திருவாங்கூர் கருட சேவைக்கு அனுமதி தர இமக., கோரிக்கை!

kumbakonan garudasevai16
garudasevai16

கருட சேவை உற்சவத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்திற்குட்பட்ட திருநாங்கூரில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களின் கருடசேவை உற்சவம் நடத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திட வேண்டும்.

108 திவ்ய தேச பெருமாள் கோயில்களில் 11 திவ்ய தேச திருக்கோயில்கள் அமைந்துள்ள புண்ணிய பூமியான திருநாங்கூரில் பாரம்பரியமாக
கருட சேவை உற்சவம் தை மாத அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுவது வழக்கம்.
திருநாங்கூரில் உள்ள திருக்கோயில் தெய்வங்களான அருள்மிகு நாராயண பெருமாள், குடமாடும் கூத்தர் பெருமாள்,
செம்பொன்னரங்க பெருமாள்,
பள்ளி கொண்ட பெருமாள்,
அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருமாள், வைகுந்த நாத பெருமாள்,
மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய பெருமாள் சுவாமிகள் அங்குள்ள
மணி மாடக்கோயில் முன் எழுந்தருளும் போது திருமங்கை ஆழ்வாரையும் எழுந்தருளச்செய்து பட்டாச்சார்யார்களால் பாசுரங்கள் பாடப்பட்டு மகா தீபாராதனை செய்து சுவாமிகளின் வீதியுலா வெகுச் சிறப்பாக பக்தி பரவசத்துடன் நடைபெறும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கருடசேவை உற்சவம் இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட வேண்டும். ஆண்டுதோறும் ஒரு மாதத்திற்கு முன்பே விழாவிற்கான ஏற்பாடுகள் உற்சவ கமிட்டியினரால் செய்யப்படும்.

ஆனால், இந்த ஆண்டு இன்றைய தேதி வரையில் உற்சவத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாதது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் உற்சவத்தை தவிர்க்க நினைப்பதாக அறிகிறோம்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின்
இணை ஆணையர் அவர்களிடம் பேசியபோது வருகிற 27.01.2021 புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் உரிய முடிவெடுப்பதாக கூறினார்.


கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பொது விஷயங்களில் அனுமதியளித்ததோடு கோயில் தொடர்பான விழாக்களை நடத்திக் கொள்ள எந்த விதமான தடையும் இல்லை எனக் கூறியுள்ளது.

மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்தவ விழாக்கள், ஜல்லி கட்டு, பேருந்துகள் மற்றும் திரையரங்குகள் இயக்கம் என மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட சூழலில் பாரம்பரிய விழாவை நடத்தாமல் தவிர்க்க நினைப்பது தவறான முன்னுதாரணமாகி விடும்.


கொரோனா தொற்று தொடர்பாக அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சில வரையறைகளுடன் கருடசேவை உற்சவம் நடைபெற மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

  • கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் ;
    மாநில செயலாளர்,
    இந்து மக்கள் கட்சி ..-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories