ச்சூ.. ஒரே புழுக்கமா இருக்கு.. விமானத்தின் இறக்கையில் நின்று காற்று வாங்கிய பெண்! வைரல் வீடியோ!

flight

காற்று வாங்குவதற்காக கதவைத் திறந்து வெளியே வந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

விமானப் பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்று. சில சமயங்களில் நடுவில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துகொள்வது, விமானம் தாமதமாக வருவது என பல விஷயங்கள் பயணிகளுக்கு அதிருப்தியை தருவதாக அமைகிறது. இந்த நிலையில், பெண் ஒருவர் விமானத்திற்குள் காற்று சரியாக வரவில்லை என்ற காரணத்தால் எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக வெளியே வந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி சென்றுவிட்டு, தன் சொந்த ஊர் செல்வதற்காக தன் இரு குழந்தைகளுடன் விமானத்தில் சென்றுள்ளார்.

விமானத்தில் பயணிக்கத்தொடங்கியதில் இருந்தே அந்த விமானம் மிகவும் வெப்பமாக இருந்ததாக அந்த பெண் உணர்ந்துள்ளார். இதனை அடுத்து, துருக்கி பகுதியில் விமானம் தரையிறங்கிய நிலையில், எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக வெளியே வந்து இறக்கையில் சிறிது நேரம் நின்றிருந்து, பின்னர் மீண்டும் விமானத்திற்குள்ளே சென்றுள்ளார்.

விமானம் தரையிறங்கியதால், பயணிகள் வெளியே வந்துகொண்டிருந்த நிலையில், அந்த பெண் இதுபோன்று செய்ததை அங்கிருப்பவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய உக்ரைன் விமான நிலைய அதிகாரிகள், அந்த பெண் உக்ரைன் வழியாக செல்லும் எந்த விமானத்திலும் பயணம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், “அனைவரும் விமானத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக அந்த பெண் மட்டும் இறக்கையில் நடந்துகொண்டிருந்தார். அவரை பார்த்த அவரது இரண்டு குழந்தைகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்” என்று கூறினார்.

மேலும், விமானத்தில் இதுபோன்று செய்ததற்கான காரணம் குறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது சரியான காரணத்தை சொல்லவில்லை எனவும் காற்று சரியாக வராததால் வெளியே சென்று காற்று வாங்கியதாகவும் கூறியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories