அனாதை பிணத்தை சுமந்து இறுதிச் சடங்கு நடத்திய பெண் எஸ்ஐ.,!

Published:

lady-si-done-final-rituals
lady-si-done-final-rituals

ஒரு அனாதை சடலத்தை தன் தோள்களில் சுமந்து சென்று அந்திமக் கிரியைகளை கூட நடத்தி மனிதாபிமானத்தை நிரூபித்தார் ஒரு பெண் எஸ்ஐ. அவருடைய மனிதாபிமானத்தை புகழ்ந்து பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாச -காசிபுக்க முனிசிபாலிடி எல்லையில் அடவி கொத்தூரு கிராம வயலில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் ஒன்று கிடந்தது. அதுகுறித்து செய்தி அறிந்த காசிபுக்க எஸ்ஐ சிரீஷா சம்பவ இடத்திற்கு வந்தார். அந்த உடலை எடுத்துச் செல்வதற்கு முன்வரவேண்டும் என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

யாரும் முன்வராததால் தானே முன் சென்று வேறு ஒருவரின் உதவியோடு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் சுமந்து சென்றார். உள்ளூரில் இருந்த லலிதா சாரிடபிள் டிரஸ்டிடம் உடலை ஒப்படைத்தார். அதன் நிர்வாகத்தினரான சின்னி கிருஷ்ணாவோடு சேர்ந்து தகன கிரியைகளை நடத்தினார் எஸ்ஐ.

இந்த விஷயத்தை அறிந்த தெலங்காணா மாநில போலீசார் எஸ்ஐ கொத்த சிரீஷாவுக்கு பிரத்தியேகமாக பாராட்டுதல்களை தெரிவித்தார்கள்.

அவருடைய சேவைகளைப் புகழ்ந்து சல்யூட் மேடம் என்று ட்வீட் செய்தார்கள். பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும் என்று கூறும் சமுதாயத்தில், இவர் தேர்ந்தெடுத்த தொழிலுக்கும் உடுத்திய யூனிஃபார்முக்கும் செய்கின்ற பணிக்கும் கர்வமாக சல்யூட் செய்கிறோம் என்று குறிப்பிட்டார்கள்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

தெலங்காணா மாநில போலீசாரின் ட்வீட் குறித்து நெட்டிசன்கள் பெரிய அளவில் பதில் வினையாற்றி உள்ளார்கள். மாநிலங்கள் வேறானாலும் போலீஸ் என்ற தொழில் இரண்டு மாநில போலீசார்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது என்று பாராட்டியுள்ளார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img