தர்ணாவில் பங்குபெற ரூ.200! பேசியபடி பணம் வராததால் பெண்கள் ஆத்திரம்!

Published:

protesters
protesters
  • தார்ணாவுக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் பணம்…
  • பணம் கொடுக்காததால் பெண்கள் கோபம்.. ஆத்திரம்…

தர்ணா செய்வதற்கு வந்தால் பணம் கொடுப்போம் என்று கூறி அழைத்து வந்துவிட்டு.. தர்ணா முடிந்த பின்னர் பணம் கொடுக்காததால் டிஆர்எஸ் தலைவர்கள் மீது பெண்கள் ஆத்திரம் அடைந்தார்கள்.

மத்திய அரசு எடுத்து வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக மெதக் மாவட்டம் தூப்ரான் முனிசிபாலிடியில் உள்ள கரீம்குடாவில் 44 வது தேசிய நெடுஞ்சாலையை அடைத்து போராட வேண்டுமென்று தெலங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர்கள் தீர்மானித்தார்கள். நிகழ்ச்சிக்கு விவசாய சங்கத் தலைவர்களோ விவசாயிகளோ பெரிய அளவில் வரவில்லை. ஆனால் அமைச்சர் ஹரீஷ் ராவு பெரிய அளவில் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்று விரும்புவார். அதனால் டிஆர்எஸ் தலைவர்கள் உள்ளூரில் உள்ள கல்லுடைக்கும் பெண்களில் 20 பேரை ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி போராட்டத்திற்கு அழைத்து வந்தார்கள்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

தர்ணாவுக்குச் சென்றால் பணம் கொடுப்பதாகக் கூறியதால் மேலும் 30 பெண்கள் தாமாகவே முன்வந்து நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்கள். டிஆர்எஸ் தலைவர்கள் தாங்கள் நேரில் அழைத்தவர்களுக்கு மட்டுமே பணம் அளித்ததால் மீதம் இருந்த 30 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

டிஆர்எஸ் தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இறுதியில் பெண்களுக்கு பணம் கொடுக்காமலே தலைவர்கள் திரும்பிப் போனதால் அவர்கள் ஆத்திரமடைந்து கூச்சலிட்டார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img