December 6, 2025, 6:40 AM
23.8 C
Chennai

ஆவணி கடைசி ஞாயிறு.. நாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள்!

nagarkovil-1

ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமானதாகும்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி மஞ்சள் பொடி தூவி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனால் ஆவணி மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி மஞ்சள் பொடி தூவி வழிபட்டு செல்வர்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருந்ததால் ஆவணி மாத முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். செப். 13 ஆம் தேதி கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர்.

கோயில் வாசலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கைகளை சுத்தப்படுத்துவதற்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. அதன் பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா பொது முடக்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியைப் பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நாகராஜரை வழிபட்டனர்.

நாகர் சிலைகளுக்கு பால் ஊற்ற பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நாகர் சிலைகள் இருந்த பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பால் மற்றும் மஞ்சள் பொடி கொண்டு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories