முதலாம் பராந்தக சோழனின் ஏரிக்கல்வெட்டு கண்டெடுப்பு!

Inscription - 2026

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நல்லூர் அருகே இராமசமுத்திரம் என்ற சிற்றூர் உள்ளது. இவ்வூரில் உள்ள ஒரு பாறையில் 7 வரிகள் கொண்ட முதலாம் பராந்தக சோழன் காலத்தில் எழுதப்பட்ட ஏரிக்கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கல்வெட்டு தொல்லியல் ஆர்வலர்களும் நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்றுப் பாட ஆசிரியருமான ஜெயவேல்., ஆங்கிலப் பாட ஆசிரியர் பாரதிராஜா ஆகியோர் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

இதுபற்றி அரியலூர் அரசுக்கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும் கல்வெட்டு, தொல்லியல் ஆராச்சியாளருமான முனைவர் இல தியாகராஜன் உதவியுடன் இதனைப்படித்த ஆசிரியர்கள் இதன் சிறப்பை தெரிவித்ததாவது, “மதிரை கொண்ட பரகேசரி பரகேரிவர்மன் என்ற பட்டம் கொண்ட முதலாம் பராந்தக சோழர் கி.பி.
907 முதல் 958 வரை மன்னர் இவருடைய 35 ஆம ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

இதன்படி இதன் காலம் கி.பி. 942 ஆகும். இன்றைக்கு 1078 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழமையுடைய இக்கல்வெட்டு சாத்தனூர் ஏரி பராமரிப்புக்காக காடிவாய் நாழி நெல் கொடுக்கப்ட்டதைக் கூறுகிறது.

சாத்தனூர் என்ற பெயர் ராமசமுத்திரம் ஊரின் பழைய பெயராக இருக்கலாம். சமுத்திரம் என்ற சொல் பெரிய ஏரியைக் குறிக்கும் சொல்லாக விஜயநகர காலத்தில் மிகுந்த அளவில் பயன்பாட்டில் இருந்தது. காடி என்ற சொல் தானிய மூட்டை அளவில் கலம் என்ற அளவுக்கு இணையாக தொண்டை நாட்டில் புழக்கத்தில் இருந்தது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

ஒரு கலம் நெல் விளைந்தால் ஒரு நாழி நெல் வீதம் ஏரி பராமரிப்புக்கு வரியாக கொடுக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

இவ்வாறு நாழி நெல் வீதம் ஒதுக்கி ஆணையிட்டவர் வைதும்ப பாடி பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் குமரன் என்பவர் ஆவார். இவருடைய இந்த தர்மத்தை ரட்சித்தவர்களின் ஸ்ரீபாதம் என் தலைமேல் என்று இத்தர்மத்தை இறக்குபவர்கள் கங்கையிடை, குமரியிடை, ஏழுநூற்றுகாதம் இடையே செய்தவர்கள் பாவத்தில் போகக்கடவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.

சாத்தனூர் என்ற பெயர் காலப்போக்கில் மருவி இராம சமுத்திரம் என அழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு அருகே மிகப்பெரிய பாசன ஏரி உள்ளது. அதற்கான உத்தரவை, அந்த பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் குமரன் என்பவர் ஆணையிட்டுள்ள தகவல் கல்வெட்டில் உள்ளது.

மேலும், இந்த தர்மத்தை செய்யாதவர்கள் பாவத்தில் போவார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.‌ வரலாற்றுச்சிறப்புடைய இக்கல்வெட்டை கண்டறிந்துள்ளன.

கல்வெட்டு ஆய்வு ஆர்வலர்களான ஜெயவேலிடம் கேட்டறிந்தபோது, “ஏரிக்கல்வெட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அல்ல இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அதில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மத்தவிலாசம் நாடகக் காட்சிகளும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. பெரியபுராணத்திலிருந்து சண்டேசுர நாயனார் புராணம், மதுரா தூண் கல்வெட்டு, தருமபுரி ஏரிக்கல்வெட்டு, வே.மகாதேவனின் “சிவபாதசேகரன் ராஜராஜசோழனின் தஞ்சைக் கல்வெட்டில் திருப்பதிகம் பாடியோர்,”கட்டுரை, “சிவனின் திருவடிவங்கள்,” டி .கணேசனின் “சிவாகமங்கள்; சுவடிகளும் பாதிப்பும்,” கட்டுரை, மற்றும் ஏராளமான இலகுலீசர் புகைப்படங்களின் பின்னிணைப்பு இவை எல்லாம் இந்த நூல் குறித்து விவாதிக்கும் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விவாதங்களை முன் வைக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் கல்வெட்டு ஆய்வு ஆர்வலர்களான ஜெயவேல், பாரதிராஜா ஆகியோரை ஊர்மக்களும் ஆசிரியர்களும் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories