தை அமாவாசை: ராமேஸ்வரம் உள்ளிட்ட தலங்களில் புனித நீராடிய ஹிந்துக்கள்!

courtallam-thai-amavasai
courtallam-thai-amavasai

இன்று தை அமாவாசை. இதனை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில்  ஏராளமான ஹிந்துக்கள் புனித நீராடினர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்  தை அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை 2:30 மணி அளவில் கோயில் நடை திறக்கப் பட்டது. அதிகாலை 3:30 முதல் 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 7:00  மணிக்கு கோயிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு நடைபெற்றது. தெய்வ மூர்த்தங்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். 

ராமருக்கு தீபாராதனை நடந்ததும் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டிய பக்தர்கள் திதி பூஜை, தர்ப்பணம்  செய்து அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர். 

இன்று பக்தர்கள்  வசதிக்காக பகல் முழுவதும் கோயில் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இரவு ராமரின் வெள்ளி ரத வீதி உலா நடைபெறுகிறது. கோவில் நடை இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

thai-amavasai-tharpanam
thai-amavasai-tharpanam

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அக்னிதீர்த்த கடல் மற்றும் 22 தீர்த்தங்களில் புனித நீராடுவதற்கும்  தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் ராமேஸ்வரம் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, கோயிலில் வழிபட இருந்த தடை விலக்கப்பட்டதால் ஏராளமானோர் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து  புனித நீராடி  தரிசனம் செய்து வருகின்றனர்.

வேதாரண்யம்… 

நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை கடலில் தை அமாவாசையை முன்னிட்டு, மக்கள் புனித நீராடி வருகின்றனர். 

வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் ஆண்டுதோறும் தை, ஆடி அமாவாசை, அர்தோதயம், மஹோதய அமாவாசை நாள்களில் புனித நீராடும் பக்தர்கள்,  முன்னோர் வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.  

தற்போது, கொரோனா கால தடைகள் விலக்கப் பட்டு, பக்தர்கள் தை அமாவாசை நாளில் சில கட்டுப்பாடுகளுடன் நீராட அனுமதிக்கப்பட்டதை அடுத்து, ஏராளமான ஹிந்துக்கள்  வேதாரண்யம் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். 

அன்பர்களின் வசதிக்காக, வேதாரண்யம், கோடியக்கரைக்கு சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன.  

thai-amavasai-tharpanam1
thai-amavasai-tharpanam1

இது போல் கடற்கரைத் தலமான திருச்செந்தூர், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள புனிதத் தலங்களான திருக்குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களிலும்  பக்தர்கள் இந்த முறை அனுமதிக்கப் பட்டுள்ளனர். இருப்பினும், வழக்கமான அளவில் பக்தர்கள் இன்றிக் காணப்  படுகிறது,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories