முதலாம் பராந்தக சோழனின் ஏரிக்கல்வெட்டு கண்டெடுப்பு!

Inscription - 2026

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நல்லூர் அருகே இராமசமுத்திரம் என்ற சிற்றூர் உள்ளது. இவ்வூரில் உள்ள ஒரு பாறையில் 7 வரிகள் கொண்ட முதலாம் பராந்தக சோழன் காலத்தில் எழுதப்பட்ட ஏரிக்கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கல்வெட்டு தொல்லியல் ஆர்வலர்களும் நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்றுப் பாட ஆசிரியருமான ஜெயவேல்., ஆங்கிலப் பாட ஆசிரியர் பாரதிராஜா ஆகியோர் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

இதுபற்றி அரியலூர் அரசுக்கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும் கல்வெட்டு, தொல்லியல் ஆராச்சியாளருமான முனைவர் இல தியாகராஜன் உதவியுடன் இதனைப்படித்த ஆசிரியர்கள் இதன் சிறப்பை தெரிவித்ததாவது, “மதிரை கொண்ட பரகேசரி பரகேரிவர்மன் என்ற பட்டம் கொண்ட முதலாம் பராந்தக சோழர் கி.பி.
907 முதல் 958 வரை மன்னர் இவருடைய 35 ஆம ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

இதன்படி இதன் காலம் கி.பி. 942 ஆகும். இன்றைக்கு 1078 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழமையுடைய இக்கல்வெட்டு சாத்தனூர் ஏரி பராமரிப்புக்காக காடிவாய் நாழி நெல் கொடுக்கப்ட்டதைக் கூறுகிறது.

சாத்தனூர் என்ற பெயர் ராமசமுத்திரம் ஊரின் பழைய பெயராக இருக்கலாம். சமுத்திரம் என்ற சொல் பெரிய ஏரியைக் குறிக்கும் சொல்லாக விஜயநகர காலத்தில் மிகுந்த அளவில் பயன்பாட்டில் இருந்தது. காடி என்ற சொல் தானிய மூட்டை அளவில் கலம் என்ற அளவுக்கு இணையாக தொண்டை நாட்டில் புழக்கத்தில் இருந்தது.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

ஒரு கலம் நெல் விளைந்தால் ஒரு நாழி நெல் வீதம் ஏரி பராமரிப்புக்கு வரியாக கொடுக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

இவ்வாறு நாழி நெல் வீதம் ஒதுக்கி ஆணையிட்டவர் வைதும்ப பாடி பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் குமரன் என்பவர் ஆவார். இவருடைய இந்த தர்மத்தை ரட்சித்தவர்களின் ஸ்ரீபாதம் என் தலைமேல் என்று இத்தர்மத்தை இறக்குபவர்கள் கங்கையிடை, குமரியிடை, ஏழுநூற்றுகாதம் இடையே செய்தவர்கள் பாவத்தில் போகக்கடவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.

சாத்தனூர் என்ற பெயர் காலப்போக்கில் மருவி இராம சமுத்திரம் என அழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு அருகே மிகப்பெரிய பாசன ஏரி உள்ளது. அதற்கான உத்தரவை, அந்த பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் குமரன் என்பவர் ஆணையிட்டுள்ள தகவல் கல்வெட்டில் உள்ளது.

மேலும், இந்த தர்மத்தை செய்யாதவர்கள் பாவத்தில் போவார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.‌ வரலாற்றுச்சிறப்புடைய இக்கல்வெட்டை கண்டறிந்துள்ளன.

கல்வெட்டு ஆய்வு ஆர்வலர்களான ஜெயவேலிடம் கேட்டறிந்தபோது, “ஏரிக்கல்வெட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அல்ல இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

அதில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மத்தவிலாசம் நாடகக் காட்சிகளும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. பெரியபுராணத்திலிருந்து சண்டேசுர நாயனார் புராணம், மதுரா தூண் கல்வெட்டு, தருமபுரி ஏரிக்கல்வெட்டு, வே.மகாதேவனின் “சிவபாதசேகரன் ராஜராஜசோழனின் தஞ்சைக் கல்வெட்டில் திருப்பதிகம் பாடியோர்,”கட்டுரை, “சிவனின் திருவடிவங்கள்,” டி .கணேசனின் “சிவாகமங்கள்; சுவடிகளும் பாதிப்பும்,” கட்டுரை, மற்றும் ஏராளமான இலகுலீசர் புகைப்படங்களின் பின்னிணைப்பு இவை எல்லாம் இந்த நூல் குறித்து விவாதிக்கும் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விவாதங்களை முன் வைக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் கல்வெட்டு ஆய்வு ஆர்வலர்களான ஜெயவேல், பாரதிராஜா ஆகியோரை ஊர்மக்களும் ஆசிரியர்களும் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories