தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

manudarma-dm

பகுத்தறிவும் நிஜ அறிவும்

தங்களை அறிவுஜீவிகள் என்றும், தமிழறிஞர்கள் என்றும், தமிழைக் காக்கவும் பெண்ணியத்தைக் காக்கவும் அவதாரம் எடுத்தவர்கள் என்றும், மநுஸ்மிருதி உள்ளிட்ட ஸனாதன தர்ம சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்களென்றும் பேசித்திரியும்
அறிவிலிகளுக்கு…
வேதா டி. ஸ்ரீதரனாகிய நான் எழுப்பும் சில கேள்விகள்:

1. சூத்திரன் என்பவன் வேசி மகன் என்று ஹிந்து தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஈவெரா காலத்தில் இருந்து இன்று வரை நீங்கள் சொல்லி வருகிறீர்களே! உண்மையில், எந்த ஹிந்து மத நூலில் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட முடியுமா?

2. ஒரு மாதத்துக்கு முன்பு நைஷ்டிக பிரம்மசாரி ஒருவர், மனு ஸ்மிருதி பெண்கள் அனைவரையும் வேசிகள் என்று குறிப்பிடுகிறது என்று திரு(மா)வாய் மொழிந்திருக்கிறாரே, மனு ஸ்மிருதியில் மட்டுமல்ல, ஹிந்து சாஸ்திர நூல்கள் ஏதாவது ஒன்றில் அதுபோன்ற கருத்து ஒரே ஒரு இடத்திலாவது இருப்பதை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?

3. மனு ஸ்மிருதியை மனு என்பவர் எழுதினார் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட முடியுமா? அப்படியானால், அவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார், எந்த இடத்தில் வாழ்ந்தார், அவர் இந்த நூலை எவ்வாறு எழுதினார், எதற்காக எழுதினார் முதலான விஷயங்கள் பற்றி வரலாற்றுச் சான்றுகள் என்னென்ன கிடைத்துள்ளன?

4. அட் லீஸ்ட் மனு என்ற ஒரு மனிதர் இந்தியாவில் வாழ்ந்தார் என்பதற்காவது ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் உண்டா?

5. அவர் எந்த ஜாதி அல்லது எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டும் வரலாற்று ஆதாரம் ஏதாவது உண்டா?

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

6. மனு ஸ்மிருதிதான் மனிதர்களை நான்கு வர்ணங்களாகவும், இதர ஜனங்களை ஐந்தாவது வர்ணத்தவர் அல்லது பஞ்சமர் என்று ஆக்கியதாகவும் சொல்லி வருகிறீர்களே! மனு ஸ்மிருதியில் பஞ்சமர் என்ற வார்த்தை இருக்கிறதா? இருந்தால், அத்தியாய எண்ணையும் சுலோக எண்ணையும் அந்த சுலோகத்தின் பொருளையும் குறிப்பிட முடியுமா?

7. இன்றைய ஜாதிப் பாகுபாடுகளுக்கெல்லாம் காரணம் மனு ஸ்மிருதி தான் என்று சொல்லி வருகிறீர்களே! இந்தியாவில் இதுவரை கிடைத்துள்ள ஸ்மிருதிகள் அனைத்திலும் சேர்த்து மொத்தமே 28 ஜாதிகள்தான் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

அப்படியானால் –

அ) தற்காலத்தில் இந்தியாவில் காணப்படும் 2000 + ஜாதிகள் எங்கிருந்து வந்தன?

ஆ) ஸ்மிருதிகளில் உள்ள அந்த 28 ஜாதிகளில் எத்தனை ஜாதிகள் தற்போதைய இந்தியாவில் காணப்படுகின்றன?

8. மனு ஸ்மிருதி மட்டுமல்ல, இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் அனைத்து ஸ்மிருதிகளில் ஏதாவது ஒரே ஒரு ஸ்மிருதியாவது, இந்தியாவின் ஏதாவது ஒரே ஒரு பகுதியிலாவது, இந்திய வரலாற்றின் ஏதாவது ஒரே ஒரு காலகட்டத்திலாவது அரசாங்கச் சட்டமாக இருந்தது என்பதற்கு ஏதாவது ஒரே ஒரு வரலாற்றுச் சான்றாவது காட்ட முடியுமா?

9. பண்டைய தமிழகத்தில் மனு ஸ்மிருதி அமலில் இருந்தது என்று சொல்கிறீர்களா?

அ) அப்படியானால் –

தமிழகம் மனுவின் பாரம்பரியத்தில் வந்த தேசமா? அதாவது, தனித்தமிழ் நாகரிகம், திராவிட நாகரிகம் என்ற உங்களுடைய கப்சாக்கள் எல்லாம் பொய் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?

ஆ) பண்டைய தமிழகத்தில் மனு ஸ்மிருதி அமலில் இல்லை என்று நீங்கள் சொன்னால் –

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

தமிழகத்தில் தீண்டாமைக்குக் காரணம் என்று யாரைச் சொல்வீர்கள்? தொல்காப்பியரையும் திருவள்ளுவரையுமா?

10. மோதி ஆட்சியை மனு ஸ்மிருதி ஆட்சி என்று வர்ணிக்கும் அதி மேதாவிகளே,

மனு ஸ்மிருதி ஆட்சியில் இருந்தால், பிராமணன் பூணூலை அறுப்பவனது கை துண்டிக்கப்பட்டிருக்கும். பிராமணர்களின் பூணூலை அறுத்த ரவுடிகள் எத்தனை பேருடைய கைகளை இதுவரை மோதி துண்டித்திருக்கிறார்?

மனு ஸ்மிருதி ஆட்சியில் இருந்தால், பிராமணனை இழிவாகப் பேசுபவர்களது நாக்கு அறுக்கப்பட்டிருக்கும். மோதி இதுபோன்ற எத்தனை ரவுடிகளின் நாக்குகளை இதுவரை அறுத்திருக்கிறார்?

11. ஸ்மிருதிகள்தான் ஜாதிப் பிரிவினைக்குக் காரணம் என்றால் –

முஸ்லிம்களிடையே நிலவும் 300-க்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு எந்த ஸ்மிருதி காரணம்?

12. பெண்கள் முக்காடு போட்டுக் கொண்டுதான் வெளியே வர வேண்டும் என்று மனு ஸ்மிருதியில் உள்ளதா அல்லது இஸ்லாமிய நூல்களில் உள்ளதா?

13. பெண்களுக்கு எத்தகைய ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று மனு ஸ்மிருதி சொல்கிறது? இதே விஷயத்தில் இஸ்லாமியச் சட்டங்கள் என்ன சொல்கின்றன? தற்போதைய இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதிக்கப்படும் ஜீவனாம்சம் எதை அடியொற்றியது, ஹிந்துக்களுக்கு அளிக்கப்படும் ஜீவனாம்சம் எதை அடியொற்றியது?

இதுபோல இன்னும் நாலைந்து டஜன் கேள்விகளை என்னால் கேட்க முடியும். ஆனால், உங்களைப் போன்றவர்கள், சொன்ன பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லித் திரியும் அயோக்கியர்கள், எனவே, எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் கேள்விகளை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இறுதியாக –

உங்களில் யாராவது ஒருவருக்கு, கொஞ்சமாவது நேர்மையோ அல்லது அட் லீஸ்ட் சூடு, சுரணை, வெட்கம், மானம், ரோஷம் முதலிய குணங்களில் ஏதாவது ஒன்றாவது இருந்தால் –

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

நீங்கள் மனு ஸ்மிருதி குறித்துச் சொல்லும் அனைத்துக் காரணங்களையும் வைத்து நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மனு ஸ்மிருதி நூலைத் தடை செய்யுங்கள்.

உங்களில் யாராலும் அதைச் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில்,

1. உங்களுக்கு அறிவும் கிடையாது. சூடு சுரணை முதலான குணங்களும் கிடையாது. உங்கள் வார்த்தைகளில் நேர்மையும் கிடையாது

2. அப்படியே உங்களில் யாருக்காவது அறிவும் நேர்மையும் இருந்து, அவர் நீதிமன்றத்தில் வாதாடி, நீதிமன்றமும் அந்தக் கருத்துகளை ஏற்றுக் கொண்டு மனு ஸ்மிருதியைத் தடை செய்து விட்டால்….

– என்றெல்லாம் அத்தைக்கு மீசை முளைத்தால் கற்பனையில் மிதக்க வேண்டாம் காரணம், நீங்கள் இந்த விஷயத்தில் நீதிமன்றம் போவதை உங்களுக்கு ரொட்டித் துண்டு வீசுபவர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள்.

பிறகு என்னவாம், நீதிமன்றம் மனு ஸ்மிருதியைத் தடை செய்தால் இந்தியாவில் பைபிள், குரான், ஹதிஸ்களின் கதி என்ன ஆகும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் – அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு நிஜமாகவே அறிவு உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories