டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வீரர்களின் காதலுக்கு தடை! படுக்கையே படு பயங்கரம்!

Published:

tokyo olympics - 2026

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காதல் எதிர்ப்பு படுக்கைகள்.
வீரர்கள் ரொமான்ஸில் ஈடுபடுவதைத் தடுக்க சூப்பர் ஐடியா!

ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கும் உலக விளையாட்டுப் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் தயாராகி வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்த ஆண்டு ஒலிம்பிக் நிர்வாகம் தம் கடமையை நிறைவேற்றுவதில் கத்தி மீது நடப்பது போல் உணர்ந்துள்ளது.

இந்த நிலையில் நிர்வாகத்தினர் விளையாட்டு வீரர்களிடையே காதல் கட்டுப்பாடு விதிக்க ஒரு புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளனர்.

கொரோனா பின்னணியில் விளையாட உள்ள வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க இருக்கும் அறைகளில் வித்தியாசமான படுக்கைகளை அமைத்துள்ளனர். அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட படுக்கைகளை வீரர்களின் அறைகளில் வைத்துள்ளனர்.

இது வீரர்களின் காதல் விளையாட்டைத் தடுக்கும் என்பது அவர்களின் கருத்து. ஒலிம்பிக்கின் முடிவில் இவை மறுசுழற்சி செய்யப்பட்டு காகித தயாரிப்புகளாக மாற்றப்படும். வீரர்களிடையே உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

ஜூலை 24 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களுக்கு 18,000 படுக்கைகள் தேவை. பாரா ஒலிம்பிக்கிற்கு 8,000 படுக்கைகள் தேவை.

இந்த படுக்கைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. இது குறித்து நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை 200 கிலோ வரை எடையைத் தாங்கக் கூடியதாக உள்ளன என்று தெரிவிக்கும் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் பாலியல் எதிர்ப்பு படுக்கைகள் பற்றிய கதைகளை நிராகரிக்கின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img