February 11, 2025, 6:04 PM
30.4 C
Chennai

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்!

pongal-parisu-scheme
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டு அருகே பாண்டி பஜாரில் உள்ள பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கப் பட்டது.

மதுரை மாவட்டத்திலுள்ள 1398 நியாயவிலைக் கடைகளில் 8,88,385 தகுதியுள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் ரூபாய் 2,500 உடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களின் அடிப்படையில் சமூக இடைவெளியை பின்பற்றி காலை, மாலை என இருவேளைகளில் பொங்கல்பரிசு தொகுப்பானது வழங்கப்பட்டுவருகிறது.

டோக்கன் மூலமாக பொங்கல் பரிசை பெற இயலாதவர்கள் வரும் 13ஆம் தேதி அந்தந்த ரேசன்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

முன்னதாக, தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா ரூ.2,500 பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. இதற்காக, 5,605 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அவை ரேஷன் கடைகள் வாயிலாக ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கார்டுதாரர்கள் எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற டோக்கனை, அவரவர்களின் வீடுகளில் டிச., 26 முதல் 30ஆம் தேதி வரை, ரேஷன் ஊழியர்கள் வழங்கினர். அதனடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம், அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று தொடங்கியது. வரும் 13ஆம் தேதி வரை, ஒவ்வொரு ரேஷன் கடையிலும், காலையில் 100; மதியம் 100 என மொத்தம் 200 கார்டுதாரர்களுக்கு வழங்கப்படஉள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories