லைவ்… ‘வழக்கம்போல்’ அர்னாப்! கூலாக பொங்கல் சாப்பிட்ட கஸ்தூரி! (Viral Video)

Published:

லைவ் உரையாடல் போது லஞ்ச் செய்தபடி தென்பட்ட நடிகை கஸ்தூரியின் வைரல் வீடியோ...

கொரோனா காரணமாக செலிபிரிடிகள் வீடுகளில் இருந்தே பல சேனல்களுக்கு இன்டர்வியூ அளித்து வருகிறார்கள்.

அதுபோல் திரைப்பட நடிகை கஸ்தூரி சங்கர் அண்மையில் ரிபப்ளிக் சேனல் ஹோஸ்ட் அர்னாப் கோஸ்வாமி தயாரித்த நேரடி விவாதத்தில் பங்கு கொண்டார். ஆனால் அதில் ஆர்நாப் பேசுகின்றபோது லைவ்வில் நடிகை கஸ்தூரி மதிய உணவு உண்ட படி காணப்பட்டார்.

லைவ்வில் விவாதம் தொடர்பாக அர்னாப் சத்தமாக பேசிக்கொண்டு இருந்த போது மிகவும் நிதானமாக போஜனம் செய்தபடி கஸ்தூரி தென்பட்டது வைரலாக மாறியது.

இந்த வீடியோவை ஒரு நெட்டிசன் சோஷல் மீடியாவில் போஸ்ட் செய்து இந்த பெண்ணிற்கு உள்ள கான்பிடன்ஸ் பாராட்டத்தக்கது என்று காமென்ட் போட்டார். அந்த வீடியோ சோஷல் மீடியாவில் வைரலாக மாறியது.

அதுகுறித்து கஸ்தூரி பேசுகையில் கான்ஃபிடென்சுக்காக நான் அந்த செயலை செய்யவில்லை. அர்னாப் பதில் அளிப்பதை நான் 60 நிமிடங்கள் கவனித்தேன். அவர் எனக்கு பேசும் அவகாசமே தரவில்லை. அதனால் நான் லஞ்ச் சாப்பிட்டேன். ஆனால் அந்த சமயத்தில் நான் ஸ்கைப் ஆஃப் செய்வதற்கு மறந்துவிட்டேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். இது யாரையும் குறைத்து மதிப்பிடும் செயலல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

என்ன சாப்பிடுகிறீர்கள் என்று நெட்டிசன்கள் கேட்டதற்கு பொங்கல் சாப்பிடுவதாக கஸ்தூரி பதிலளித்துள்ளார்.

கஸ்தூரி சினிமா விஷயங்களுக்கு வந்தால்… 90களில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக நடிகை கஸ்தூரி சங்கர் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேலாக படங்களில் நடித்துள்ளார். தமிழ் பிக்பாஸில் பங்கு பெற்றார். தற்போது தெலுங்கு மா டிவியில் ஒளிபரப்பாகும் கிரகலட்சுமி என்ற சீரியலில் ஒரு லீடிங் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img