சென்னையில் மதுபோதையில் பேருந்தில் தகராறு செய்த 2 பேர் குறித்து இளம்பெண் காவலன் ஆப் மூலம் தகவல் அளித்ததையடுத்து, காவல்துறையினர் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் இளம் பெண் ஒருவரிடம் 2 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளனர்.
தொடர்ந்து தகராறு செய்து வந்ததால், அந்த இளம் பெண் ஒருவர் காவலன் ஆப் மூலம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இளம் பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் பேருந்தை நிறுத்தி 2 இளைஞர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் அனில்குமார் மற்றும் ஆனந்தராஜ் என்பதும், சட்டப்படிப்பு முடித்தவர்கள் என்பது தெரிய வந்தது.