தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

manudarma-dm

பகுத்தறிவும் நிஜ அறிவும்

தங்களை அறிவுஜீவிகள் என்றும், தமிழறிஞர்கள் என்றும், தமிழைக் காக்கவும் பெண்ணியத்தைக் காக்கவும் அவதாரம் எடுத்தவர்கள் என்றும், மநுஸ்மிருதி உள்ளிட்ட ஸனாதன தர்ம சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்களென்றும் பேசித்திரியும்
அறிவிலிகளுக்கு…
வேதா டி. ஸ்ரீதரனாகிய நான் எழுப்பும் சில கேள்விகள்:

1. சூத்திரன் என்பவன் வேசி மகன் என்று ஹிந்து தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஈவெரா காலத்தில் இருந்து இன்று வரை நீங்கள் சொல்லி வருகிறீர்களே! உண்மையில், எந்த ஹிந்து மத நூலில் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட முடியுமா?

2. ஒரு மாதத்துக்கு முன்பு நைஷ்டிக பிரம்மசாரி ஒருவர், மனு ஸ்மிருதி பெண்கள் அனைவரையும் வேசிகள் என்று குறிப்பிடுகிறது என்று திரு(மா)வாய் மொழிந்திருக்கிறாரே, மனு ஸ்மிருதியில் மட்டுமல்ல, ஹிந்து சாஸ்திர நூல்கள் ஏதாவது ஒன்றில் அதுபோன்ற கருத்து ஒரே ஒரு இடத்திலாவது இருப்பதை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?

3. மனு ஸ்மிருதியை மனு என்பவர் எழுதினார் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட முடியுமா? அப்படியானால், அவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார், எந்த இடத்தில் வாழ்ந்தார், அவர் இந்த நூலை எவ்வாறு எழுதினார், எதற்காக எழுதினார் முதலான விஷயங்கள் பற்றி வரலாற்றுச் சான்றுகள் என்னென்ன கிடைத்துள்ளன?

4. அட் லீஸ்ட் மனு என்ற ஒரு மனிதர் இந்தியாவில் வாழ்ந்தார் என்பதற்காவது ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் உண்டா?

5. அவர் எந்த ஜாதி அல்லது எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டும் வரலாற்று ஆதாரம் ஏதாவது உண்டா?

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

6. மனு ஸ்மிருதிதான் மனிதர்களை நான்கு வர்ணங்களாகவும், இதர ஜனங்களை ஐந்தாவது வர்ணத்தவர் அல்லது பஞ்சமர் என்று ஆக்கியதாகவும் சொல்லி வருகிறீர்களே! மனு ஸ்மிருதியில் பஞ்சமர் என்ற வார்த்தை இருக்கிறதா? இருந்தால், அத்தியாய எண்ணையும் சுலோக எண்ணையும் அந்த சுலோகத்தின் பொருளையும் குறிப்பிட முடியுமா?

7. இன்றைய ஜாதிப் பாகுபாடுகளுக்கெல்லாம் காரணம் மனு ஸ்மிருதி தான் என்று சொல்லி வருகிறீர்களே! இந்தியாவில் இதுவரை கிடைத்துள்ள ஸ்மிருதிகள் அனைத்திலும் சேர்த்து மொத்தமே 28 ஜாதிகள்தான் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

அப்படியானால் –

அ) தற்காலத்தில் இந்தியாவில் காணப்படும் 2000 + ஜாதிகள் எங்கிருந்து வந்தன?

ஆ) ஸ்மிருதிகளில் உள்ள அந்த 28 ஜாதிகளில் எத்தனை ஜாதிகள் தற்போதைய இந்தியாவில் காணப்படுகின்றன?

8. மனு ஸ்மிருதி மட்டுமல்ல, இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் அனைத்து ஸ்மிருதிகளில் ஏதாவது ஒரே ஒரு ஸ்மிருதியாவது, இந்தியாவின் ஏதாவது ஒரே ஒரு பகுதியிலாவது, இந்திய வரலாற்றின் ஏதாவது ஒரே ஒரு காலகட்டத்திலாவது அரசாங்கச் சட்டமாக இருந்தது என்பதற்கு ஏதாவது ஒரே ஒரு வரலாற்றுச் சான்றாவது காட்ட முடியுமா?

9. பண்டைய தமிழகத்தில் மனு ஸ்மிருதி அமலில் இருந்தது என்று சொல்கிறீர்களா?

அ) அப்படியானால் –

தமிழகம் மனுவின் பாரம்பரியத்தில் வந்த தேசமா? அதாவது, தனித்தமிழ் நாகரிகம், திராவிட நாகரிகம் என்ற உங்களுடைய கப்சாக்கள் எல்லாம் பொய் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?

ஆ) பண்டைய தமிழகத்தில் மனு ஸ்மிருதி அமலில் இல்லை என்று நீங்கள் சொன்னால் –

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

தமிழகத்தில் தீண்டாமைக்குக் காரணம் என்று யாரைச் சொல்வீர்கள்? தொல்காப்பியரையும் திருவள்ளுவரையுமா?

10. மோதி ஆட்சியை மனு ஸ்மிருதி ஆட்சி என்று வர்ணிக்கும் அதி மேதாவிகளே,

மனு ஸ்மிருதி ஆட்சியில் இருந்தால், பிராமணன் பூணூலை அறுப்பவனது கை துண்டிக்கப்பட்டிருக்கும். பிராமணர்களின் பூணூலை அறுத்த ரவுடிகள் எத்தனை பேருடைய கைகளை இதுவரை மோதி துண்டித்திருக்கிறார்?

மனு ஸ்மிருதி ஆட்சியில் இருந்தால், பிராமணனை இழிவாகப் பேசுபவர்களது நாக்கு அறுக்கப்பட்டிருக்கும். மோதி இதுபோன்ற எத்தனை ரவுடிகளின் நாக்குகளை இதுவரை அறுத்திருக்கிறார்?

11. ஸ்மிருதிகள்தான் ஜாதிப் பிரிவினைக்குக் காரணம் என்றால் –

முஸ்லிம்களிடையே நிலவும் 300-க்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு எந்த ஸ்மிருதி காரணம்?

12. பெண்கள் முக்காடு போட்டுக் கொண்டுதான் வெளியே வர வேண்டும் என்று மனு ஸ்மிருதியில் உள்ளதா அல்லது இஸ்லாமிய நூல்களில் உள்ளதா?

13. பெண்களுக்கு எத்தகைய ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று மனு ஸ்மிருதி சொல்கிறது? இதே விஷயத்தில் இஸ்லாமியச் சட்டங்கள் என்ன சொல்கின்றன? தற்போதைய இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதிக்கப்படும் ஜீவனாம்சம் எதை அடியொற்றியது, ஹிந்துக்களுக்கு அளிக்கப்படும் ஜீவனாம்சம் எதை அடியொற்றியது?

இதுபோல இன்னும் நாலைந்து டஜன் கேள்விகளை என்னால் கேட்க முடியும். ஆனால், உங்களைப் போன்றவர்கள், சொன்ன பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லித் திரியும் அயோக்கியர்கள், எனவே, எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் கேள்விகளை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இறுதியாக –

உங்களில் யாராவது ஒருவருக்கு, கொஞ்சமாவது நேர்மையோ அல்லது அட் லீஸ்ட் சூடு, சுரணை, வெட்கம், மானம், ரோஷம் முதலிய குணங்களில் ஏதாவது ஒன்றாவது இருந்தால் –

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

நீங்கள் மனு ஸ்மிருதி குறித்துச் சொல்லும் அனைத்துக் காரணங்களையும் வைத்து நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மனு ஸ்மிருதி நூலைத் தடை செய்யுங்கள்.

உங்களில் யாராலும் அதைச் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில்,

1. உங்களுக்கு அறிவும் கிடையாது. சூடு சுரணை முதலான குணங்களும் கிடையாது. உங்கள் வார்த்தைகளில் நேர்மையும் கிடையாது

2. அப்படியே உங்களில் யாருக்காவது அறிவும் நேர்மையும் இருந்து, அவர் நீதிமன்றத்தில் வாதாடி, நீதிமன்றமும் அந்தக் கருத்துகளை ஏற்றுக் கொண்டு மனு ஸ்மிருதியைத் தடை செய்து விட்டால்….

– என்றெல்லாம் அத்தைக்கு மீசை முளைத்தால் கற்பனையில் மிதக்க வேண்டாம் காரணம், நீங்கள் இந்த விஷயத்தில் நீதிமன்றம் போவதை உங்களுக்கு ரொட்டித் துண்டு வீசுபவர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள்.

பிறகு என்னவாம், நீதிமன்றம் மனு ஸ்மிருதியைத் தடை செய்தால் இந்தியாவில் பைபிள், குரான், ஹதிஸ்களின் கதி என்ன ஆகும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் – அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு நிஜமாகவே அறிவு உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories