கொரோனா: இந்தியாவில் பெண்களையே அதிகம் பாதிக்கும்! ஆய்வு தரும் அதிர்ச்சி!

coronavirus

உலக நாடுகளுக்கு மாறாக இந்தியாவில், கொரோனாவால் ஆண்களை விட பெண்களுக்கே இறப்பு அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தில்லியின் பொருளாதார வளர்ச்சி நிறுவனம், ஜெய்ப்பூரின் சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இணைந்து முதல் முறையாக இந்தியாவில் ‘கொரோனா இறப்பில் பாலின வேறுபாடு’ குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த மே 20ம் தேதி வரையிலான இறப்புகள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அப்போது, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 12 ஆயிரத்து 27. பலி 3,433 பேர். இறப்பு விகிதம் 3.1 சதவீதமாகும்.

ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் சயின்ஸ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவில், உலக நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் எண்ணிக்கை அதிகமிருந்தால், பாதிக்கப்படும் பெண்களில் இறப்பவர்கள் அதிகம் உள்ளனர் என்கிறது இந்த ஆய்வு.

அதாவது, கொரோனா பாதித்த பெண்களில் 3.3 சதவீதம் இறந்துள்ளனர். இது ஆண்களின் இறப்பு விகிதம் 2.9 மட்டுமே. 40-49 வயதுக்கு உட்பட்ட பெண்களின் இறப்பு விகிதம் அதிகபட்சமாக 3.2 சதவீதமாக உள்ளது. இதுவே, ஆண்களில் 2.1 சதவீதமாக உள்ளது.

ஆய்வு நடத்தப்பட்ட காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மொத்த ஆண்களின் எண்ணிக்கை 73,654, பெண்களின் எண்ணிக்கை 38,373. இறந்தவர்களின் ஆண்கள் 2,165, பெண்கள் 1,268. இதில் முக்கியமான விஷயம், 5-19 வயதுக்கு உட்பட்டவர்களில் இறந்தவர்கள் அனைவருமே பெண்கள் என்பதுதான். இந்த வயதுப் பிரிவில் உயிரிழக்கும் பெண்கள் விகிதம் 0.6 சதவீதமாகும்.

உலக நாடுகளைப் பார்க்கையில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இத்தாலியில் பாதிக்கப்படுவது, உயிரிழப்பது இரு விகிதத்திலும் ஆண்களே அதிகம். இதற்கு காரணம், ஆண்கள் புகைப் பிடித்தல் மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளால் குறைந்த வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் போன்ற பிற உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

அதோடு பெண்கள் இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டுள்ளனர். இந்த உயிரியல் நன்மைகள் இந்திய பெண்களுக்கு மட்டும் கைகொடுக்கவில்லை.

பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் சுகாதார ஆய்வாளர் வில்லியம் ஜியோ கூறுகையில், ‘‘உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் உடல் நலம், பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை பெறுவதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் மோசமாக உள்ளனர் என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

எனவே, தொற்றுநோயை கையாள்வதில் பெண்களுக்கு பாதிப்பு குறைவு என அரசாங்கங்கள் ஒருபோதும் எண்ணி விடக் கூடாது. அதோடு, தொற்று சூழலிலும் கூட சுகாதார மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது,’’ என்றார்.

உலக நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories