December 6, 2025, 8:16 AM
23.8 C
Chennai

பாஜக., ஆதரவு பெண் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து… ஜெகன் கட்சியினர் அடாவடி!

nellur-dt2
nellur-dt2

நெல்லூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களின் அடாவடித்தனம். நாமினேஷன் செய்யச் சென்ற பிஜேபி ஆதரவு பெண் வேட்பாளருக்கு தடைகள்…

நெல்லூர் மாவட்டம் சங்கம் மண்டலம் சித்திபுரம் பஞ்சாயத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களின் அடாவடித்தனம் எல்லை மீறி விட்டது. பிஜேபி ஆதரவாளர் நாமினேஷன் செய்வதற்காக சென்றபோது தடை ஏற்படுத்தினார்கள்.

சித்திபுரம் சர்பஞ்ச் பதவியை பிசி பிரிவைச் சேர்ந்த பெண் வேட்பாளருக்கு ரிசர்வ் செய்துள்ளார்கள். இங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் இறுதி நாளான வியாழக்கிழமை அன்று ஒரே ஒரு நாமினேஷன் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வியாழன் மதியம் 3 மணி அளவில் பிஜேபி ஆதரவாளர் நெல்லூர் சுசீலாம்மா தன் கணவர் நரசய்யாவோடு சேர்ந்து நாமினேஷன் செய்வதற்கு சித்திபுரம் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் நாமினேஷன் பத்திரங்களை தயார் செய்து கொண்டிருந்த சமயத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் அந்த பேப்பர்களை பலவந்தமாக பிடுங்கிக் கொண்டார்கள். இந்த செய்தியை போலீசாருக்கு தெரிவித்ததால் மீண்டும் நாமினேஷன் பேப்பர்களை தயார் செய்து கொண்டு நாலே முக்கால் மணிக்கு போலீசாருடன் சேர்ந்து நாமினேஷன் நிலையத்திற்கு சென்றார்.

nellur-dt
nellur-dt

அப்போது ஒய்எஸ்ஆர் கட்சி மண்டல கன்வீனர் ரகுநாதரெட்டி அவர்களை குறுக்கே நின்று தடுத்தார். எஸ்ஐ ஸ்ரீகாந்த் தலையிட்டு அவர்களை விரட்டிவிட்டு நாமினேஷன் செய்வதற்கு அழைத்துச் சென்றபோது அங்கு பேப்பர்களை சமர்ப்பிக்கும் அறைக்குள் செல்ல முடியாமல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிருந்து கதவை தாழ்பாள் போட்டார்கள். அதனால் பிஜேபி ஆதரவாளர் சுசீலாம்மா அங்கேயே உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதற்குள் எஸ்ஐ, அறையில் இருந்த பெண் அதிகாரியோடு பேசி தாழ்ப்பாளை நீக்கி உள்ளே அழைத்துச் சென்றார். ஆனால் ஒய் எஸ்ஆர் தலைவர்கள் மீண்டும் அங்கு சென்று பெண் அதிகாரியை எச்சரித்தனர். 4.50 மணிக்கு உள்ளே வந்தால் எவ்வாறு நாமினேஷன் ஏற்றுக்கொள்வீர்கள்? நீங்கள் தெலுங்குதேசம் கட்சியின் ஏஜென்டுகளா என்று கூச்சலிட்டனர். இறுதியில் நேரம் தாண்டி விட்டதால் அவருடைய நாமினேஷன் பேப்பர்களை எடுத்துக்கொள்ள இயலாது என்று தேர்தல் அதிகாரி மல்லிகார்ஜுன் மறுத்துவிட்டார். அதனால் சுசீலாம்மா அங்கேயே கண்ணீர் விட்டு கலங்கினார். மிகவும் மனம் வருந்தினார்.

அதன்பிறகு புஜ்ஜிரெட்டிபாளெம் சிஐ சுரேஷ் பாபுவிடம் தன் வேதனையை வெளியிட்டார். இந்த மொத்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களின் அடாவடித்தனத்தை பார்த்தும் பார்க்காததுபோல் இருந்த அதிகாரிகளின் நிலை கவனிக்கத்தக்கது.

இதனால் சித்திபுரத்தில் நாமினேசன் தாக்கல் கெடு முடிந்துவிட்டதால் ஒரே ஒரு நாமினேஷன் மட்டுமே தாக்கல் ஆகியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories