தில்லி ஜே.என்.யு., பல்கலை.,யை சுவாமி விவேகானந்தர் பல்கலை என பெயர் மாற்ற வேண்டும்: சி.டி.ரவி !

jnu-vivekananda-2
jnu-vivekananda-2

பாஜக., தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான சி.டி.ரவி திங்கள் கிழமை அன்று தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை (ஜே.என்.யூ) சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பாரதம் என்ற கருத்துருவுக்காக முன் நின்றவர் சுவாமி விவேகானந்தர். அவரது தத்துவமும் மதிப்பீடுகளும் “பாரதத்தின் வலிமையை” பறை சாற்றுகின்றன. எனவே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சுவாமி விவேகானந்தர் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்வது மிகச் சரியானது. பாரதத்தின் தேசபக்தி மிக்க மகானின் வாழ்க்கை, வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் “என்று ட்வீட் செய்துள்ளார் சி.டி.ரவி.

நான்கு தினங்களுக்கு முன்னர் தான், பிரதமர் நரேந்திர மோடி, ஜே.என்.யூ வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர், மக்களுக்கு கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் சித்தாந்தம் தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் நாட்டை ஆதரிப்பதையும் எதிர்க்காத வகையிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜே.என்.யு., வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்றும், சுவாமி விவேகானந்தர் அனைவரிடமும் பார்க்க விரும்பும் தைரியத்தையும் இரக்கத்தையும் அது வளர்க்கும் என்றும் பிரதமர் மோடி அப்போது கூறினார்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நீண்ட காலமாக இடதுசாரிகளின் புகலிடமாகவே கருதப்படுகிறது. அதனுடன் இணைந்த மாணவர் சங்கங்கள், வளாகத்தில் பல்வேறு தளங்களிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.

jnu-vivekananda
jnu-vivekananda

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு ஏபிவிபி உள்ளிட்ட பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இவர்களை “தேச விரோத” உணர்வைத் தூண்டிவிடும் இடதுசாரி மாவோயிஸ அமைப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சி.டி.ரவி தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாகவே நேரு குடும்பப் பெயர்கள் கொண்ட சில திட்டங்களின் பெயர்கள் பாஜக., ஆட்சியில் மாற்றப் பட்டுள்ளன. எனவே ஜேஎன்யு பெயரையும் எஸ்வியு என மாற்றலாம் என்ற கருத்துகள் இப்போது வலம் வருகின்றன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories