December 6, 2025, 3:31 AM
24.9 C
Chennai

வீடுகட்ட முன்பண உச்சவரம்பு 40 லட்சமாக உயர்வு! ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்!

housing-loan
housing-loan

அரசு ஊழியா்கள் வீடு கட்டுவதற்கான முன்பண உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளா் கார்த்திகேயன் பிறப்பித்தார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், கட்டிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றைப் பெற விரும்பும் அகில இந்திய குடிமைப் பணியைச் சேர்ந்த அதிகாரிகள் முன்பணமாக அரசிடம் இருந்து பெற வழி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் ரூ.40 லட்சம் வரை முன்பணமாக பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகை ரூ.60 லட்சமாக உயா்த்தப்படுகிறது.

இதேபோன்று, தமிழக அரசு ஊழியா்களுக்கான முன்பண உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த முன்பண உச்சவரம்பு உயா்வு உத்தரவானது உடனடியாக அமலுக்கு வருகிறது, இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்ட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மறப்போம், மன்னிப்போம்’ என்ற உயரிய கருத்தை மனதில் வைத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, வழக்குகள் அனைத்தையும், அரசு கைவிடுவதாகவும், ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்ப பெறப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வீடு கட்டுவதற்கான முன்பண உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories