‘ஆன்மிக ஓட்டு வேடதாரி’ இல்லை எனில், துர்கா ஸ்டாலின் ’இதை’ச் செய்வாரா?: விஎச்பி கேள்வி!

hrnce office e1561694728558
hrnce office

ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் தடை ஏன்? என்று, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் கேள்வி எழுப்பியுள்ளார்!

ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நாட்களில் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற விஷயங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆன்மீகவாதியான துர்கா ஸ்டாலின் தனது கணவர் முதல்வர் ஸ்டாலினுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் கூறினார்.

நெல்லையில் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது … தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரானா காரணமாக ஊரடங்குகள் கட்டுப்பாடுகள் தளர்வுகள் அவ்வபோது அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மே 10ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன,

கடந்த 20 நாட்களுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ஆடி மாதம் என்பதால் கோயிலுக்கு பெண்கள் பக்தர்கள் செல்வது வழக்கம். நதியை பெண் தெய்வமாக போற்றி ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு நாளாக நதிக்கு பழங்கள் பூக்கள் நைவேத்தியங்களை சமர்ப்பித்து மீன்களுக்கு உணவு வழங்கி அதோடு மக்களும் ஆற்றங்கரையில் அமர்ந்து உணவு உண்பர்.

அது போல் ஆடி செவ்வாய் ஆடி வெள்ளி ஆடி பெருக்கு ஆடி பூரம் நாட்களில் கோவில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தி வழிபாடு செய்வர். ஆனால் தமிழக அரசு ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களை சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளது.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..
durga stalin athivarathar 2
durga stalin athivarathar 2

ஆடிப்பெருக்கை பொருத்தவரையில் நதி கர்ப்பகாலத்தில் இருப்பதாகவும் அதற்குரிய சடங்குகளை செய்ய வேண்டியது ஹிந்துக்களின் ஐதீகம். மேலும் கோயில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்துவது இந்து மதத்தினரின் நம்பிக்கை மற்றும் மரபு. நீத்தார் கடன் தவறாமல் செய்ய வேண்டும் என்பது திருவள்ளுவர் கூறியுள்ளார்.

ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்வதும் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு இவை அனைத்தும் தனிமனித இடைவெளியுடன் செய்யப்படும் காரியம் தான். கொரோனா குறித்த விழிப்புணர்வு உள்ளதால் மக்களும் பாதுகாப்பாக தான் வெளியே சென்று வருகின்றனர். வழிபாட்டு தளங்களிலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றியே வழிபாடு செய்து வந்தனர்.

மற்ற மதத்தில் அனைத்து வழிபாடுகளும் எவ்வித தடையுமின்றி நடந்து வருவதை மக்கள் அறிவர். இந்நிலையில் ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு ஆடி அம்மாவாசை வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதி மறுப்பு போன்றவை இந்து மக்களின் மனதை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் அனைத்து மக்களும் ஓட்டு போட்டு தான் திமுக ஆட்சியில் அமர்ந்து உள்ளது என்பதை ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இந்நிலையில் இந்து மக்கள் பண்டிகை நடைபெறும் சமயங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகம் விதிக்கப்படுவதாக மக்கள் எண்ணுகின்றனர். ஸ்டாலின் மனைவியான திருமதி துர்க்கா அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செய்து கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றார். ஆனால் அவரது கணவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இந்து சமுதாய பண்டிகையின்போது அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாக மக்கள் எண்ணுகின்றனர் கோபத்தில் உள்ளனர்,

எனவே இந்த விஷயத்தில் ஸ்டாலினுக்கு தக்க அறிவுரையை திருமதி துர்கா ஸ்டாலின் வழங்கி வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இந்துமத பண்டிகைகளை அரசின் கட்டுப்பாடுகளுடன் நடத்த உரிய ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories