வேலூர் இப்ராஹிம் மீது தாக்குதல்: அர்ஜுன் சம்பத் கண்டனம்!

arjunsampath
arjunsampath

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

வேலூர் இப்ராஹிம் அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் தாக்கி கொலை செய்ய முயற்சி!

முன்கூட்டியே தங்களது முகநூல் பதிவுகள் வழியாக இத்தகைய வன்முறை தாக்குதலை நடத்தப் போகிறோம், என அறிவித்து காவல்துறைக்கும் தகவல் தெரிந்தும் வேலூர் இப்ராஹிம் கொடைக்கானலில் தாக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்கள் இரண்டு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்து குடியரசு தின விழாவில் பங்கேற்ற வேலூர் இப்ராஹிம் கடுமையாக தாக்கி உள்ளார்கள். அவரது தனி பாதுகாவலர் காவல் துறையை சார்ந்த வர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்

பி.எஸ்.ஒ. ஒருவருக்கு ஏழு தையல்கள் போடக்கூடிய அளவிற்கு தலையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இப்ராகிம் அவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது வேலூர் இப்ராஹிமை காப்பாற்ற முயற்சி செய்த காவல்துறையினரும் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாவட்ட காவல்துறை அலட்சியம் செய்த காரணத்தினால் இந்த கொடும் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

முன்கூட்டியே தகவல் தெரிந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் தமிழக காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தற்போது தாக்குதல் நடத்தியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க தமிழக போலீசாருக்கு விடப்பட்டு இருக்கின்ற சவால். தமிழக போலீசார் வெட்கித் தலைகுனிய வேண்டும். காவல்துறை அதிகாரிகளையும் வேலூர் இப்ராஹிமையும் தாக்கி காயப்படுத்தி உள்ள வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு காரணமான நாம் தமிழர் கட்சி எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

இந்தத் தாக்குதலை கொடைக்கானலில் உள்ள ஜமாத்தார்கள் கண்டித்திருக்கிறார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இது விஷயத்தில் நேரடியாக கவனம் கொடுத்து தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த அவமானத்தை சரி செய்ய வேண்டும்.

வன்முறையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட நாம்தமிழர், எஸ்டிபிஐ கட்சியினரை தடைசெய்ய வேண்டும். இந்த தாக்குதலில் தொடர்புடைய மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள அத்தனை பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

வேலூர் இப்ராஹிம் மீது நடந்து இருக்கின்ற தாக்குதலை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்நிலை தொடருமானால் ஜனநாயக அறவழி போராட்டங்களை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories