டிரம்ப் Vs டிவிட்டர்: மோடிக்கும் ஓர் எச்சரிக்கைதான்!

trump-vs-twitter
trump-vs-twitter

அமெரிக்காவில் இடதுகளும், சமூக வலைத் தள பெரு நிறுவனங்களின் பெரு முதலாளிகளும் இணைந்து நடத்தும் இரட்டை நிலை அரசியல் கவனிக்க தக்கது.

இன்றைய உயரிய தொழில்நுட்பம் நிறைந்த உலகில்..மக்களை இணைக்கும் / தொடர்புபடுத்தும் சமூக வலைத்தளங்களான Google, Twitter, whatsapp, போன்ற பல ஆகப்பெரும் தனியார் பெருநிறுவனங்கள்…மிகப்பெரும் அரசியல் ஆதிக்க சக்திகளாக வளர்ந்து நிற்கின்றன.

அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்களுக்கும் கட்டாயம் என்பதால் இருக்கும் மேல்பூச்சான பொறுப்புணர்வும், பொறுப்பேற்பும் கூட..இப் பெருநிறுவனங்களுக்கு கிடையாது.

அமெரிக்க சட்டம் Communications Decency Act -Section 230 .. தனி நபர்களோ / கூட்டாகவோ/ குழுவாகவோ இணைய வழி /சமூக வலைத்தளங்கள் வழியாக பதியும்/ பரிமாறிக் கொள்ளும் எந்த ஒரு கருத்துக்கும் …அந்தந்த சமூக வலைத்தளங்கள் பொறுப்பேற்க தேவையில்லை என்று சொல்கிறது.

இதனால்…அரசுக்கு & அமைப்புகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் வெறுப்பு பிரச்சாரம், மத வெறுப்பு பிரச்சாரம், தனி நபர் வெறுப்பு பிரச்சாரம் என்று வரைமுறையின்றி எது நடந்தாலும்..அவை எதுவும்…அந்தந்த வலைதள நிறுவனங்களின் பொறுப்பாகாது.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

இந்த அசட்டுத்தனமான சட்டத்தை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார் என்றாலும்..இறுதியில்…. அமெரிக்க அதிபரின் கணக்கை முடக்குமளவிற்கு அதிகாரம் பெற்றதாக…இத் தனியார் நிறுவனங்கள் வளர்ந்து நிற்கின்றன என்பதே உண்மை !

மேலும், அமெரிக்காவில் .. twitter போன்றவற்றின் ஒருதலைப் பட்சமான monopoly +அரசியல் அதிகாரத்தை தடுக்கும் வகையில்.. இவற்றுக்கு போட்டியாக Gab, Parler போன்றவை உருவாக்கப்பட்டு…அவற்றை பெருமளவு அமெரிக்க மக்களும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

Google, twitter, apple போன்றவை ஒருங்கிணைந்து இவற்றை தங்களுடைய play store-ல் நீக்கியும், பயன்பாட்டை தடை செய்தும் முடக்குகின்றன.

இதற்கு கூறப்படும் காரணம்..இத் தளங்களின் வாயிலாக கலவரம் செய்வதற்கான ஒருங்கிணைப்புகள், செயல்பாடுகள் நடக்கின்றன என்பதாகும்.

twitter முழுவதும் இத்தகைய பேச்சுகளும் ஒருங்கிணைப்புகளும் கொட்டிக் கிடக்கிறதே !?! என்கிற கேள்விக்கு பதிலில்லை !

உலகின் பிற நாடுகளின் பிரதமர் /அதிபர்கள் ‘சிலர்’ …பிரான்ஸ் அதிபர் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக பதிவிட்ட கலவரத்தை தூண்டும் பதிவுகள் உள்ளனவே !?! என்கிற கேள்விக்கும் பதிலில்லை ! அமெரிக்காவும், டிரம்ப்-ம் எப்படியும் போகட்டும் !

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஆனால் twitter, fb + whatsapp, google, apple போன்ற பெரு முதலாளிகள்… தங்களுடைய அரசியல் சார்புக்கு ஏற்ப.. அரசுகளை வளைக்கும் / வீழ்த்தும் அளவிற்கு விஸ்வரூபமெடுத்து நிற்கிறார்கள் என்கிற உண்மையை …உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் [ சீனா, வட கொரியா தவிர 🙂 ] …அமெரிக்க சம்பவங்கள் எச்சரிக்கை மணியாக ஒலித்திருக்கிறது.

இந்த நிலையில்…இந்தியாவில் twitter-க்கான மாற்றாக களத்திற்கு வந்திருக்கும் tooter-ல் பிரதமர் மோடி உட்பட பலரும் பதிவுகளை இடுகிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால்…tooter பாதுகாப்பானதாக இல்லை / twitter-ஐ அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்திருக்கிறார்கள் / இந்தியாவில் உருவாக்கப்படவில்லை என்றெல்லாம்…இதற்கு எதிராக பிரச்சாரங்கள் ..quint போன்ற வலைத்தளங்களில் முழு வேகத்தில் நடக்கிறது 🙂

டைனோசர் போல வளர்ந்து நிற்கும் google, twitter whatsapp போன்றவற்றிற்கு… களத்தில்… அதற்கு ஈடான போட்டியாளர்களை உருவாக்கினால் மட்டுமே …

அரசுகளையே புரட்டிப் போடும் சர்வாதிகாரத்தின் உலகளாவிய வலைப்பின்னலில் சிக்காமல் உலகின் ஜனநாயக நாடுகள் தவிர்க்க & தப்பிக்க முடியும்.

  • பானு கோம்ஸ்
ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories