும் பலரது பாராட்டுகளையும் பெற்றது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img