May 19, 2025, 11:03 PM
29.2 C
Chennai

தில்லி ஜே.என்.யு., பல்கலை.,யை சுவாமி விவேகானந்தர் பல்கலை என பெயர் மாற்ற வேண்டும்: சி.டி.ரவி !

jnu-vivekananda-2
jnu-vivekananda-2

பாஜக., தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான சி.டி.ரவி திங்கள் கிழமை அன்று தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை (ஜே.என்.யூ) சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பாரதம் என்ற கருத்துருவுக்காக முன் நின்றவர் சுவாமி விவேகானந்தர். அவரது தத்துவமும் மதிப்பீடுகளும் “பாரதத்தின் வலிமையை” பறை சாற்றுகின்றன. எனவே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சுவாமி விவேகானந்தர் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்வது மிகச் சரியானது. பாரதத்தின் தேசபக்தி மிக்க மகானின் வாழ்க்கை, வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் “என்று ட்வீட் செய்துள்ளார் சி.டி.ரவி.

நான்கு தினங்களுக்கு முன்னர் தான், பிரதமர் நரேந்திர மோடி, ஜே.என்.யூ வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர், மக்களுக்கு கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் சித்தாந்தம் தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் நாட்டை ஆதரிப்பதையும் எதிர்க்காத வகையிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜே.என்.யு., வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்றும், சுவாமி விவேகானந்தர் அனைவரிடமும் பார்க்க விரும்பும் தைரியத்தையும் இரக்கத்தையும் அது வளர்க்கும் என்றும் பிரதமர் மோடி அப்போது கூறினார்.

ALSO READ:  IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நீண்ட காலமாக இடதுசாரிகளின் புகலிடமாகவே கருதப்படுகிறது. அதனுடன் இணைந்த மாணவர் சங்கங்கள், வளாகத்தில் பல்வேறு தளங்களிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.

jnu-vivekananda
jnu-vivekananda

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு ஏபிவிபி உள்ளிட்ட பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இவர்களை “தேச விரோத” உணர்வைத் தூண்டிவிடும் இடதுசாரி மாவோயிஸ அமைப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சி.டி.ரவி தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாகவே நேரு குடும்பப் பெயர்கள் கொண்ட சில திட்டங்களின் பெயர்கள் பாஜக., ஆட்சியில் மாற்றப் பட்டுள்ளன. எனவே ஜேஎன்யு பெயரையும் எஸ்வியு என மாற்றலாம் என்ற கருத்துகள் இப்போது வலம் வருகின்றன!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

Topics

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

பஞ்சாங்கம் மே 19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories