February 8, 2025, 8:57 PM
28.2 C
Chennai

விவசாயிகளின் சுமையை குறைக்கவே விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளார் பிரதமர்!: மோடியின் சகோதரர்!

prahlad-modiji
prahlad-modiji

விவசாயிகளின் தோள்பட்டை சுமையை குறைக்கவே மோடி பாடுபட்டு வருகிறார். விவசாயிகளின் சுமையை குறைக்கவே மோடி விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜனா அமைப்பின் தேசிய தலைவரும், பிரதமர் மோடியின் இளைய சகோதரருமான பிரகலாத் தாமோதிரதாஸ் மோடி மதுரை மடீசியா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜனா அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக பிரகலாத் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், தமிழகத்தின் ஹீரோ நடிகரான ரஜினிகாந்திற்கு என் தரப்பிலும், பிரதமர் தரப்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.பாரதப்பிரதமரையும் அவரது நிர்வாகத்தையும் மனப்பூர்வமாக  ஏற்றுக் கொண்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

சாதாரண குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து பிரதமராகியுள்ளார் மோடி. அதனால் தான் ஏழ்மையான மக்களோடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை எளிய மக்களின் எண்ணங்களை, கனவுகளை பிரதமர் நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.சாதாரண ஏழை எளிய மக்கள் வாழ்க்கையை உயர்த்த பிரதமர் அல்லும் பகலும் உழைத்து வருகிறார்.

ஏழை மக்களுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அவர்களை சென்று சேரவில்லை. பிரதமரின் திட்டங்களை மக்களிடம் இருந்து தூரப்படுத்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். பிரதமர் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க காங்கிரஸ் தலைவர்கள் தடை விதிக்க நினைக்கின்றனர். பிரதமர் திட்டங்களிலிருந்து மக்களை விலக்கி வைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

பிரதமரின் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 22லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில், மேலும் உறுப்பினர்களை அதிகப்படுத்த உள்ளோம்.ஜன் கல்யாண்கரி யோஜனா திட்டத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்போம்.

இந்த யோஜனா திட்டம் இல்லாமல் 40 யோஜனா திட்டங்களையும் செயல்படுத்துவோம். மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். தமிழக மக்கள் பாசமானவர்கள். மதுரைக்காரர்கள் பாசமானவர்கள். விவசாயிகளுக்காக என்றுமே பாடுபடுபவர் மோடி.

விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். அது கீழ் மட்டம் வரை செல்வதில்லை. விவசாயிகளின் தோள்பட்டை சுமையை குறைக்கவே மோடி பாடுபட்டு வருகிறார். விவசாயிகளின் சுமையை குறைக்கவே மோடி விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.ஒரே நாளில் அடித்தட்டு மக்கள் வரை இந்த திட்டங்களை கொண்டு போக முடியாது எனக்கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories