கொடுத்துச் சிவக்கும் கரங்கள்… பசி தீர்க்கும் பணியில் தில்லை வாழ் தீட்சிதர்கள்!
ரேஷன் கடைகளுக்கு ரயில் மூலம் சிதம்பரம் வந்து இறங்கிய அரிசியை இறக்கி வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 60 பேர் உணவு கிடைக்காமல் தவித்து வந்தனர்.
லாக்டவுன் சூழ்நிலையில் அந்த நேரத்தில் உணவு இன்றி தவிப்பதாக தகவல் அறிந்து சிதம்பரம் நடராசர் கோவில் தீட்சிதர் பாஸ்கர் குழுவினர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 60 பேருக்கும் வடை பாயாசத்துடன் உணவு தயார் செய்து கொண்டு போய்க் கொடுத்தனர்!