February 21, 2026, 10:56 PM
27.3 C
Chennai

கரூருக்கு புதிய பேருந்து நிலையம் எப்போது வரும்? தமிழ்நாடு இளைஞர் கட்சி சரமாரி கேள்வி!

tamilnadu-ilaignarkatchi-karur
tamilnadu-ilaignarkatchi-karur

கரூர் நகரத்திற்கு புதிய பேருந்து நிலையம் வருவது எப்போது ?  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 4 வழிகளிலும்  ஆம்புலன்ஸ் செல்லும் சாலைகள் அமைக்க வேண்டும், டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ 5 மற்றும் ரூ 10 கூடுதல் வைத்து விற்கும்  பணம் எங்கே செல்கின்றது என தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் கரூரில்செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னதாக, கரூர் கெளரிபுரம் கிழக்கு பகுதியில்  அமைந்துள்ள  தமிழ்நாடு  இளைஞர்  கட்சியின் மாவட்ட  அலுவலகத்தில்  ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. 

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார்தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில  பத்திரிக்கை துறை தொடர்பாளர் பாலமுருகன் சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, கரூர் நகர செயலாளர் லோகேஷ்,  மாநில துணை செயலாளர் முகம்மது அலி, மாவட்ட துணை தலைவர் சாகுல் அமீது, மாவட்டச் செயலாளர் பிரபாகரன்,  மாவட்டப் பொருளாளர் பிரின்ஸ் ராஜா ஆகியோர் கலந்து  கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, கரூர் மாவட்ட தலைவர்  ராஜ்குமார் கூறியபோது…

கரூர் மாவட்டத்திற்கு, கரூர் நகரம் பல்வேறு புராதன சிறப்புகள் பெற்றும், புதிய பேருந்து நிலையம் என்பது வெறும் அறிக்கையாக  மட்டுமே  உள்ளது, இதுவரை  ஆட்சிகள்  மாறினாலும், காட்சிகள்  மாறாத  நிலையில்  பேருந்து  நிலையம்  இன்றுவரை  அமையவில்லை!புதிய  பேருந்து  நிலையம்  விரைவில்  அமைய  நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பல்வேறு சிறப்பு  அம்சங்களைக் கொண்டு கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்து. அதற்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.

எனினும், அந்த  சிறப்பு  வாய்ந்த  மருத்துவக் கல்லூரிக்கு  நோயாளிகள்  அவசர  சிகிச்சைக்கு  செல்லும்  போது  மிகுந்த  சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  ஆகவே சாலைகளை  பராமரிக்க  வேண்டும் நோயாளிகள்  அந்த  மருத்துவமனைக்குச்  சென்று  வர  ஆம்புலன்ஸ்  மற்றும் இதர வாகனங்கள்  செல்ல,  மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு  நான்கு  வழிகளிலும்  சாலைகள் அமைக்க வேண்டும் என்றார். 

இதனை தொடர்ந்து மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர்  பாலமுருகன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது,  தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்  சட்டவிரோதமாக ரூ 1 முதல் ரூ 5 மற்றும் ரூ 10 என்று கூடுதலாக டாஸ்மாக் சரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும்  அந்த பணம் எங்கே செல்கின்றது யாருக்கு செல்கின்றது என்பதைஅரசே  தெரிவிக்க வேண்டுமென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories