சமூக விரோதிகளின் கூடாரம் ஆனதா டெலிகிராம்.‌?

telegram
telegram

சமூக ஊடக செயலிகளில் ஒன்றாக டெலிகிராம் டார்வ் வெப்க்கு மாற்றாக குற்றச் செயல்களுக்கான தளமாக உருவெடுத்துவருவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

நாம் தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் இணையத்தை சர்ஃபேஸ் வெப் (Surface web) என்கிறோம். இவை வெளிப்படையானது. நாம் தேடும் விவரங்களை சில லிங்க்களை கிளிக் செய்வது மூலம் சில நொடிகளில் அறிந்துகொள்ளலாம்.

ஆனால், இதையும் தாண்டிய இருள் உலகம் ஒன்று இணையத்தில் உண்டு. இதனை டார்க் வெப் என்று அழைக்கிறோம். டீப் வெப் (Deep web) என்னும் சமுத்திரத்தின் ஒரு பகுதிதான் இந்த டார்க் வெப்.

டார்க் வெப் மூலம் ஒருவர் எவ்வித் அடையாளத்தையும் வெளிப்படுத்தாமல் தனக்கு தேவையானவற்றை செய்துகொள்ள முடியும், ஆயுத கடத்தல், தீவிரவாத செயல்கள், போதை மருந்து விற்பனை, குழந்தைகள் கடத்தல் என இந்த டார்க் வெப்பை (Dark web) பயன்படுத்தி பல சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

இதுவரை டார்க் வெப் மூலம் நடைபெற்ற இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் தற்போது டெலிகிராம் மூலம் நடைபெறத் தொடங்கியுள்ளதாக பகிர் தகவல் வெளியாகியுள்ளது.

திருடப்பட்ட தரவு மற்றும் ஹேக்கிங் கருவிகளை வாங்க, விற்க மற்றும் பகிர விரும்பும் இணைய குற்றவாளிகளின் மையமாக டெலிகிராம் உருவெடுத்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தி பைனான்சியல் டைம்ஸ் மற்றும் சைபரிண்ட் என்ற பிரபல சைபர் புலனாய்வு அமைப்பு இணைந்து நடத்திய புலன் விசாரணையில் இது தெரியவந்தது.

டார்க் வெப்பில் காணப்படும் பல்வேறு கள்ளச்சந்தைகள் டெலிகிராம் மூலமும் அணுகப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதோடு, சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவது 100 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

டெலிகிராம் (Telegram) செயலியின் என்கிரிப்டட் தகவல் அனுப்பும் முறை டார்க் வெப்பை விட பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதாக கூறப்படுகிறது.
டார்க் வெப்பை பயன்படுத்துவது என்பது அனைவருக்கும் எளிமையானது அல்ல.

ஆனால் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவது என்பது மிகவும் எளிமையானது. சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப்பில் (whatsapp) பிரைவெஸ்ஸி தொடர்பாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து பலரும் டெலிகிராம் செயலிக்கு மாறினர். இதைத் தொடர்ந்து அந்த செயலியின் பயன்பாடும் அதிகரித்தது.

புதிதாக ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை டெலிகிராம் மூலம் பழக்கம் பலரிடம் அதிகரித்து வருவதை நாம் காணமுடியும். ஒரு குழுவில் 2 லட்சம் பின் தொடர்பவர்கள் வரை இணைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 47 ஆயிரம் பின் தொடர்பவர்கள் உள்ள ஒரு டெலிகிராம் க்ரூப்பில் திருடப்பட்ட பாஸ்வேர்ட்கள், இ.மெயில் ஐ.டி. போன்றவை விற்கப்பட்டது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருடப்பட்ட தகவல்கள் குறிக்க ஹேக்கர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வார்த்தைகளின் பயன்பாடு என்பது கடந்த ஆண்டை இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல், டெலிகிராம் குழுவில் இணைவதற்கான லிங்க்கள் டார்க் வெப்பில் பகிரப்படுவதும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories