வேலூர் இப்ராஹிம் மீது தாக்குதல்: அர்ஜுன் சம்பத் கண்டனம்!

arjunsampath
arjunsampath

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

வேலூர் இப்ராஹிம் அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் தாக்கி கொலை செய்ய முயற்சி!

முன்கூட்டியே தங்களது முகநூல் பதிவுகள் வழியாக இத்தகைய வன்முறை தாக்குதலை நடத்தப் போகிறோம், என அறிவித்து காவல்துறைக்கும் தகவல் தெரிந்தும் வேலூர் இப்ராஹிம் கொடைக்கானலில் தாக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்கள் இரண்டு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்து குடியரசு தின விழாவில் பங்கேற்ற வேலூர் இப்ராஹிம் கடுமையாக தாக்கி உள்ளார்கள். அவரது தனி பாதுகாவலர் காவல் துறையை சார்ந்த வர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்

பி.எஸ்.ஒ. ஒருவருக்கு ஏழு தையல்கள் போடக்கூடிய அளவிற்கு தலையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இப்ராகிம் அவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது வேலூர் இப்ராஹிமை காப்பாற்ற முயற்சி செய்த காவல்துறையினரும் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாவட்ட காவல்துறை அலட்சியம் செய்த காரணத்தினால் இந்த கொடும் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

முன்கூட்டியே தகவல் தெரிந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் தமிழக காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தற்போது தாக்குதல் நடத்தியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க தமிழக போலீசாருக்கு விடப்பட்டு இருக்கின்ற சவால். தமிழக போலீசார் வெட்கித் தலைகுனிய வேண்டும். காவல்துறை அதிகாரிகளையும் வேலூர் இப்ராஹிமையும் தாக்கி காயப்படுத்தி உள்ள வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு காரணமான நாம் தமிழர் கட்சி எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

இந்தத் தாக்குதலை கொடைக்கானலில் உள்ள ஜமாத்தார்கள் கண்டித்திருக்கிறார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இது விஷயத்தில் நேரடியாக கவனம் கொடுத்து தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த அவமானத்தை சரி செய்ய வேண்டும்.

வன்முறையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட நாம்தமிழர், எஸ்டிபிஐ கட்சியினரை தடைசெய்ய வேண்டும். இந்த தாக்குதலில் தொடர்புடைய மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள அத்தனை பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

வேலூர் இப்ராஹிம் மீது நடந்து இருக்கின்ற தாக்குதலை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்நிலை தொடருமானால் ஜனநாயக அறவழி போராட்டங்களை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories