டிவிட்டரில் டிரெண்ட் ஆன… #எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் ஹேஷ்டாக்!

vijay-actor
vijay-actor

எடப்பாடி காலில் விழுந்த விஜய் என்ற ஹேஷ்டேக் இன்று டிவிட்டர் சமூகத் தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை பொங்கலுக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில் திரை அரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கோரி முதல்வரை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் விஜய். இந்த திடீர் சந்திப்புதான் இப்போது டிவிட்டர் சமூகத் தளத்தில் பரபரப்பான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்க, ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்க விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா பிரச்னை காரணத்தால் திரையிடப் படுவது தள்ளிப்போனது. கொரோனா காலகட்டத்தில் உருவான வேறு சில படங்கள், ஆன்லைன் வழியே ஓடிடி தளத்தில் வெளியாகின. இது போல் மாஸ்டர் படமும் ஓடிடி.,யில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மாஸ்டர் படம் தியேட்டரில்தான் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இதனிடையே, கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டன. அப்போது, தீபாவளியை ஒட்டி தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டன. ஆனால் ரசிகர்கள் தியேட்டர்களுக்குச் செல்ல ஆர்வம் காட்ட வில்லை. இதனால் முன்னணி நடிகர்களின் படங்கள்கூட தியேட்டர்களில் வெளியாகவில்லை.

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

இந்நிலையில் அரசின் கட்டுப்பாடுகளின்படி 50 சத இருக்கைகளுடன் படம் வெளியிட்டால் நஷ்டம் ஏற்படும் என்றும், 100 சத இருக்கைகளுடன் படம் வெளியானால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்றும் திரையரங்கு உரிமயாளர்கள் கூறினர். இதை அடுத்து இந்தக் கோரிக்கையுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார் ‘மாஸ்டர்’ நாயகன் விஜய்.

இதை அடுத்து, சமூகவலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் பரபரப்பாகப் பகிரப்பட்டன.

#எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் என்ற ஹேஷ்டேக் 50 ஆயிரம் ட்வீட் என ட்ரெண்ட் ஆனது. #MasterPongal #MasterVIJAYEnteringNorth, #MasterUpdate #SaviourOfKollywoodVIJAY என்ற ஹேஷ்டாக்குகளும் பகிரப் பட்டன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories