மனைவிக்கு மெசேஜ் அனுப்ப கூட ஜெகன் அனுமதி வேண்டுமா? லோகேஷால் சர்ச்சை!

Published:

lokesh nara
lokesh nara

லோகேஷ் செய்த மனைவி கமெண்ட் மீது சலசலப்பு…

“ஆந்திர மாநிலத்தில் ராஜாரெட்டியின் ராஜாங்கம் நடக்கிறது. அரசாங்கத்தை கேள்வி கேட்கும் ஒவ்வொருவர் மீதும் பழி தீர்த்துக் கொள்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட வேண்டும் என்றாலும் ஒய்சிபி கட்சியை கேட்டுத்தான் போடவேண்டுமா? கடைசியில் சொந்த மனைவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலும் முதலமைச்சர் ஜெகன் ரெட்டி பர்மிஷன் எடுத்துக்கொள்ள வேண்டுமா? இது என்ன ஒரு நிலைமை…?” என்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய முக்கிய காரியதரிசி நாரா லோகேஷ் செய்த கமெண்ட் மீது பரபரப்பு நிலவுகிறது.

lokesh nara
lokesh nara

அரசியல் விமர்சனங்களில் மனைவியைப் பற்றி எதற்காக கூற வேண்டும் என்று ஒய்சிபி எம்பி விஜயசாயி ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். பிராமணி பெயரை குறிப்பிடாமல் இவ்வாறு கூறினார்.

வெள்ளிக்கிழமை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பயணம் செய்த லோகேஷ் அச்சந்நாயுடு குடும்பத்தை விசாரித்தார். அந்த நேரத்தில் நிருபர்களோடு பேசுகையில் ஜெகன் அரசாங்கத்தின் மீது தீவிரமாக விமர்சனங்களை வீசினார். மனைவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் செய்ய வேண்டும் என்றாலும் ஜெகன் ரெட்டி பர்மிஷன் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று சூடாக விமர்சனம் செய்தார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

இதன் மீது ஒய்சிபி விஜயசாயி ரெட்டி தீவிரமாக கண்டனம் தெரிவித்தார். லோகேஷ் மனைவி பிராமணி பெயரை குறிப்பிடாமல் லோகேஷுக்கு பஞ்ச் டயலாக் விடுத்தார்.

lokesh nara
lokesh nara

” என்ன லோகேஷ்…? சொந்த மனைவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் போட வேண்டுமென்றால் ஜெகன் பர்மிஷன் வாங்க வேண்டி இருக்கிறதா? அப்படியா…? நீ அப்படித்தான் பர்மிஷன் வாங்கி உன் மனைவிக்கு போஸ்ட் போடுகிறாயா? ஏன் ஐயா.. அரசியலில் இல்லாத உன் மனைவியைக் கூட அனாவசிய பேச்சால் சண்டைக்கு இழுக்கிறாய்? ” என்று எம்பி எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் லோகேஷின் விமர்சனத்திற்கு எம்பி கொடுத்த கவுண்டர் மீது மீடியாவில் வேறு வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.

லோகேஷ் சாதாரணமாக மனைவியை பற்றி கமென்ட் செய்தால் விஜயசாயி வேண்டும் என்றே லோகேஷ் மனைவி குறித்து பேசியுள்ளார் என்று நெட்டிசன்கள் அவர் மீது குறை கூறியுள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img