ஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை! அதிர்ந்த டாக்டர் மணமகள்! அப்படி என்னதான் கேட்டாரு..?!

iasofficer dowry - 2026

மணமகன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மணமகளோ டாக்டர். இவர்களது திருமணம் இரு தினங்களுக்கு முன், அதாவது பிப்.26 அன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் சுவாரஸ்யமாக பேசப்பட்டது, ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மணமகளிடம் கேட்ட வரதட்சணைதான்! இதைக் கேட்டு மணமகள் அதிர்ந்து விட்டாராம்! மணமகள் அதிரும் வகையில், அப்படி என்ன கேட்டுவிட்டார் அவர்?

பிப்.26 அன்று, பேராவூரணியில் நடைபெற்றது, திருநெல்வேலி துணை ஆட்சியராக இருக்கும் சிவகுரு பிரபாகரன் திருமணம்.

இவர், பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல சிரமங்களுக்கு இடையே ஐஏஎஸ் அதிகாரியானவர். தான் ஐஏஎஸ் முடித்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாராம்! அவருக்கு படித்த பெண்கள் IAS, IPS, IRS என பதவியில் இருக்கும் தகுந்த பெண்கள் மணமகளாய் வரத் தயாராக இருந்தும், தாம் ஒரு மருத்துவரையே திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தாராம்!

எனவே தனது மகனின் உறுதிக்கு ஏற்ப, அவர் பெற்றோரும் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாகத் தேடி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு தகுந்த பெண் கிடைத்த நிலையில், இவரது நிபந்தனைகளைக் கேட்டதும், அந்தப் பெண்கள் மறுத்து ஓட்டம் பிடித்தனராம்.

இந்தத் தேடலில், கடைசியாக சென்னை நந்தனம் கல்லூரி கணித பேராசிரியரின் மகள் Dr கிருஷ்ணபாரதி MBBS இந்தத் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதை அடுத்து, திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், பிப்.26 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்ன என்றால், அவருடைய நிபந்தனையை இந்தப் பெண் ஏற்றுக் கொண்டது தான்! அப்படி என்ன நிபந்தனை என்கிறீர்களா?

தன்னை திருமணம் செய்துகொள்ளும் மருத்துவர் வாரத்தில் இரண்டு நாள் தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும் இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே! இந்த நிபந்தனையே தனக்கான வரதட்சணை என்று இவர் கேட்டுள்ளார்.

இந்த நிபந்தனைக்காகவே இவரது திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்ததாகவும், தற்போது இவர் கேட்ட வரதட்சணையை ஏற்றுக் கொண்டு, மணமகள் திருமதி கிருஷ்ண பாரதி சிவகுரு பிரபாகரன் என ஆகி உள்ளார் என்றும் திருமண வீட்டில் மகிழ்ச்சியுடன் பலரும் கதைத்துக் கொண்டிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories