தில்லி ஜே.என்.யு., பல்கலை.,யை சுவாமி விவேகானந்தர் பல்கலை என பெயர் மாற்ற வேண்டும்: சி.டி.ரவி !

jnu-vivekananda-2
jnu-vivekananda-2

பாஜக., தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான சி.டி.ரவி திங்கள் கிழமை அன்று தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை (ஜே.என்.யூ) சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பாரதம் என்ற கருத்துருவுக்காக முன் நின்றவர் சுவாமி விவேகானந்தர். அவரது தத்துவமும் மதிப்பீடுகளும் “பாரதத்தின் வலிமையை” பறை சாற்றுகின்றன. எனவே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சுவாமி விவேகானந்தர் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்வது மிகச் சரியானது. பாரதத்தின் தேசபக்தி மிக்க மகானின் வாழ்க்கை, வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் “என்று ட்வீட் செய்துள்ளார் சி.டி.ரவி.

நான்கு தினங்களுக்கு முன்னர் தான், பிரதமர் நரேந்திர மோடி, ஜே.என்.யூ வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர், மக்களுக்கு கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் சித்தாந்தம் தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் நாட்டை ஆதரிப்பதையும் எதிர்க்காத வகையிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜே.என்.யு., வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்றும், சுவாமி விவேகானந்தர் அனைவரிடமும் பார்க்க விரும்பும் தைரியத்தையும் இரக்கத்தையும் அது வளர்க்கும் என்றும் பிரதமர் மோடி அப்போது கூறினார்.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நீண்ட காலமாக இடதுசாரிகளின் புகலிடமாகவே கருதப்படுகிறது. அதனுடன் இணைந்த மாணவர் சங்கங்கள், வளாகத்தில் பல்வேறு தளங்களிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.

jnu-vivekananda
jnu-vivekananda

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு ஏபிவிபி உள்ளிட்ட பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இவர்களை “தேச விரோத” உணர்வைத் தூண்டிவிடும் இடதுசாரி மாவோயிஸ அமைப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சி.டி.ரவி தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாகவே நேரு குடும்பப் பெயர்கள் கொண்ட சில திட்டங்களின் பெயர்கள் பாஜக., ஆட்சியில் மாற்றப் பட்டுள்ளன. எனவே ஜேஎன்யு பெயரையும் எஸ்வியு என மாற்றலாம் என்ற கருத்துகள் இப்போது வலம் வருகின்றன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories