அவரை பார்த்தா.. ராஜசேகர ரெட்டி ஞாபகம் வருது: சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்!

Published:

silukkur-dr-soundarajan
silukkur-dr-soundarajan

அவரைப் பார்த்தால் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி ஞாபகம் வந்தார்…. சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்.

புதன்கிழமை திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி பிரம்மோற்சவ விழாவில் பங்குகொண்ட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பஞ்சகச்ச வேட்டி கட்டி நெற்றியில் திருநாமத்தோடு மங்கள வாத்தியங்கள் வேத மந்திர உச்சாடனங்கள் இடையில் ஊர்வலமாக சென்று ஸ்ரீ பாலாஜிக்கு அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்த செய்தி தெரிந்ததே.

இது தொடர்பாக அவர் நடந்து கொண்ட விதமும் அவருடைய தோற்றமும் அப்படியே மறைந்த முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி போலவே இருந்தது என்று சிலுக்கூரு பாலாஜி முதன்மை அர்ச்சகர் டாக்டர் எம்வி சௌந்தரராஜன் கூறினார்.

முதல்வர் ஜெகனை பார்த்தால் அவருடைய தந்தையார் ஞாபகம் வந்தார் என்று கூறினார்.

இதுகுறித்து வியாழக்கிழமை டுவிட்டரில் ஒரு வீடியோவை சௌந்தரராஜன் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் ஒய்எஸ்ஆர் இன்று இல்லையே என்று எண்ணினேன்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

ஆனால் அவர் எங்கும் போகவில்லை. அவர் இங்கேயே இருக்கிறார் என்பது இப்போது ஜெகன் வடிவத்தில் உலகமெங்கும் பார்க்கின்றது. உலக அளவில் உங்களுக்கு வாழ்த்துக்கள் வந்து சேர்ந்துள்ளன.

வியாழக்கிழமை கூட நீங்கள் திருமலையில் இருந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி. தார்மீகப் பரிஷத் அமலுக்கு வர வேண்டும். அதற்கு உங்கள் உதவி தேவை என்று சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img