அயோத்தி ஶ்ரீராமர் கோயிலுக்கு 2.1 டன் கனமான மணி! இதன் சிறப்பே தனி!

big-bell-for-ayodhya-ramar-temple
big-bell-for-ayodhya-ramar-temple

அயோத்தியில் ராம மந்திரம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கரங்களால் பூமிபூஜை நடந்தேறியது. இந்த ஆலயத்தை மூன்றரை ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்யவேண்டும் என்று இலக்காகக் கொண்டுள்ளார்கள்.

அயோத்தி ராம மந்திரில் பொருத்துவதற்கு 2.1 டன் எடையுள்ள மிகப்பெரும் மணி வடிவமைக்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசம் ஜலேசர் என்ற இடத்தில் தாவூ தயால் என்ற ஹிந்து குடும்பம் இதனை தயாரிக்கிறது. கடந்த 4 தலைமுறைகளாக இந்த குடும்பம் பலவித வடிவங்களில் பித்தளை பொருட்களை தயார் செய்து வருகிறது. இவர்களிடம் மிகச்சிறந்த திறமைசாலி நிபுணர்களான முஸ்லிம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இத்தனை கனமான மணியை தாம் தயாரிப்பது இதுவே முதல் தடவை என்று தயால் குறிப்பிட்டார். மணி தயாரிப்பதில் எட்டுவிதமான தாதுப்பொருட்களான தங்கம், வெள்ளி ராகி, துத்தநாகம், தகரம், ஈயம், இரும்பு, பாதரசம் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம்.மணியில் எந்தவித ஒட்டு போடுவதும் இருக்காது. அதுவே இதன் சிறப்பு.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

இதைத் தயாரிப்பதற்கு ரூ 21 லட்சம் செலவாகும். 25 பேர் நிபுணர்கள் நான்கு மாதங்களாக இதனை தயாரித்து வருகிறார்கள். உஜ்ஜயினியிலுள்ள மகாகாலேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு நாங்கள் ஆயிரம் கிலோ எடையுள்ள மணியை தயார் செய்து அளித்தோம் என்று தயால் கூறினார்.

இந்த மணியின் உருவத்தை முஸ்லிம் தொழிலாளி இக்பால் மிஸ்திரி வடிவமைப்பது மற்றுமொரு சிறப்பு. டிசைன் வடிவமைப்பில் இக்பால் மிகவும் திறமையானவர் என்று தயால் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட மிகப்பெரும் வடிவத்தில் பொருளை தயாரிக்கும் போது சிக்கல்கள் எப்போதும் அதிகமாக இருக்கும் என்று தயால் கூறினார். மாதக்கணக்கில் நடக்கும் இந்த செயலில் ஒரு சிறிய தவறு கூட நடக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் சிரமம். அயோத்தி ராமர் ஆலயத்துத்காக நாங்கள் இதனை தயாரித்து வருகிறோம் என்பது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. ஆனால் தோல்வி பயம் கூட எங்கள் மனதில் தொடர்கிறது என்று அவர் கூறினார். இதில் வெற்றியை சாதிப்போம் என்று நிச்சயமாக கூற முடியாது என்றார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இதன் சிறப்பு என்னவென்றால் இது மேலிருந்து கீழே வெறும் ஒரு ஒரே இரும்புத்துண்டால் செய்யப்படுவது. இதற்கு ஒட்டு போடுவது எங்கும் இருக்காது. இதுவே இந்த செயலை மிகவும் கஷ்டமாக ஆக்குகிறது என்று இக்பால் மிஸ்திரி விவரித்தார்.

நாட்டிலுள்ள மிக மிகப் பெரிய மணியை ராம மந்திரத்திற்கு காணிக்கையாக அளிக்கப் போகிறோம் என்று ஜலேசர் முனிசிபல் கார்ப்பரேஷன் சேர்மன் விகாஸ் மிட்டல் கூறினார்.

அயோத்தி விவாதம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியிட்ட மறு கணமே இந்த மிகப்பெரும் மணியை தயாரிக்க வேண்டும் என்று நிர்மோகி அகாடா கேட்டுக்கொண்டது என்று கூறினார். இதனை நாங்கள் தெய்வத்தின் தீர்மானமாக ஏற்றுக் கொண்டோம். அதனால்தான் இந்த மணியை நாங்களே நன்கொடையாக ஏன் அளிக்கக்கூடாது என்று எண்ணினோம் என்று விகாஸ் சகோதரர் ஆதித்யா மிட்டல் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories