பாஜக., தலைவர் முருகனைச் சந்தித்ததால்… திமுக., துணை பொதுச்செயலர் விபி துரைசாமியின் பதவி பறிப்பு!

vp duraisamy met bjp leader murugan
  • திமுக துணைப் பொதுச்செயலாளராக அந்தியூர் ப.செல்வராஜ் நியமனம்!
  • வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!
  • தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்த நிலையில் நடவடிக்கை!
  • வி.பி.துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமனம்:
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பாஜக., தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலருமான வி.பி.துரைசாமி பதவிப் பறிப்புக்கு ஆளாகியிருக்கிறார். அவருக்கு பதிலாக, அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்!

வி.பி.துரைசாமி, திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். ராசிபுரத்தைச் சேர்ந்தவரான வி.பி.துரைசாமி தமது ஊரைச் சேர்ந்த முருகன் பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதை வரவேற்று வாழ்த்து தெரிவிக்க தமது மகனுடன் கமலாலயம் சென்றார்.

இது கட்சிக்குள் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. அண்மைக் காலமாகவே விபி துரைசாமி கட்சி மீது அதிருப்தியில் இருந்தார் என்று கூறப் படுகிறது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் விரும்பிய இடத்தில் இவருக்கு சீட் ஒதுக்கப் படவில்லை. இதனால் மன வருத்தம் ஏற்பட்டு, கட்சி நடவடிக்கைகளில் இருந்து சற்றே ஒதுங்கியிருந்தார். பின்னரும், அண்மைய மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் சீட் கேட்டிருந்தும் அவருக்கு ஒதுக்கப் படவில்லை. அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜுக்கு சீட் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இவர் பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது திமுக கட்சிக்குள் பிரச்னையை ஏற்படுத்தியது. ஆயினும், இன்று செய்தியாளர்களிடம் பேசிய விபி.துரைசாமி கட்சித் தலைமை குறித்த விமர்சனத்துடன், பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது குறித்து நியாயப்படுத்தியும் பேசியிருந்தார்.

vpduraisamy - 2026

ஏற்கெனவே தாம் ஒரு சர்வாதிகாரி என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி வந்த ஸ்டாலின், தம்மைக் குறித்த எந்த விமர்சனத்தை எவர் முன்வைத்தாலும், உடனே ஜனநாயக முறைப்படி அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றுவது வழக்கம். இந்நிலையில், வி.பி.துரைசாமியின் பதவியை மட்டும் பறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.

மாநிலங்களவை வேட்பாளராக எப்படி இவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜுக்கு வழங்கப் பட்டதோ, அதே போல், கட்சிப் பதவியும் பறிக்கப் பட்டு, அண்மையில் மாநிலங்களவை உறுப்பினரான முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜுக்கு வழங்கப் பட்டுள்ளது.

தனது பதவிப் பறிப்பு குறித்து கருத்து தெரிவித்த வி.பி.துரைசாமி, என் பதவி பறிப்பை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். பதவி பறிப்பு செய்தி எனக்கு எந்தவித ஆச்சர்யமும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலினுக்கு நன்றி என்றும், பதவி பறிப்பு விவகாரத்தில், ஆச்சரியப்படுவதற்கில்லை, என்ன தவறு செய்தேன்? என்று விளக்கம் கேட்கப்படவில்லை என்று கூறினார் வி.பி. துரைசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories