பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாயை திருடிய திருடர்கள்! துரத்தி பிடித்த கல்லூரி மாணவர்!

Karthik
Karthik

சென்னையில் 2 திருடர்களை துரத்தி துணிச்சலாக அவர்களை பிடித்து பணத்தை மீட்ட கல்லூரி மாணவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (19). இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அந்த தெருவில் ஒரு பெண் தன் குழந்தையை வைத்து கொண்டு அழுது கொண்டு நின்றுள்ளார். அவரின் 1 லட்சம் ரூபாய் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் பறித்து கொண்டு ஓடினர் என தெரியவந்துள்ளது.

அவர்களை தன்னுடைய பைக்கில் துரத்த ஆரம்பித்த கார்த்தி போக்குவரத்து நெரிசலால் பைக்கை போட்டு விட்டு ஓடி துரத்தியுள்ளார். சுமார் 30 மீ தூரம் ஓடிய திருடர்கள் கார்த்தி வருவதை கண்டு அவரை தாக்க முயன்றுள்ளனர். அதில் ஒருவர் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுக்க முயன்றுள்ளார். அதனை சாமர்த்தியமாக தடுத்த கார்த்தி அவர்களை தாக்கினார்.

Karthik-1-1
Karthik-1-1

சுற்றி இருந்த பொதுமக்கள் திருடர்களை பிடித்து பையை வாங்கி பெண்ணிடம் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து இரண்டு திருடர்களையும் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வந்த திருட்டு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

இதில் துணிச்சலாக செயல்பட்ட கார்த்திக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது. கல்லூரி மாணவனான கார்த்தி மாலை வேளையில் சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்தும் தன் பெற்றோருக்கு உதவி அந்த பணத்தில் படித்து வருகிறார். மேலும் மூன்று ஆண்டுகளாக பாக்ஸிங் கற்று வந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “திருடர்கள் ஆயுதம் வச்சிருப்பாங்கன்னு தெரியும் இருந்தாலும் அந்த பெண்ணோட அழுகதான் கண் முன்னாடி இருந்துச்சு. வருங்காலத்தில் நல்லா படித்து காவல்துறை அதிகாரி ஆவது தான் லட்சியம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கார்த்தியின் தாயார் கூறுகையில், “உயிரை பணையம் வச்சி குற்றவாளிகளை பிடிச்சு அவங்ககிட்ட இருந்து பணத்தை மீட்டுக் கொடுத்த என் பையன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. பாக்ஸிங் கிளாஸ் போறப்போ பயமா இருந்துச்சு, ஆனா எனக்கு இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு” என்று கூறி பெருமிதம் அடைந்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories