December 5, 2025, 9:29 PM
26.6 C
Chennai

கொரோனா முடக்கத்துக்கு பரிகாரமாக… ஆம்னி பஸ்கள் வசூல் வேட்டை!

omni-bus-station-madurai
omni-bus-station-madurai

கொரோனா காலத்தில் முடங்கிப் போயிருந்த பஸ் போக்குவரத்தால் வருமானம் இழந்திருந்த நிலையில், பண்டிகை தொடங்கியுள்ள இந்த நிலையில் விட்டதைப் பிடிக்கும் வழியாக, கொள்ளை லாபத்தில் பஸ்களை இயக்க பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி ஆம்னி பஸ்கள் ஏய்த்துக் கட்டி வருகின்றன.

வருடம் தோறும் பண்டிகைக் காலங்களில் ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை என்பது ஒரு பிரச்னையாகவே உள்ளது. தீபாவளி, பொங்கல் என்று முக்கியப் பண்டிகைகளை தங்களுடைய சொந்த ஊரில் வைத்துக் கொண்டாட வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்குமே இருக்கும்! அந்த ஆசையைக் காசாக்கி வருகின்றனர் தனியார் ஆம்னி பஸ் முதலாளிகள்!

நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பது, என்னதான் அரசுத்துறை ஒவ்வொரு முறை அபாய எச்சரிக்கை கொடுத்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்துக்கு வசூல் வேட்டை நடத்துவது என்று ஆம்னி பஸ்கள் போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த முறை கொரோனா கால முடக்கம் வேறு வந்துவிட்டதால், இப்போது ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகப் புலம்புகின்றனர் பயணிகள்.

karur accident omni bus hits lorry 25 injured
karur accident omni bus hits lorry 25 injured

கொரோனா அச்சம் காரணமாக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட இந்த ஆண்டு குறைவான பேருந்துகளே தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பிலும் இயக்கப் பட்டு வருகின்றன. கடந்த மாதம் பஸ்களை இயக்குவதற்கு பச்சை சிக்னல் கொடுக்கப் பட்ட பின்னர், தயங்கித் தயங்கி பஸ்களை இயக்கி வந்தனர் ஆம்னி பஸ் முதலாளிகள். காரணம், பொதுமக்களின் போக்குவரத்து பெருமளவில் இல்லாததுதான்.

அதனால், இந்த ஆண்டு குறைந்த அளவே ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்கெனவே நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், இப்போதும்கூட பணியிடங்களுக்குத் திரும்பவில்லை! கல்லூரிகள் இன்னும் இயங்கவில்லை. பெரும்பாலும் அதிக விலையில் டிக்கெட் என்றாலும் கொடுத்து பயணிக்கும் ஐ.டி., துறை பணியாளர்களும் வீடுகளில் இருந்தே பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த ஆண்டு தீபாவளியைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்து தொழில் பெரும் நஷ்டம்தான் என்கிறது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்.

இருப்பினும், தற்போது தனியார் பேருந்து இணையதளங்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேரில் சென்று பயண சீட்டை வாங்குபவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

busfares
busfares

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories