December 5, 2025, 3:00 PM
27.9 C
Chennai

திருப்பதி உண்டியலில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!

thirupathi hundi - 2025

திருமலை திருப்பதி உண்டியலில் பாகிஸ்தான் கரன்சி களைக் கண்டு, அதிர்ச்சியும் வியப்புமடைந்தனர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்!

நித்திய கல்யாணம் பச்சைத் தோரணமாக விளங்கும் திருமலையில் ஆண்டின் 365 நாட்களும் ஸ்ரீவாரி சந்நிதிக்கு நம் நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். பாலாஜியை தரிசித்துச் செல்வார்கள்.

தங்கள் கோரிக்கைகளை தீர்த்துவைக்கும் ‘கோனேடிராய’னை தரிசிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். சுவாமியை தரிசித்து கொண்டபின் பக்தர்கள் பல வடிவங்களில் ஸ்ரீவாரி உண்டியல் மூலம் காணிக்கைகளை சமர்ப்பித்துக் கொள்வார்கள். வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் கரன்சிகளை சுவாமி உண்டியலில் போடுவது உண்டு.

பூமி மீது இருக்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் தம் தேசத்தின் தொடர்புடைய கரன்சியை தங்கள் வேண்டுதல் நிறைவேறும் வடிவில் செலுத்தி விடுவார்கள். இவ்வாறு தம்மிடமுள்ள வெளிநாட்டு கரன்சிகளை அங்குள்ள உண்டியலில் இட்டுச் செல்வார்கள்.

இவ்வாறு உலகத்தில் மொத்தம் 195 நாடுகள் இருக்கையில் ஸ்ரீவாரி உண்டியலில் 157 நாடுகளின் கரன்சி வந்து சேர்ந்துள்ளது. மலேசியா கரன்சி நோட்டுகள் மிக அதிகமாக 46% வந்துள்ளன. மலேசியா கரன்சிக்கு அடுத்தபடியாக அமெரிக்கா டாலர் உள்ளது. ஸ்ரீவாரி உண்டியலில் அமெரிக்கா டாலர் 16 சதவீதம் இருப்பதாக திதிதி தெரிவித்தது. ஆர்வமூட்டும் அம்சம் என்னவென்றால் ஸ்ரீவாரி உண்டியலில் வந்து சேர்ந்த வெளிநாட்டு கரன்சியில் பாகிஸ்தான் நோட்டுகள் கூட இருக்கிறது என்பது.

pakistan rupee - 2025

2019 – 20 ஆண்டில் வெளிநாட்டு கரன்சி வடிவத்தில் திருமலை பெருமாளுக்கு ரூபாய் 27.49 கோடி வருவாய் வந்தது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு கரன்சிகள் குறையும் வாய்ப்பு உள்ளது.

இப்படியிருக்கையில் ஸ்ரீவாரி உண்டியலுக்கு ஒரு பழைய நோட்டு சிக்கல் வந்து சேர்ந்தது. 2016இல் மோடி அரசாங்கம் பெரிய நோட்டுகளை ரத்து செய்தது. அப்போது சில பக்தர்கள் இந்த பெரிய நோட்டுகளை சுவாமி உண்டியலில் செலுத்திச் சென்றார்கள். இவற்றில் ஆயிரம் ரூ நோட்டுகள் 1.8 லட்சங்கள், 500 ரூ நோட்டுகள் 6.34 லட்சம் இருந்தன.

இது மொத்தம் 49. 70 கோடி ரூபாய்கள் வரை உள்ளது. அதாவது சுமார் 50 கோடி ரூபாய்கள். இது மிகப்பெரிய தொகை. இதனால் ஸ்ரீவாரி பெயரில் உள்ள பல தர்ம காரியங்கள் மூலம் பல சேவைகளை செய்யலாம்.

இந்த விஷயத்தைக் கணக்கில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் ஒய்வி சுப்பா ரெட்டி தலைமையில் திதிதி போர்டு உறுப்பினர்கள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வைக்குக் கொண்டு சென்றார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories